Latest News

December 15, 2013

வட­மா­காண அதி­கா­ரப்போர் எப்­போது முடி­வுக்கு வரும்?
by admin - 0

வட மாகா­ண­ச­பையில் அதி­கா­ரத்­துக்­காக நடந்து வரு­கின்ற இழு­பறி யுத்தம் நாளுக்கு நாள் தீவி­ர­ம­டைந்து வரு­கி­றது.
இந்­த­நி­லையில், வட மாகா­ண­சபைத் தேர்தல் நடத்­தப்­பட்டு, சி.வி.விக்­னேஸ்­வரன் முதல்­வ­ராக பத­வி­யேற்­ றுள்­ளது தான், தமி­ழர்­க­ளுக்­கான அதி­காரப் பகிர்வின் உச்­சக்­கட்டம் என்றும், இதற்கு மேல் அவர்­க­ளுக்கு என்ன செய்ய வேண்டும்? என்றும் அண்­மை யில் பி.பி.சி. பேட்டி ஒன்றில், கேள்வி எழுப்­பி­யி­ருந்தார் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த.
இதே சுசில் பிரேம் ஜயந்த தான், சில மாதங்­க­ளுக்கு முன்னர், மாகா­ண ­சபைக்கு அப்­படி என்ன அதி­காரம் உள்­ளது? அது விக்­னேஸ்­வ­ர­னுக்குத் தெரி­யாது, தனக்குத் தான் தெரியும் என்று இளக்­கா­ர­மாக கூறி­யவர்.
மேல் மாகாண முதல்­வ­ராக முன்னர் பதவி வகித்­தவர் சுசில் பிரேம் ஜயந்த்.
அதா­வது மாகா­ண­ச­பை­க­ளுக்கு எந்த அதி­கா­ரமும் கிடை­யாது என்ற தொனியில் அப்­போது பேசி­யவர் தான், பி.பி.சி.க்கு அளித்த பேட்­டியில், வடக்கில் மாகா­ண­சபைத் தேர்தல் நடத்­தப்­பட்டு விட்­டது. விக்­னேஸ்­வரன் முதல்­வ­ராகி விட்டார் இனி­யென்ன தேவைப்­ப­டு­கி­றது அவர்­க­ளுக்கு? என்று கேட்­டி­ருந்தார்.
ஒரு கட்­டத்தில், ஒன்­று­மில்­லாத மாகா­ண­சபை என்று கூறி­விட்டு, இப்­போது எல்லா அதி­கா­ரத்­தையும் கொடுத்து விட்­டது போல அவர் கூறி­யி­ருக்­கிறார்.
ஆனால், நடை­மு­றையில் வட மாகா­ண­சபை தனது நிர்­வா­கத்தை நடத்­து­வ­தற்கு ஒரு பெரும் போராட்­டத்தை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றது.
மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு மாகாண அர­சுக்கும், ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட ஒரு முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யான ஆளு­ந­ருக்கும் இடையில் இழு­பறிப் போர், நடந்து வரு­கி­றது.
புதிய மாகா­ண­சபை, தெரிவு செய்­யப்­பட்ட நாள் தொடக்கம், இரா­ணுவப் பின்­னணி கொண்ட ஆளுநர் தேவை­யில்லை என்றும் சிவில் ஆளுநர் ஒரு­வரை ஜனா­தி­பதி நிய­மிக்க வேண்டும் என்றும் கோரி வரு­கி­றது.
இது தொடர்­பாக ஒன்­றுக்கு இரண்டு முறை மாகா­ண­ச­பையில் ஏகம­ன­தாக தீர்­மா­னங்­களும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.
முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் மாகா­ண­ச­பையில் நிகழ்த்­திய ஒவ்­வொரு உரை­க­ளிலும் இதனை வலி­யு­றுத்தி வந்­துள்ளார்.
ஆனாலும், அர­சாங்கம் அதை­யெல் லாம் கண்­டு­கொள்­ளா­தி­ருக்­கின்ற அதே­வேளை, மாகாண ஆளுநர் சந்­தி­ர­சிறி தமது பிடியை மேலும் மேலும் இறுக்கி வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் எழுந்­துள் ­ளன.
செய­லா­ளர்­களை அடுத்­த­டுத்து மாற்­றிய ஆளுநர் அடுத்து, உயர்­மட்ட அதி­கா­ரி­களை கைக்குள் வைத்துக் கொண்டு, மாகாண அர­சுக்கு எதி­ராகச் செயற்­படத் தூண்டி வரு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன.
குறிப்­பாக, மாகாண பிர­தம செயலர், ஆளு­நரின் இந்த அதி­கார அத்­து­மீ­ற­லுக்குப் பெரிதும் துணை­போ­வ­தாக மாகா­ண­ச­பையின் முதல்­வரும், அமைச்சர்­களும், உறுப்­பி­னர்­களும் விச­னங்­களை வெளி­யிட்­டுள்­ள னர்.
அண்­மையில் நடந்த பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்­றிய முத­ல­மைச்சர் விக்­ னேஸ்­வரன், ஆளு­நரின் கைத்­த­டி­களா கச் செயற்­படும் மாகாண செய­லா­ளர்­களை கடு­மை­யாக கண்­டித்­தி­ருந்தார்.
அவர்கள் நியா­ய­மாகச் செயற்­பட வேண்டும் அல்­லது தாமாக விலகிக் கொள்ள வேண்டும் என்றும் இல்­லா­வி டின் கடு­மை­யான முடி­வு­களை எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்­ச­ரித்­தி­ருந் தார்.
சில அதி­கா­ரிகள், ஆளு­ந­ருக்கும் மாகாண அர­சுக்கும் இடையில் உள்ள இடை­வெ­ளியைத் தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு குளிர்­காய முற்­ப­டு­கின்­றனர் என்­பது தெளி­வா­கவே தெரி­கி­றது.
அதா­வது, வடக்கில் இது­வரை மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு மாகாண அரச நிர்­வாகம் இல்­லாத நிலை யில், அரச அதி­கா­ரிகள் பலரும் தம் மைக் குறு­நில மன்­னர்­க­ளா­கவே கருதிக் கொண்டு செயற்­பட்­டனர்.
அத்­த­கை­ய­வர்­களால், மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட மாகாண அர­சாங் கம் தம் மீது செல்­வாக்குச் செலுத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ளது.
அவர்கள் தான், ஆளு­நரின் பெயரில் அத்­து­மீற முனை­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன.அதே­வேளை, மாகாண அர­சாங்­கத்­துக்கும், அதி­கா­ரி­க­ளுக்கும் இடையில் இத்­த­கை­ய­தொரு இடை­வெ­ளியை ஏற்­ப­டுத்தி, நிர்­வா­கத்தை குழப்ப ஆளுநர் முனை­வ­தா­கவும் தெரி­கி­றது.
எவ்­வா­றா­யினும், மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட வடக்கு மாகா­ண­சபை, நிர்­வா­கத்தை திறம்­பட வழி நடத்தும் பொறுப்பை நிறை­வேற்­றி­யாக வேண்­டிய நிலை­யிலும், இத்­த­கைய முட்­டுக்­கட்­டை­களைத் தாண்ட வேண்­டிய நிலை­யிலும் உள்­ளது.
மக்­க­ளுக்கு சேவை­யாற்ற, அதி­கா­ரி­க ளும் ஆளு­நரும் இட­ம­ளிக்­க­வில்லை, முட்­டுக்­கட்டை போடு­கின்­றனர் என்று மாகா­ண­ச­பையால் தொடர்ந்து கூறிக் கொண்­டி­ருக்க முடி­யாது.
அது ஏற்­கும்­ப­டி­யான ஒரு கார­ண­மா­கவும் இருக்க முடி­யாது.
-"ஆடத்­தெ­ரி­யா­தவன் மேடை
கோணல்'' என்­றானாம் என்று, கடந்த நாடா­ளு­மன்­றத்தில் விமர்­சித்­தி­ருக்­கிறார் அமைச் சர் டக்ளஸ் தேவா­னந்தா.
எனவே, அடுத்து என்ன செய்­யலாம்? என்று தீர்­மா­னிக்க வேண்­டிய முக்­கி­ய­மான கட்­டத்தில் வட மாகா­ண­சபை உள்­ளது.
இரா­ணுவப் பின்­னணி கொண்ட ஆளுநர் இப்­போ­தைக்கு மாற்­றப்­படப் போவ­தில்லை என்­பதை உணர முடி­கி­றது.
அவ்­வாறு மாற்­றப்­பட்டால் கூட, அடுத்து வரு­ப­வரும் இதே மனோ­பா­வத்­துடன் செயற்­ப­டு­ப­வ­ராக இருந்து விட்டால், என்ன செய்ய முடியும்?
எனவே, ஆளு­ந­ரி­னதும், அரச அதி­கா­ரி­க­ளி­னதும் அதி­கார இழு­ப­றிக்குள் அகப்­ப­டாமல் நிர்­வா­கத்தை நடத்தும் ஒரு பொறி­மு­றையை வட மாகா­ண­சபை உரு­வாக்கிக் கொண்டால் தான், சாதிக்க முடியும்.
அதி­கா­ரிகள், ஆளுநர் முட்­டுக்­கட்டை என்று தொடர்ந்து காரணம் கூறிக் கொண்­டி­ருந்தால் மக்­களும் சலித்துப் போவார்கள்.
13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் அதி­கார எல்­லை­களை – அதன் ஓட்­டை­களை புரிந்து கொண்டு சபை நிர்­வா­கத்தை திறம்­பட நடத்த முற்­ப­டு­வதே மாகா­ண­ச­பைக்கு உள்ள மிகப் பெரிய சவால்.
இதற்கு, ஆளு­ந­ரி­டமோ, அதி­கா­ரி­க­ளி­டமோ சர­ண­டைந்து விடுதல் என்று பொரு­ளல்ல.
சர­ண­டைந்தும் விடாமல், அதே­வேளை, தமிழ் மக்­க­ளுக்கும், வெளி­யு­ ல­கிற்கும் வட மாகா­ண­சபை எதிர்­கொள்ளும் நெருக்­க­டியை உணர்த்தி, வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் மாகா­ண­சபை செயற்­பட முனைந்தால், அது பய­னுள்ள ஒரு பெறு­பேற்றைத் தரக் கூடும்.
ஒரு திட்­டத்தை மாகா­ண­சபை செயற்­ப­டுத்த முனையும் போது, அது யாரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதில் தொடங்கி, அதனை தட்­டிக்­க­ழிக்கும், அல்­லது அதில் குறுக்­கிட முனைப­வர் கள் தொடர்­பான அத்­தனை விப­ரங்­க ளும் உட­னுக்­குடன் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­மானால், அரசு நிர்­வா­கத்தின் மீது மக்­களின் கவனம் அதிகம் ஈர்க்­கப்­பட வாய்ப்­புள்­ளது.
அத்­த­கைய கவ­ன ­ஈர்ப்பு, மாகா­ண­ச­பையின் மீதுள்ள நம்­ப­கத்­தன்­மையை பாது­காப்­ப­தற்கு மட்­டு­மன்றி, அதன் நிர்­வா­கத்தில் தேவை­யற்ற குறுக்­கீ­டுகள் தலை­யீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கும் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும்.
அதே­வேளை, இன்­னொரு முனை யில் வடக்கு மாகா­ண­சபை ஒரு நொண் டிக் குதிரை என்ற உண்­மையை வெளி­யு­ல­கிற்கு அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தற்­கான அத்­தனை முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­வதும் முக்­கி­ய­மா­னது.
ஏனென்றால், கிட்­டத்­திட்ட இந்த மாகா­ண­ ச­பை­யையே, தமிழர் பிரச்­சி­னைக்­கான இறுதித் தீர்வு போன்று அர­சாங்கம் கூறத் தொடங்­கி­யுள்­ளது.
இந்த ஓட்டைப் பாத்­தி­ரத்தை வைத்து, பிச்­சை­யெ­டுக்கத் தான் முடி­யுமே தவிர, தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களைத் தீர்க்க முடி­யாது என்ற உண்மை இந்­தி­யா­வுக்கும், ஏனைய நாடு­க­ளுக்கும் தெளி­வாகப் புரிய வைக்­கப்­பட வேண்டும்.
இந்த இரு­முனை நகர்­வு­களும் சம­கா­லத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதன் மூலம், வடக்கு மாகா­ண­ச­பையை பலப்­ப­டுத்திக் கொள்­ளவும், வாக்­க­ளித்த மக் ­களின் நம்­பிக்­கையை காப்­பாற்றிக் கொள்­ளவும் முடியும்.
வட மாகா­ண­ச­பையை ஒரு டம்மி நிர்­வாக அமைப்­பாக கருதிக் கொண்டு அர­சாங்கம் எவ்­வாறு செயற்­ப­டு­கி­றது என்­பதை, வடக்கு மாகா­ண­ச­பையின் அதி­கா­ர­பூர்வ இணை­யத்­த­ளத்தை பார்த்­தாலே புரிந்து கொள்­ள­மு­டியும்.
தனியே ஆளுநர் புகழ்­பா­டு­வ­தற்­கா­கவே அது செயற்­ப­டு­கி­றது.
மாகா­ண­ச­பையின் வரவு ------- செலவுத் திட்டம் கூட அதில் பதி­வேற்­றப்­ப­ட­வில்லை.
முத­ல­மைச்­சரின் ஒரு படம், முக­வரி தவிர வேறு எதுவும் அதில் கிடையாது.
ஒரு தொலைபேசி இலக்கம் கூட இல்லாத முதல்வராக சி.வி.விக்னேஸ் வரன் இருக்கிறார்.
ஆளுநர், மற்றும் பிரதம செயலரின் அத்தனை விபரங்களும் படங்களுடன் பதிவாகியுள்ளன.
அமைச்சர்கள் பற்றிய விபரமோ அதன் செயற்பாடுகள் குறித்த விபரங் களோ எதுவும் அதில் கிடையாது.
ஆனால், ஆளுநர் வழிபாடு செய்வது தொடக்கம் அத்தனை விபரங்களும் அதில் பதிவு செய்யப்படுகின்றன.
இப்படியான நிலையில், வட மாகா ணசபை தனது செயற்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான அதிகாரபூர்வ ஊடகத்தை கட்டமைப்பது, அவசிய மானதாகவே உள்ளது.
இதன் மூலம், மாகாண அரச நிர் வாகத்தின் செயற்பாடுகளையும், திட் டங்களை நிறைவேற்ற முடியாமைக் கான காரணங்களையும், வெளிப்படுத்த முடியும். அது மாகாண அரசை பலமுள் ளதாக மாற்றும்.
இல்லாவிடின், அடுத்த ஐந்து ஆண்டு களும், மாகாண அரசு, ஆளுநர் முட் டுக்கட்டை போடுவதாக புலம்பிக் கொண்டே திரிய வேண்டியிருக்கும்.
« PREV
NEXT »

No comments