மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணம் செய்ய இலங்கைப் பெண்கள் விரும்புவதில்லை. எனவே இலங்கை பஸ்களை அறிமுகம் செய்யும் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் கூறினார்.
ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம சில பெண்கள் 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணிக்க விரும்புவதில்லை என தனக்கு நேரில் தெரிவித்ததாக நாடாளுமன்றில் கூறினார்.
அண்மையில் நான் ரயிலில் பயணித்தபோது பெண்களுக்கென தனியாக பெட்டிகளை ஒதுக்க வேண்டுமா என கேட்டபோது அவர்கள் தாம் தனித்து பயணிக்க விருப்பவில்லை என கூறினர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆகையால் 'மகளிர் மட்டும்' ரயில் பெட்டித்திட்டத்தையும் கைவிட்டு விட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம சில பெண்கள் 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணிக்க விரும்புவதில்லை என தனக்கு நேரில் தெரிவித்ததாக நாடாளுமன்றில் கூறினார்.
அண்மையில் நான் ரயிலில் பயணித்தபோது பெண்களுக்கென தனியாக பெட்டிகளை ஒதுக்க வேண்டுமா என கேட்டபோது அவர்கள் தாம் தனித்து பயணிக்க விருப்பவில்லை என கூறினர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆகையால் 'மகளிர் மட்டும்' ரயில் பெட்டித்திட்டத்தையும் கைவிட்டு விட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments
Post a Comment