Latest News

December 27, 2013

சங்கானைச் சந்தையில் இடைத்தரகர்களால் உற்பத்திகளை விற்கும் விவசாயிகள் பாதிப்பு
by admin - 0

விவ­சா­யிகள் தமது உற்­பத்தி விளை பொருட்­களைப் பல இடங்­க­ளி­லி­ருந்தும் விற்­ப­னைக்­காக சங்­கானை மரக்­கறிச் சந்­தைக்குத் தினமும் கொண்டு வரு­கின்­றனர். இவர்­க­ளது விளை­பொ­ருட்­களை தமக்கு நட்டம் ஏற்­ப­டாத வகையில் விற்­ப­தற்கு இச் சந்­தையில் தரகர் போல் நடப்­ப­வர்­களால் பல இடை­யூ­று­களைத் தினமும் சந்­தித்து வரு­கின்­றனர்.
அண்­மையில் அள­வெட்டிப் பகு­தியைச் சேர்ந்த ஒரு விவ­சாயி ஒரு தொகை மர­வள்ளிக் கிழங்கை விற்­ப­னைக்­காக இங்கு கொண்டு வந்­துள்ளார். 59 கிலோ உள்­ள­தா­கவும் அதில் 9 கிலோ கழிவு எனத் தரகர் தெரி­வித்­துள்ளார். ஒரு கிலோ 22 ரூபா வீதம் விலை பேசப்­பட்­டுள்­ளது. விற்­பனை முடிவில் விவ­சா­யிக்கு ஒரு கிலோ 20 ரூபா வீதம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் சில்­லறை விலைக்கு ஒரு கிலோ மர­வள்­ளிக்­கி­ழங்கு 40 ரூபா வீதம் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது.
விவ­சா­யி­களின் உழைப்பை விட இரண்டு மடங்கு ஆதா­யத்­துடன் வியா­பா­ரிகள் லாபம் ஈட்­டு­கின்­றனர். இவ்­வா­றான சம்­ப­வங்கள் தினமும் இச் சந்­தையில் இடம்­பெற்று வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.
காலை நேரம் விவ­சா­யிகள் தமது விளை பொருட்­களை விற்­று­விட்டு தோட்ட வேலைகள் இருப்­பதால் விரைவில் செல்ல வேண்டும் என்பதால் தமக்குக் கிடைப்­பதை வாங்கிக்­கொண்டு செல்­ல­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். இதனைச் சம்­பந்­தப்­பட்ட பிர­தேச சபை தமது கவ­னத்தில் எடுத்து இத் தரகர் தொல்­லையைத் தீர்க்க உத­வுவார்கள் என விவ­சா­யிகள் எதிர்பார்க்கின்றனர்.
« PREV
NEXT »

No comments