Latest News

December 30, 2013

கிளி­நொச்சி அம்பாள் குளத்­தி­லுள்ள கொல்­க­ளத்தை அகற்­று­மாறு கோரிக்கை
by admin - 0

கிளி­நொச்சி அம்பாள் குளத்தில் பாது­காப்­பற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள கொல்களத்தில் இறைச்­சிக்­காக கால்­ந­டை­களை வெட்டியபின் அதன் கழி­வு­களை அவ்­வி­டத்­தி­லேயே வீசி எறி­வதால் சுமார் 30இற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக சுட்டிக்காட்டப்பட்டுள்­ளது.
இறைச்­சிக்­காக மாடு­களை வெட்­டு­கின்ற கொல்­களம் ஒன்று அம்­பாள்­குளம் பகு­தியில் கடந்த 2010ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்டு இன்­று­வரை இறைச்­சிக்­காக மாடுகள் வெட்­டப்­பட்டு வரு­கின்­றன. அதி­க­ள­வான குடும்­பங்கள் நெருக்­க­மாக வாழு­கின்ற குறித்த பகு­தியில் அமைந்­துள்ள கொல்­க­ளத்தை அகற்­று­மாறு இப்­ப­குதி மக்கள் மக­ஜர்கள் மூலம் தெரி­யப்­ப­டுத்­திய போதிலும் இன்­னமும் குறித்த கொல்­களம் அவ்­வி­டத்­தி­லேயே இயங்கி வரு­கின்­றது.
குடி­யி­ருப்பு பகு­தியில் மாடுகள் வெட்­டப்­ப­டு­வ­தனால் அதன் கழி­வு­க­ளி­லி­ருந்து துர்­நாற்றம் வீசு­வதால் தாம் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­வ­தா­க மக்கள் கவலை தெரி­வித்­துள்­ளனர். குடி­யி­ருப்­பு­க­ளுக்கு மத்­தியில் மாடு­களை இறைச்­சிக்­காக வெட்டும் பொழுது கழி­வுகள் உரி­ய­மு­றையில் அகற்­றப்­ப­டா­மை­யினால் இலை­யான்­களின் பெருக்­கமும் துர்­நாற்­றமும் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
எனவே இதனை உரிய அதி­கா­ரிகள் கவ­ன­மெ­டுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
« PREV
NEXT »

No comments