Latest News

December 02, 2013

ஜனாதிபதி குற்றவாளி இல்லையெனில் சர்­வ­தேச விசா­ர­ணை­களை ஏற்­றுக்­கொண்­டி­ருப்பார்
by admin - 0

ஜனா­தி­பதி குற்­ற­வாளி இல்­லை­யெனில் சர்­வ­தேச விசா­ர­ணை­களை ஏற்­றுக்­கொண்­டி­ருப்பார். சித்­தி­ர­வ­தை­க­ளுடன் கூடிய கொடிய யுத்­தத்­தி­னையே ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக் ஷ மேற்­கொண்டார் என எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு இயக்கம் குற்றம் சுமத்­தி­யுள்­ளது.
அன்று பிர­பா­க­ரனும் சரி இன்று விக்­கி­னேஸ்­வ­ரனும் சரி தமது உரி­மை­க­ளுக்­கா­கவே போரா­டு­கின்­றனர். இன்று அர­சாங்­கத்தின் அடக்கு முறையில் சிறு­பான்­மை­யினர் மட்­டு­மல்ல பெரும்­பான்மை மக்­களும் உட்­பட்டு விட்­டனர் எனவும் அவ் இயக்­கத்­தினர் தெரி­வித்­தனர்.
தேசிய ஊழியர் சங்­கத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் இயக்­கத்­தினர் மேற்­போன்று தெரி­வித்­தனர்.
இதில் கலந்­து­கொண்ட நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன கருத்துத் தெரி­விக்­கையில்,
இலங்­கையில் இடம்­பெற்ற இறு­திக்­கட்ட யுத்­தத்தில் யுத்த குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளது என்­ப­தனை அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே காட்டிக் கொடுக்­கின்­றது. அர­சாங்­கத்­தி­னாலும் இரா­ணு­வத்­தி­னாலும் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்றால் ஜனா­தி­பதி சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு ஒப்புக் கொண்­டி­ருப்பார்.
வடக்கில் இடம்­பெற்ற யுத்­தத்தில் பொது­மக்கள் மீது காட்டு மிராண்­டித்­த­ன­மான சித்­தி­ர­வ­தைகள் மற்றும் இனப் படு­கொலை இடம்­பெற்­றுள்­ளது என்­பதே உண்மை. பேசித் தீர்த்­தி­ருக்க வேண்­டிய விட­யத்­தினை ஜனா­தி­பதி யுத்­தத்தின் மூலம் முடித்து வீரப்­பட்டம் பெற்­றுள்ளார்.
உண்­மை­யி­லேயே இவ் யுத்­தத்தில் இலங்கை இரா­ணு­வத்தை விடவும் இந்­தியா, அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா மற்றும் பாகிஸ்தான் இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யோடே இந்த யுத்தம் முறி­ய­டிக்­கப்­பட்­டது. இர­சா­யன ஆயு­தங்­களும் தொழில் நுட்ப கரு­வி­க­ளையும் கொண்டு நேர்­மை­யற்ற முறை­யி­லான யுத்­தத்­தி­னையே இலங்கை இரா­ணுவம் செய்து முடித்­தது. இவற்­றிற்கு ஜனா­தி­பதி வெகு விரைவில் பதில் சொல்ல வேண்டி வரும்.
மேலும் இன்று வடக்கில் இரா­ணுவ அட்­டூ­ழி­யங்கள் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றன. யுத்தம் முடி­வ­டைந்து நான்கு வரு­டங்­க­ளா­கியும் இன்று ஆளு­நரின் அதி­கா­ரங்­களும் இரா­ணுவ அடக்கு முறை­க­ளுமே காணப்­ப­டு­கின்­றன.
பிர­பா­கரன் அன்று வடக்கு மக்­களின் உரி­மை­க­ளுக்­காகப் போராடி அவர்­களை விடு­தலை அடையச் செய்­யவே முயற்­சித்தார். அதே சேவை­யி­னையே இன்று விக்கி­னேஸ்­வ­ரனும் செய்து வரு­கின்றார். இவற்­றினை மறைக்க முடி­யாது. இலங்­கையில் இடம்­பெறும் அனைத்­தையும் சர்­வ­தேச நாடுகள் அவ­தா­னித்துக் கொண்டே இருக்­கின்­றன எனவும் அவர் தெரி­வித்தார்.
இது தொடர்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கரு­ணா­சேன கொடி­து­வக்கு தெரி­விக்­கையில்,
இலங்­கையின் இல­வசக் கல்வி இன்று பணத்­துக்­காக விற்­கப்­பட்டு விட்­டது. பொரு­ளா­தாரம், சுகா­தாரம், விளை­யாட்டு என அனைத்­திலும் பணம் கொள்­ளை­ய­டிக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் இன்று மாண­வர்­களின் இல­வசக் கல்­வி­யிலும் கொள்­ளை­ய­டிக்க ஆரம்­பித்து விட்­டது. இன்று அரச பாட­சா­லை­களை மூடி­விட்டு தனியார் பாட­சா­லை­களும் தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்­களும் ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­டன. பணக்­கா­ரர்­க­ளுக்கும் கோடீஸ்­வரர்­க­ளுக்கும் மட்­டுமே கல்வி என்ற நிலைமை இன்று உரு­வாகி விட்­டது.
2015 ஆம் ஆண்டில் தரம் ஐந்து மாண­வர்­களின் புலமைப் பரிசில் பரீட்­சை­யி­னையும் இல்­லா­தாக்கி விடு­வார்கள் என்பது உறுதியே. அதேபோல் இன்று தனியார் பல்கலைக்கழகங்களில் ஒரு மாணவர் 60 லட்சம் செலவழித்தே படிக்க வேண்டியுள்ளது.
கல்விப் பிரச்சினையே வடக்கில் யுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதே நிலைமை இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் இடம் பெற முன்னர் இந்த ஆட்சியினை மாற்றி மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments