எமது மண்ணின் வளத்தை சீரழிக்கும் பாதினீயக் களையை எமது பிரதேசங்களிலிருந்து முற்றாக அழிக்க வேண்டும். ஒரு மாதத்தில் ஒரு தடவை அகற்றி விட்டு பாதினீயத்தை முற்றாக அழித்து விட்டதாக எண்ணிவிடக்கூடாது. தொடர்ச்சியாகச் செய்யப்பட்டாலே அதனை அழிக்க முடியும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச சபை கோண்டாவில் இராமகிருஷ்ணன் வித்தியாலயத்தில் பாதினீயத்தை அழிக்கும் செயற்றிட்டம் பிரதேச சபைத் தலைவர் ப.வசந்தகுமார் தலைமை யில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட அமைச்சர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு அதன் அபிவிருத்திக்காக பொது நோக்காகக் கொண்ட திட்டமாக இது அமைய வேண் டும். மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் பாதினீயத்தை அழிக்கும் நடவடி க்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகி றது. ஏற்கனவே இந்த களைகள் இருந்தபோதும் அது குறித்து பெரிய அளவில் கவனிக்கப்படாமலே இருந்தது. இன்று மாணவ ர்களும் பொதுமக்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தக் கூடியதாக இந்த நிகழ்வு பரவலாக இடம்பெறுகின்றது.
சிறந்த பல மூலிகைகள் எமது பகுதியில் இருக்கின்றன. அவைகள் இந்தக்களை காரணமாக அழிந்து கொண்டு வருகின்றன. எமது மண்வளங்களைப் பேணக்கூடியதாக இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். பச்சை இராணுவம் அல்லது பச்சைப் புற்று நோய் எனக்கருதும் இதன் கெடுதி மிக வும் மோசமானது. எமது மரபணுவைக் கூட மாற்றும் தன்மை கொண்டது. அந்த அளவு பாரதூரமான பாதினீயக் களையை அழிப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும். இதை எங்களது தேசிய கடமையாகக் கொள்ளவேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன், மாகாண விவசாய பணிப்பாளர் இ.ஸ்ரீபாலசுந்தரம் மாகாண சபை உறுப்பினர் இ.ஆர்னல்ட், இராமகி ருஷ்ண வித்தியாலய அதிபர் நல்லூர்பிர தேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர் கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
No comments
Post a Comment