Latest News

December 08, 2013

விவ­சாயக் கடன்­களை மீள­ளிப்­ப­தற்கு வங்­கிகள் கால­நீ­டிப்பு வழங்­க­வேண்டும் வட­மா­காண விவ­சாய அமைச்சர் கோரிக்கை
by admin - 0

விவ­சா­யிகள் பெற்­றுக்­கொண்ட கடன்­களை மீளச் செலுத்­த­வ­தற்கு வங்­கிகள் கால நீடிப்­பினை வழங்­க­வேண்டும் என வட­மா­காண விவ­சாய அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
வட­மா­கா­ணத்தில் விவ­சா­யிகள் எதிர்­நோக்கும் கடன் சுமை தொடர்­பான வங்கி முகா­மை­யா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லிலேயே அமைச்சர் இவ்­வேண்­டு­கோளை முன்­வைத்தார்.
அங்கு அமைச்சர் மேலும் தெரி­விக்­கையில், போருக்குப் பின்­ன­ரான சூழலில் தற்­போது நாம் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்றோம். வட மாகாண சபை தற்­போது உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. குறைந்த பட்சம் எமக்கு இருக்­கின்ற அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி விவ­சா­யி­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது. விவ­சா­யிகள் பொரு­ளா­தார ரீதியில் மிகவும் பின்­தங்­கிய நிலை­யி­லுள்­ளனர். இந்த வகையில் வங்­கிகள் விவ­சா­யி­க­ளு­டைய கடன்­களை இரத்துச் செய்­ய­வேண்டும் எனக் கூறு­வது பிழை­யான முன்­னு­தா­ர­ண­மாக போய்­விடும். எனவே கடன் பெற்ற விவ­சா­யிகள் உண்­மை­யா­கவே பாதிக்­கப்­பட்­டுள்­ளார்­களா என்­பதை கண்­ட­றிந்து விவ­சாய போத­னா­சி­ரி­யர்கள் உறு­திப்­ப­டுத்த வேண்டும். அதனை பரி­சீ­லித்து
கடனை மீள­ளிப்­ப­தற்­கான கால நீடிப்பை விவ­சா­யி­க­ளுக்கு வழங்­க­வேண்டும். இதனை பயன்­ப­டுத்தி நாங்கள் அவர்­க­ளுடன் தொடர்ச்­சி­யாக உற­வாடி வங்­கிகள் தரப்பில் தெரி­விக்கும் கருத்­துக்­களை முன்­வைத்து வெவ்­வேறு வகை­யான கடன் திட்­டங்­களை விளங்­கப்­ப­டுத்த முடியும்.
நாம் பல திட்­டங்­களை வைத்­துள்ளோம். விவ­சா­யி­க­ளுக்கு கடன்­களை வழங்­கு­வது மட்டு­மல்­லாது அவர்­க­ளு­டைய சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள், பொருட்­களை களஞ்­சி­யப்­ப­டுத்தல், உற்­பத்திப் பொருட்­களை வேறு பய­னாக மாற்­றுதல் போன்­ற­வற்றை அறி­முகம் செய்தல் என்­பன எமது திட்­ட­மா­க­வுள்­ளது. இதற்­காக வங்­கி­களின் உத­விகள் தேவை என்­பதை தெரி­வித்துக் கொள்­கின்றோம் என்றார்.
« PREV
NEXT »

No comments