Latest News

December 30, 2013

நித்திரையிலிருந்த மகன் கல்லால் தாக்கி படுகொலை தந்தையும் மாமனும் கைது
by admin - 0

நித்­தி­ரையில் இருந்த மகனை தந்­தையும் மாம­னாரும் இணைந்து கல்லால் தாக்கிப் படு­கொலை செய்த சம்­பவம் ஒன்று தெல்­தோட்­டையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.
தாக்­கு­த­லுக்கு இலக்­கான மேற்­படி இளைஞர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் தெல்­தோட்டை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் வழியில் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்தார்.

தெல்­தோட்டை முஸ்லிம் குடி­யி­ருப்புப் பிர­தே­சத்தில் வதியும் பாரூக் மொஹமட் பாஹிம் (வயது 24) என்ற இளை­ஞரே இவ்­வாறு தந்தை மற்றும் மாம­னாரால் படு­கொலை செய்­யப்­பட்­ட­வ­ராவார்.
முச்­சக்­கர வண்டி ஓட்­டு­ந­ரான இவ்­வி­ளை­ஞ­ருக்கும் அவ­ரது மாம­னா­ருக்­கு­மி­டையில் இருந்து வந்த தனிப்­பட்ட முறுகல் நிலை­யி­னை­ய­டுத்து இரு­வ­ருக்­கு­மி­டையில் மோதல் ஏற்­பட்­டுள்­ளது.இதில் காய­ம­டைந்த மாமனார் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று திரும்­பி­யுள்ளார்.
வீடு திரும்­பிய மாமனார் மறுநாள் இளை­ஞனின் தந்­தை­யுடன் இணைந்து நித்­தி­ரை­யி­லி­ருந்த போதே கல்லால் தாக்­கி­யுள்ளார்.
இதில் தலையில் படு­கா­ய­ம­டைந்த இளைஞர் உட­ன­டி­யாக தெல்­தோட்டை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட போதிலும் வழி­யி­லேயே பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.
இத­னை­ய­டுத்து கொல்­லப்­பட்ட இளை­ஞனின் தந்­தையும் மாம­னாரும் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.
சடலம் பிரேத பரி­சோ­த­னைக்­காக ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை பொலிஸ் விசா­ர­ணை­களும் இடம்­பெற்று வருகின் றன.
« PREV
NEXT »

No comments