Latest News

December 16, 2013

எமது விடு­தலைப் பய­ணத்தில் மண்­டே­லாவை வழி­காட்­டி­யாக கருத வேண்­டி­யது கட்­டா­ய­மாகும்
by admin - 0

எமது மக்­களின் விடு­த­லையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஒரு ஜன­நா­யக ரீதி­யான போராட்­டத்­துக்கும் ஆயுத ரீதி­யான போராட்­டத்­துக்கும் தலை­மை­தாங்கி வழி­ந­டத்­திய மறைந்த நெல்சன் மண்­டே­லாவை வழி­காட்­டி­யாக ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தாகும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மாவை சேனா­தி­ராசா தெரி­வித்தார்.
தென்­னா­பி­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­ப­தி­யான மறைந்த நெல்சன் மண்­டே­லாவின் அஞ்­சலி நிகழ்வு நேற்று இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் யாழ்.தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­ற­போது அந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
மகாத்மா காந்தி இந்­தி­யாவின் தலைவர். அவர் சர்­வ­தேச ரீதி­யாக எவ்­வாறு புகழ்­பெற்று விளங்­கு­கி­றாரோ அதோ­போன்று புகழ்­பெற்ற ஒரு­வ­ராக மறைந்த நெல்சன் மண்­டோ­லாவும் திகழ்­கிறார்.
இதேபோல் எமது மக்­களின் விடு­த­லைக்­கா­கவும் இவ­ரு­டைய பாதையைப் பின்­பற்றி இவரை வழி­காட்­டி­யாக கொள்­ள­வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தாகும். ஏனெனில் சர்­வ­தேச ரீதியில் ஒரு ஜன­நா­யக ரீதி­யான போராட்­டத்­துக்கும் ஆயுதப் போராட்­டத்­துக்கும் தலைமை தாங்­கி­யவர் என்ற வகையில் நெல்சன் மண்­டேலா உலக அங்­கீ­காரம் பெற்ற ஒப்­பற்ற தலை­வ­ராகத் திகழ்­கின்றார்.
51 நாடு­க­ளுடன் அமைக்­கப்­பட்ட ஐக்­கிய நாடுகள் சபை­யா­னது இன்று 191 சுதந்­தி­ரம்­பெற்ற நாடு­களை உள்­ள­டக்­கிய அமைப்­பாகக் காணப்­ப­டு­கி­றது. இந்த அமைப்­பினால் நெல்சன் மண்­டே­லா­வுக்கு செங்­கம்­பள வர­வேற்பும் அளிக்­கப்­பட்­டது.
நெல்சன் மண்­டேலா, எமது மக்­களின் இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் தனது அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் எமக்கும் அர­சிற்கும் இடையில் ஒரு அரங்­காக இருந்து பேச்­சு­வார்த்­தைக்கு உத­வு­வ­தற்குத் தயார் என அறி­வித்தல் விடுத்­தி­ருந்தார். இப்­ப­டி­யா­ன­தொரு சந்­தர்ப்­பத்தில் நாங்­களும் எமது மண்ணின் விடு­த­லையைப் பெறு­வ­தற்­காக சர்­வ­தேச சந்­தர்ப்­பங்­களை நோக்கி நகர்­வு­களை செய்­வ­தற்கு நெல்சன் மண்­டேலா போன்­ற­வர்­களின் வர­லா­றுகள் எமக்கு வழி­காட்­டி­யாக துணை­நிற்கும்.

அந்த வகையில் நெல்சன் மண்­டே­லா­வுக்கு எமது இத­ய­பூர்­வ­மான விசு­வா­சம்­மிக்க அனு­தா­பத்தைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

இலங்கை விசு­வா­ச­மான ஒரு ஜன­நா­யக ரீதி­யான ஆட்சி நாக­ரிகம் கொண்ட ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை ஏற்­றுக்­கொள்­ளாத ஆட்சி என்று போர்க் குற்றம் சுமத்தி, உல­கத்தின் விமர்­ச­னங்­களும் விவா­தங்­களும் கருத்தில் எடுக்­கப்­பட்டு எதிர்­கா­லத்தில் தீர்­மா­னங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.
நாம் இந்த முனைப்­போடு இருக்­கின்ற நேரத்தில் மண்­டேலா போன்ற மிகப் பெரிய வழி­காட்­டிக்கு அவரின் வர­லாற்றை முழு­மை­யாக தெரிந்தோ அல்­லது தெரி­யா­மலோ அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச கூட தென்­னா­பி­ரிக்கா சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் நாங்கள் மறைந்த தலைவருக்குச் செய்கின்ற அஞ்சலிக்கும் அவர்கள் செய்கின்ற போலித் தனமான அஞ்சலிக்கும் மாறுபட்ட வேறுபாடு உண்டு என்றார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் அக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
« PREV
NEXT »

No comments