Latest News

December 16, 2013

இந்துக் கோவில்கள்,தெய்வ சிலைகள் சேதப்படுத்தும் சம்பவம் தொடர்ந்தால் போராட்டம்
by admin - 0

நாட்டில் இந்துக் கோயில்­க­ளையும் தெய்வச் சிலை­க­ளையும் சேதப்­ப­டுத்தும் இனி­யொரு சம்­பவம் இடம்­பெ­று­மானால் இந்து மக்­களை ஓர­ணியில் திரட்டி நாடு தழு­விய ரீதியில் புரட்­சி­க­ர­மான போராட்­டத்தை முன்­னெ­டுப்போம். இதற்கு ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலை­மைத்­து­வத்தை வழங்கும் என அதன் உதவிப் பொதுச் செய­லாளர் சண். குக­வ­ரதன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். 
அத்­தோடு, இந்­துக்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் இந்­தி­யாவின் பார­திய ஜனதாக் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் சர்­வ­தேச இந்து அமைப்­புக்­க­ளிடம் கொண்டு சென்று சர்­வ­தேச மயப்­ப­டுத்­தவும் பின் நிற்க மாட்டோம் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். 
இது­தொ­டர்பில், கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­னரும், திட்­ட­மிடல் அபி­வி­ருத்தி மற்றும் சுகா­தாரம் பொது­வ­ச­திகள் தொடர்­பான நிலை­யியற் குழுவின் தலை­வ­ரு­மான சண். குக­வ­ரதன் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, 
கொழும்பில் பூமாரி அம்மன் கோயில் இடிக்­கப்­பட்­டது, தம்­புள்ளை பத்­தி­ர­காளி அம்மன் கோயில், யாழ்ப்­பா­ணத்தில் விநா­யகர், அம்மன் என மூன்று கோயில்­களும் கிழக்­கிலும் கோயில் சிலைகள், சொத்­துக்கள் திரு­டப்­பட்­டன. இவ்­வாறு கோயில் உடைப்பு கலா­சா­ர­மாக மாறி இறு­தி­யாக ஹாலி – எலவில் காளி­யம்மன் சிலை உடைக்­கப்­பட்­டுள்­ளது. 
பொறு­மைக்கும் எல்லை உண்டு. தான் சார்ந்த சமூ­கத்­துக்கு அழிவு ஏற்­ப­டு­வதை எந்­த­வொரு மதக் குழு­மமும் பார்த்துக் கொண்­டி­ருக்­காது. 
இலங்­கைக்கு பௌத்த மதம் வரு­வ­தற்கு முன்பு, சிவ வழி­பா­டுகள் தான் காணப்­பட்­டது. இரா­வண மன்னன் ஒரு சிவ பக்தன். இதன் கார­ண­மாக இலங்­கைக்கு 'சிவ­பூமி' என்ற பெயர் வந்­தது. புராணக் கதை­களில் இலங்­கையின் சிவ வழி­பாடு தொடர்பில் எடுத்­தி­யம்­பப்­பட்­டுள்­ளன. திரு­கோ­ண­ம­லைக்கு வந்த அகஷ்­தி­யர்கள் பஞ்ச ஈஸ்­வ­ரங்­களில் வழி­பாடு செய்­துள்­ளனர். 
திருக்­கோ­ணேஸ்­வரம், திருக்­கே­தீஸ்­வரம் நாயன்­மார்­க­ளினால் பாடல் பெற்ற திருத்­த­லங்­க­ளாகும். சிவ­பு­ராணம், கந்­த­பு­ராணம், மகா­பா­ரதம், இரா­மா­யணம் போன்ற புராணக் கதை­க­ளோடும் இலங்­கைக்கு தொடர்­பு­பட்­டுள்­ளது. 
உதா­ர­ண­மாக, இரா­வணன் சீதையைத் தங்க வைத்த இடம் இன்னும் 'சீதா எலிய' என்று அழைக்­கப்­ப­டு­கின்­றது. அதே போன்று இரா­வண எல்ல என்ற பெயர்­களும் உண்டு. 
வர­லாற்­றுக்கும் முற்­பட்ட காலத்தில் இங்­கி­ருந்த மக்கள் நாகத்­தையும் மரங்­க­ளை­யுமே வழி­பட்டு வந்­துள்­ளனர். இதற்குச் சிறந்த உதா­ர­ண­மாக இன்றும் நைனா­தீவு, திருக்­கே­தீஸ்­வரம் சான்று பகர்­கின்­றது. 
இது மகா­வம்­சத்­திலும் பதி­யப்­பட்­டுள்­ளது. முன்­னேச்­ச­ரமும் பாடல் பெற்ற திருத்­தலம் ஆகும். மட்­டு­மன்றி விநா­யகர், இராமர் தெய்வ வழி­பாடு செய்­தது, இரா­வ­ணனை வதம் செய்த இரா­­மனின் பிர­ம­ஹஷ்தி தோஷம் நீங்­கி­யதும் முன்­னேச்­ச­ரத்­திலே ஆகும். 
இவை­யெல்லாம் வர­லாற்றுக் காலத்­துக்கு முன்­பா­ன­தாகும். வர­லாற்றுக் காலத்தை எடுத்துக் கொள்­ளு­வோ­மானால், பண்­டு­கா­யப மன்னன் அநு­ரா­த­புர இராட்­சி­யத்தில் சிவ­னுக்குக் கோயில்­களை அமைத்தான். எனவே, பண்­டு­கா­பய மன்னன் (மூத்த சிவன்) என அழைப்­பட்டார். 
சோழ மன்­னர்கள் இந்த நாட்டை ஆண்ட காலத்­திலும் சிவன், விஷ்ணு கோயில்கள் கட்­டப்­பட்ட வர­லாறு உள்­ளது. முன்­னேச்­ச­ரத்தை நான்காம் பராக்­கி­ர­ம­பாகு, ஐந்தாம் பராக்­கி­ர­ம­பாகு அர­சர்கள் பரா­ம­ரித்­தார்கள். கோயில்­க­ளுக்­காக வயல்­களை வழங்­கி­னார்கள். 
இது இலங்­கையின் இந்து மதத்­தின் புராண கால வர­லாற்றுக் காலத் தொடர்­புகள் ஆகும். இன்னும் பௌத்த விகா­ரை­களில் அம்மன், முருகன், விநா­யகர் என இந்துக் கட­வுள்­க­ளுக்கு தனி­யான கோயில்கள் கட்­டப்­பட்டு சிங்­கள மக்கள் வழி­ப­டு­கின்­றார்கள்.

நவ­க­மு­வவில் (பத்­தினி) தோவா­லயம் அதா­வது கண்­ண­கிக்­கென்று தனித் தேவா­லயம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அது மட்­டுமா? பௌத்­தர்­களின் உய­ரிய புனி­தஸ்­த­ல­மான கண்டித் தலதா மாளி­கை­யிலும் விஷ்ணு, நாக கோயில்கள் உள்­ளன. இவ்­வாறு புராண காலம், வரலாற்றுக் காலம், கற்காலம் என இந்து மதத்திற்கு என இலங்கையில் ஒரு வரலாறு உள்ளது. இந்தப் பிணைப்பு தற்போது இடம்பெறும் கோயில்கள், சிலைகள் உடைப்பால் விரிசல் அடைந்துவிடக்கூடாது.  இந்துக் கடவுள்களின் சாபத்துக்கு ஆளாவது என்பது ஒரு மனிதனின் கடைசிக் காலம் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் என சண். குகவரதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments