Latest News

December 30, 2013

மானிய உரம் கிடைக்­கா­மையால் முழங்­காவில் விவ­சா­யிகள் பாதிப்பு
by admin - 0

கிளி­நொச்சி மாவட்­டத்­திற்­குட்­பட்ட முழங்­காவில் பகு­தியில் இவ்­வாண்­டுக்­கான கால போக நெற்­செய்­கை­க­ளுக்­கு­ரிய மானிய உரம் உரிய முறையில் கிடைக்­க­வில்­லை­யென விவ­சா­யிகள் கவலை வெ ளியிட்­டுள்­ளனர்.
கால­போக நெற்­செய்­கைக்­கு­ரிய மானிய உரம் தற்­போது விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் கிளி­நொச்சி மாவட்­டத்தில் மட்டும் சுமார் ஐம்­பத்தி எட்­டா­யிரம் ஏக்­க­ருக்­கு­ரிய மானிய உரம் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தாக கம­நல சேவை நிலைய அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.
இந்­நி­லையில் இம் மாவட்­டத்தில் முழங்­காவில் பகு­தியில் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்ற மானிய உரம் உரிய முறையில் தமக்குக் கிடைக்­க­வில்­லை­யென அப்­ப­குதி விவ­சா­யிகள் சிலர் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளனர்..
தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள மான­வாரி செய்­கை­க­ளுக்­கு­ரிய உர­மா­னியம் கிடைக்­க­வில்லை எனவும் இதனை உரிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments