Latest News

December 02, 2013

இலங்கையின் பதிலுக்கு காத்திருக்கும் பிரிட்டன் பாராளுமன்றத்தில் வில்லியம் ஹேக் தகவல்
by admin - 0

யுத்­தத்தின் போது பாலியல் வன்­முறை இடம்­பெ­று­வ­தனைத் தடுக்கும் வகை­யி­லான தமது பூர்­வாங்க நட­வ­டிக்­கைக்கு இலங்கை ஆத­ரவு வழங்­குமா என்­பது குறித்து அந்­நாட்டின் பதிலை தாம் ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக பிரித்­தா­னியா தெரி­வித்­துள்­ளது. பிரித்­தா­னியப் பாரா­ளு­மன்­றத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வரின் கேள்­விக்கு வெளி­நாட்டு மற்றும் பொது­ந­ல­வாய விவ­கா­ரங்­க­ளுக்­கான இரா­ஜாங்க செய­லாளர் வில்­லியம் ஹேக் பதி­ல­ளிக்­கையில், இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சருடன் தங்களின் பிரத்­தி­யே­க­மான பூர்­வாங்க செயற்­பாடு குறித்து கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும், இதற்கு அவர்கள் ஆத­ர­வ­ளிப்­பார்­களா என்­பது குறித்த அவர்­களின் பதி­லுக்­காக தாங்கள் காத்­தி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.
இலங்கை மீதான அவரின் முழு­மை­யான அறிக்கை பின்­வ­ரு­மாறு:
இலங்­கையில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் நாம் பங்­கேற்­காது விட்­டி­ருந்தால் எம்மால் இலங்கை விவ­காரம் குறித்த எமது தரப்­பி­லான நியாயத்தை எடுத்­து­ரைக்க முடி­யாமல் போயி­ருந்­தி­ருக்­கு­மென்­பதை நான் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.
இலங்­கையில் நான் தங்­கி­யி­ருந்த போது இலங்கை ஊட­கங்­களில் தொலைக்­காட்சி மற்றும் பத்­தி­ரி­கை­களில், பரந்­த­ளவில் இடம்­பி­டித்­தி­ருந்த யுத்­தத்தில் பாலியல் வன்­மு­றை­யைத்­த­டுத்தல் குறித்த பகி­ரங்க உரை­யொன்­றையும் நான் ஆற்­றி­யி­ருந்தேன். இலங்­கையில் உள்ள பெரும்­பான்­மை­யான மக்­களின் கவ­னத்தை நாம் ஈர்த்­துள்­ளோ­மென்றே நான் கரு­து­கின்றேன்.
இந்­த­வி­டயம் குறித்து நான் இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சருடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­த­துடன், இதற்கு அவர்கள் ஆத­ர­வ­ளிப்­பார்­களா என்­பது குறித்த அவர்­களின் பதிலை எதிர்­பார்த்த வண்­ண­முள்ளோம். இது குறித்து தீர்­மா­னிப்­ப­தென்­பது இலங்கை அர­சுக்கு கடி­ன­மான காரி­ய­மாக இருக்­கு­மென்­ப­தான அம்­சங்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றன. எங்­களால் அதனை மட்­டுமே செய்ய முடியும்.
எவ்­வா­றா­யினும், கெள­ரவ உறுப்­பி­னரின் ஆலோ­ச­னையை நாம் பின்­பற்­றி­யி­ருந்தால் அதனை எம்மால் செய்ய முடி­யாமல் போயி­ருந்­தி­ருக்கும். இலங்கை விவ­காரம் குறித்து பேச்­ச­ளவில் எம்மால் செய்ய முடி­யாமல் போயி­ருந்­ததை அங்கு விஜயம் செய்­தி­ருந்தன் மூலம் நாம் சாதித்­துள்ளோம். நிலை­மையை நான் தவ­றான விதத்தில் எடுத்­து­ரைப்­ப­தாக கெள­ரவ உறுப்­பினர் கூறு­கின்றார். ஆயினும், இலங்­கைக்கு நாம் விஜயம் மேற்­கொள்ளக் கூடா­தென எதிர்க்­கட்­சி­யினர் கூறு­வார்­க­ளென நாம் புரிந்­து­வைத்­தி­ருந்தோம்.
நாம் இலங்­கைக்கு போயி­ருந்­தி­ருக்­கா­விடின், எம்மால் பொது­ந­ல­வாயம் குறித்த அதி­கார பூர்­வ­மான அறி­விப்­பையோ, பாலியல் வன்­முறை குறித்து இலங்கை அர­சிடம் கேள்­வி­யை­ழுப்பும் உரை­யொன்­றையோ, இலங்கை ஊட­கங்­களை நேரில் சந்­தித்து உரை­யாட ேவா எம்மால் முடி­யாமல் போயி­ருந்­தி­ருக்கும். எனவே, எதி­ரணி உறுப்­பி­னர்­களால் தங்கள் தலைகளை ஆட்டவோ அல்லது அவற்றை மணலில் புதைக்கவோ முடியும். ஆயினும், விளைவோ ஒரே மாதிரியானதுதான். இலங்கையில் இந்த விவகாரத்தைப் பெரிய அளவில் தட்டிக் கேட்பதில் நாம் சரியானதையே செய்துள்ளோம் என்பது எனக்கு ஆறுதல் அளிக்கின்றதென்பதே அதற்கான விடையாகும் என அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments