நாட்டின் மத்திய மாகாண சபையில் இந்துக் கலாசாரம் மற்றும் தமிழ் கல்வி அமைச்சினை இல்லாமல் செய்தது போன்று மலையகத்தில் இந்து ஆலயங்களையும் அழித்தொழிக்கும் திட்டம் அரங்கேற்றப்படுகின்றது என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னனியின் பிரதிப் பொதுச் செயலாளரும், மலையக சமூக அபிவிருத்திக் கழகத் தலைவருமான இரா.சலோபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதும் சிலைகள் உடைக்கப்படுவதும் சர்வசாதாரணமாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உடுவரை தோட்ட ஸ்ரீ காளியம்மன் ஆலயம் தாக்கப்பட்டு, அங்குள்ள அம்மன் சிலையும் மிருகத்தனமான முறையில் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இதுபோன்ற நிலை தொடர்ந்து கொண்டிருப்பதால் இதற்கு பின்னால் பெரும் பலம் பொருந்திய பின்னணி இருப்பதாகவே தோன்றுகின்றது. பெருந்தோட்டப் பகுதிகளில், இந்து ஆலயங்களை அழித்தொழிக்கும் திட்டமாகவே ஆலய உடைப்பு விவகாரங்களை கருத வேண்டியுள்ளது. இது விடயத்தில் மலையகத் தலைமைகள் நீண்ட மெளனத்தை சாதித்துக்கொண்டிருக்கின்றன. இந் நிலையும் எமது சமூகத்திற்கு பெரும் ஆதங்கத்தையும், பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெருந்தோட்ட மக்கள் பசி, பட்டினியுடன் இருந்த போதிலும் ஏழ்மையின் மத்தியிலும் தமது உயிரிலும் மேலாக இந்து ஆலயங்களையும் தெய்வங்களையும் போற்றி பூஜித்து வருகின்றனர். இத்தகைய ஆலயங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதை அம்மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ஆகையினால் இந்து ஆலயங்களை சேதப்படுத்தல் மற்றும் சிலை உடைப்பு விவகாரம், வடக்கு, கிழக்கு பிரச்சினை போன்று, சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய நிலை உருவாகினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை என்றார்.
அவர் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதும் சிலைகள் உடைக்கப்படுவதும் சர்வசாதாரணமாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உடுவரை தோட்ட ஸ்ரீ காளியம்மன் ஆலயம் தாக்கப்பட்டு, அங்குள்ள அம்மன் சிலையும் மிருகத்தனமான முறையில் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இதுபோன்ற நிலை தொடர்ந்து கொண்டிருப்பதால் இதற்கு பின்னால் பெரும் பலம் பொருந்திய பின்னணி இருப்பதாகவே தோன்றுகின்றது. பெருந்தோட்டப் பகுதிகளில், இந்து ஆலயங்களை அழித்தொழிக்கும் திட்டமாகவே ஆலய உடைப்பு விவகாரங்களை கருத வேண்டியுள்ளது. இது விடயத்தில் மலையகத் தலைமைகள் நீண்ட மெளனத்தை சாதித்துக்கொண்டிருக்கின்றன. இந் நிலையும் எமது சமூகத்திற்கு பெரும் ஆதங்கத்தையும், பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெருந்தோட்ட மக்கள் பசி, பட்டினியுடன் இருந்த போதிலும் ஏழ்மையின் மத்தியிலும் தமது உயிரிலும் மேலாக இந்து ஆலயங்களையும் தெய்வங்களையும் போற்றி பூஜித்து வருகின்றனர். இத்தகைய ஆலயங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதை அம்மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ஆகையினால் இந்து ஆலயங்களை சேதப்படுத்தல் மற்றும் சிலை உடைப்பு விவகாரம், வடக்கு, கிழக்கு பிரச்சினை போன்று, சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய நிலை உருவாகினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை என்றார்.
No comments
Post a Comment