மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும், அமைச்சருமான அமரர் பெ. சந்திரசேகரனின் நான்காவது சிரார்த்த தினம் புத்தாண்டு தினமான முதலாந் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் எஸ். முருகையா தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூஜையும், முற்பகல் 10 மணிக்கு மலையக மக்கள் முன்னணியின் அட்டன் அலுவலகத்தில் ஞாபகார்த்த கூட்டமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மலையக மக்கள் முன்னணி தலைவர் சாந்தினிதேவி சந்திரசேகரன் தலைமையில் நடைபெறும் மேற்படி நிகழ்வுகளில் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், பாராளுமான்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன், செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ், நிதிச் செயலாளரும், ஊவா மாகாண சபை உறுப்பினருமான ஏ. அரவிந்குமார், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் டி. பிரசாத், மலையக தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் கே. சுப்பிரமணியம், நிதிச் செயலாளர் எஸ். ஜெயபாரதி, உப தலைவர் எஸ். கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொள்வார்கள்.
மேலும், அமரர் பெ. சந்திரசேகரனின் சிரார்த்த தின நிகழ்வுகள் தோட்ட வாரியாகவும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூஜையும், முற்பகல் 10 மணிக்கு மலையக மக்கள் முன்னணியின் அட்டன் அலுவலகத்தில் ஞாபகார்த்த கூட்டமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. மலையக மக்கள் முன்னணி தலைவர் சாந்தினிதேவி சந்திரசேகரன் தலைமையில் நடைபெறும் மேற்படி நிகழ்வுகளில் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், பாராளுமான்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன், செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ், நிதிச் செயலாளரும், ஊவா மாகாண சபை உறுப்பினருமான ஏ. அரவிந்குமார், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் டி. பிரசாத், மலையக தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் கே. சுப்பிரமணியம், நிதிச் செயலாளர் எஸ். ஜெயபாரதி, உப தலைவர் எஸ். கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொள்வார்கள்.
மேலும், அமரர் பெ. சந்திரசேகரனின் சிரார்த்த தின நிகழ்வுகள் தோட்ட வாரியாகவும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
No comments
Post a Comment