Latest News

December 20, 2013

முஸ்லிம் மக்­களின் மனதை புண்­ப­டுத்தும் செயற்­பா­டுகள்
by admin - 0

முஸ்லிம் மக்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகை­யி­லான செயற்­பா­டுகள் தொடர்ந்தும் அரங்­கேற்­றப்­பட்டு வரு­கின்­றன. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தெஹி­வளைப் பிர­தே­சத்­தி­லுள்ள அத்­தி­டிய மஸ்­ஜிதுல் ஹிபா, களு­போ­வில மஸ்­ஜிதுல் தாருல் ஷாபி, தெஹி­வளை தாருல் அர்கம் ஆகிய மூன்று பள்­ளி­வா­சல்­க­ளிலும், தொழு­கை­களை நடத்­த­வேண்டாம் என்று பொலிஸ் தரப்பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
குறித்த பள்­ளி­வா­சல்கள் அமைந்­தி­ருக்கும் பிர­தே­சங்­களில் உள்ள சில பௌத்த மதகுரு­மாரும், பௌத்­தர்­களும் இணைந்து இந்த மூன்று பள்­ளி­வா­சல்­களும் சட்­ட­வி­ரோ­த­மா­னவை என பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­டுள்­ளதை அடுத்து இந்தப் பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை நடத்­து­வ­தற்கு பொலிஸார் தடை விதித்­துள்­ளனர்.
இந்த பள்­ளி­வா­சல்­களில் தொழு­கைகள் நடத்­தப்­படும் பட்­சத்தில் தேவை­யற்ற பிரச்­சி­னைகள் உரு­வா­கலாம் என்ற அச்­சத்தின் கார­ண­மா­கவே இங்கு தொழு­கை­களை நடத்த வேண்டாம் என்று பொலிஸ் தரப்பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் தெரி­வித்­த­துடன் இவ்­வி­டயம் குறித்து சம்­பந்­தப்­பட்­டோ­ருடன் பேச்­சு­ வார்த்தை நடத்தி தீர்வு காண முயல்­வது என்றும் தேவைப்­படும் பட்­சத்தில் ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்பு செய­லா­ளரின் கவ­னத்­திற்கு கொண்டு வர இருப்­ப­தா­கவும் அமைச்சர் கூறி­யி­ருந்தார்.
தெஹி­வளைப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள இந்த மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை நடத்­து­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­ட­மை­யா­னது முஸ்லிம் மக்­களின் மத உரி­மை­களை ஒட்­டு­மொத்­த­மாக மீறு­கின்ற செயற்­பா­டா­கவே அமைந்­துள்­ளது. அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­வதும் முஸ்லிம் மக்­களின் மத உணர்­வு­களை மழுங்­க­டிக்கும் வகையில் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­படும் செயற்­பா­டுகள் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன. இதன் ஒரு கட்­ட­மா­கவே தற்­போது மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழுகை நடத்­து­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
தம்­புள்ளை பள்­ளி­வா­சலில் ஆரம்­ப­மான இந்த தாக்­குதல் சம்­பவம் கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் வரை நீடித்­தது. இது­வரை 25 பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம் பெற்­றுள்­ளன. முஸ்லிம் மக்­களின் ஹலால் சான்­றிதழ் விவ­கா­ரமும் சிங்­கள இன­வாத கட்­சிகள் மற்றும் அமைப்­புக்­க­ளினால் பெரும் பூதா­க­ர­மாக மாற்­றப்­பட்டு அந்த விட­யத்­திற்கும் தற்­போது முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஹலால் சான்­றிதழ் வழங்கும் நடை­மு­றையும் இரத்துச் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.
இவ்­வாறு முஸ்லிம் மக்கள் மீதான வன்­மு­றைச்­சம்­ப­வங்­களும் அடக்­கு­மு­றை­களும் தொடர்ந்தும் இடம் பெற்று வரு­கின்­றன. தெஹி­வளைப் பகு­தியில் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழுகை நடத்­து­வ­தற்கு விதிக்­கப்­பட்ட தடை தொடர்பில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ
ப­க் ஷவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்ளார்.
நேற்று முன்­தினம் அல­ரி­மா­ளி­கையில் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவை சந்­தித்துப் பேசிய நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழுகை நடத்­து­வ­தற்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடை­யா­னது முஸ்லிம் மக்கள் மத்­தியில் கொந்­த­ளிப்­பையும், விச­னத்­தையும் உண்டு பண்­ணி­யுள்­ளது. பள்­ளி­வா­சல்கள் மீதான வன்­முறை சம்­ப­வங்கள் அர­சாங்­கத்­திற்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. இவ்­வி­டயம் குறித்து அர­சாங்கம் உரிய கவனம் செலுத்­த­வேண்டும் என்று ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழு­கைகள் நடத்­து­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்­துக்­கூ­றிய போது இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கூறும் வரை அது பற்றி தான் அறிந்­தி­ருக்­க­வில்­லை­யெ­னவும் வேறு எவரும் இது­கு­றித்து தனது கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தி­ருக்­க­வில்லை என்றும் கூறிய ஜனா­தி­பதி இவ்­வி­ட­யத்தில் . உரிய கவனம் செலுத்­தப்­படும் என்று கூறி­யி­ருக்­கின்றார்.
விசம சக்­தி­களால் உந்­தப்­பட்டு அர­சாங்க உயர் மட்­டத்­திற்கு தெரி­யாத விதத்தில் பொலிஸார் தான்­தோன்­றித்­த­ன­மாக இவ்­வா­றான இன முறு­கலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சமய விரோத நட­வ­டிக்­கை­களில் நேர­டி­யாக ஈடு­ப­டு­வது கண்­டிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­தொன்­றாகும் என்று அமைச்சர் ஹக்கீம் தெரி­வித்­தி­ருக்­கின்றார். முஸ்­லிம்கள் நாள்­தோறும் ஐவே­ளைகள் தொழு­கை­களில் ஈடு­ப­டு­வது இஸ்­லாத்தின் கட்­டாயக் கட­மை­களில் ஒன்று என்ற கார­ணத்­தினால் மத்­ர­ஸாக்­களில் தொழு­வதைக் கூட தடுக்­கக்­கூ­டாது என்றும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு அமைச்சர் ஹக்கீம் கொண்­டு­வந்­துள்­ள­தாக முஸ்லிம் காங்­கிரஸ் விடுத்­துள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
மொத்­தத்தில் தெஹி­வ­ளையில் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழுகை நடத்­து­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டமை அர­சாங்க உயர் மட்­டத்­திற்கு அதுவும் குறிப்­பாக ஜனா­தி­ப­திக்கு தெரி­ந்­தி­ருக்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றாயின் இத்­த­கைய உத்­த­ர­வு­க­ளையும் அர­சாங்­கத்தின் உயர்­பீ­டத்தின் அனு­ம­தி­யின்றி பொலி­ஸா­ரினால் விடுக்க முடி­யுமா? என்ற கேள்வி எழு­கின்­றது.
இந்த மூன்று பள்­ளி­வா­சல்கள் விட­யத்­திலும், தொழு­கைகள் நடத்­து­வ­தற்கு பொலிஸார் தடை விதித்­துள்­ள­போ­திலும், அவ்­வாறு தடை விதிப்­ப­தற்கு பொலி­ஸா­ருக்கு அதி­காரம் இல்லை என்று பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அஜித் ரோகண தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
எந்த பள்­ளி­வா­சல்­க­ளிலும் பொலிஸார் தொழு­கையை தடை செய்­ய­வில்லை. தெஹி­வளைப் பிர­தே­சத்தில் அவ்­வாறு எந்தச் சம்­ப­வமும் இடம் பெற­வில்லை. எனினும் கொஹு­வளை பிர­தே­சத்தில் குர்ஆன் மத்­ர­ஸா­வாக நடத்தி வரப்­பட்ட இடம் ஒன்று தற்­போது தொழு­கைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸில் முறை­யிட்­டுள்ளார். அந்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ரணை செய்ய பௌத்த, முஸ்லிம் பிர­தி­நி­தி­களை புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார அமைச்­சிற்கு வரு­மாறு பொலிஸார் அறி­வித்­துள்­ளனர் என்றும் பொலிஸ் பேச்­சாளர் தனது பக்க நியா­யத்தை தெரி­வித்­துள்ளார்.
சிங்­கள இன­வாத அமைப்­புக்கள் இந்த நாடா­னது பௌத்த சிங்­கள நாடு என்று கூறி­வ­ரு­கின்­றன. இங்கு வாழும் சிறு­பான்மை மக்கள் வந்­தேறு குடிகள் என்ற எண்­ணப்­பாடே அவர்கள் மத்­தியில் காணப்­படு­கின்­றது. இத்­த­கைய எண்­ணத்தைக் கொண்­டுள்ள அமைப்­புக்கள் முஸ்லிம் மக்­களின் பள்­ளி­வா­சல்கள் மீதான தமது வன்­மு­றைக்­க­லா­சா­ரத்தை கட்­ட­விழ்த்து விடு­கின்­றன. இத்­த­கைய அமைப்­பினர் தான் தெஹி­வ­ளையில் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை தடை செய்­வ­தற்கு உரிய முறைப்­பா­டு­களை செய்­துள்­ள­தாக தெரி­கின்­றது.
இந்தப் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தை முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றுள்ளார். இது குறித்து உரிய கவனம் செலுத்­தப்­படும் என்று உறுதி வழங்­கி­யுள்ளார். எனவே கால­தா­ம­த­மின்றி இந்தச் செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
மனம் நொந்­து­போ­யுள்ள முஸ்லிம் மக்­க­ளுக்கு இனியும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும்.
மதங்களிடையே இத்தகைய முரண்பாடுகள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் சர்வ மத அமைப்புக்களைக் கொண்ட புதியதொரு கட்டமைப்பை மத விவகார அமைச்சும் உருவாக்கவேண்டும். மதங்களுக்கு எதிராக எங்காவது ஒரு சம்பவம் நடைபெற்றால் இந்த அமைப்பு தலையிட்டு முரண்பாடுகள் அதிகரிக்காத வகையில் அவற்றுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும். இத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு உடனடியாக மதவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டியது இன்றியமையாத விடயமாக உள்ளது.
ஏனெனில் தொடர்ந்தும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளும் அடக்கு முறைகளும் தொடர்வதானது நாட்டிற்கு நன்மைபயக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
« PREV
NEXT »

No comments