Latest News

December 11, 2013

பெரும் அதிர்ச்சி ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் அம்­மன்­சிலை உடைப்பு சம்­பவம்
by admin - 0

நாட்டில் இந்து ஆல­யங்கள் தாக்­கப்­ப­டு­கின்ற சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. பதுளை ஹாலி­எல உடு­வரை பெருந்­தோட்ட மேற்­பி­ரிவு ஸ்ரீ கா­ளி­யம்மன் ஆல­யத்தில் அம்­மன்­சிலை உடைத்து சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் அதி­காலை இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. மகா காளி­யம்மன் சிலை உடைக்­கப்­பட்­டமை பது­ளையில் மட்­டு­மல்ல மலை­யகம் முழு­வதும் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
150 வரு­ட­கால பழைமை வாய்ந்த இந்த ஆல­யத்தில் எழுந்­த­ரு­ளி­யி­ருக்கும் காளி­யம்­மனை அப்­ப­குதி மக்கள் குல­தெய்­வ­மாக பூஜித்து வந்­தனர். இந்­த­ நி­லையில் சில விஷம சக்­திகள் இந்த காளி சிலையை உடைத்து சேதப்­படுத்­தி­யுள்­ளன. அண்­மைக்­கா­லத்தில் இந்­துக்­கோ­வில்கள் இடிக்­கப்­ப­டு­கின்ற செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன.
கடந்த மாதம் தம்­புள்­ளை­யி­லுள்ள அம்மன் கோவில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­னரால் இடிக்­கப்­பட்­டி­ருந்­தது. தம்­புள்ளை புனித பூமிக்குள் இந்தக் கோவில் வரு­வ­தனால் அந்தக் கோவிலை அங்­கி­ருந்து அகற்­று­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது. இந்­த­நி­லை­யி­லேயே இந்தக் கோவில் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. கோவிலை இடிப்­ப­தற்கு முன்னர் ஆல­யத்­தி­லி­ருந்த அம்மன் சிலை சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் பின்­னரே கோவில் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டது. கொழும்பு கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள பூமாரி அம்மன் ஆல­யமும் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையி­னரால் இடித்து நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டது. இந்த இரண்டு ஆல­யங்கள் இடிக்­கப்­பட்­ட­போ­திலும் இது­வரை அந்த ஆல­யங்­களை வேறு இடங்­களில் அமைப்­ப­தற்கு மாற்று இடங்கள் கூட வழங்­கப்­ப­ட­வில்லை. விசேட தேவைக்­காக ஆல­ய­மொன்று இடிக்­கப்­ப­டு­மானால் அதற்கு முன்­னரே அந்த ஆல­யத்தை வேறு இடத்தில் அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு ஆல­யங்­க­ளுக்கும் மாற்று இடங்கள் வழங்­கப்­ப­ட­வே­யில்லை.
தற்­போது பதுளை ஹாலி­எல உடு­வரை பெருந்­தோட்ட மேற்­பி­ரிவு ஸ்ரீ காளி அம்மன் ஆல­யத்­திலும் அம்மன் சிலை உடைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதன் தொடர்ச்­சி­யாக ஆல­யத்தை அங்­கி­ருந்து அகற்றும் நோக்கம் இருக்­க­லாமோ என்ற சந்­தேகம் எழு­கின்­றது. இந்­த­நி­லையில் அம்மன் சிலை உடைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான், அந்த மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் சுசிந்­திர ராஜ­பக் ஷ உட்­பட பல­ரு­டனும் கலந்­து­ரை­யாடி இந்தச் சம்­பவம் குறித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­க ­வேண்­டு­மென்றும் சிலையை மீளவும் அங்கு அமைக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மெ­னவும் கோரி­யி­ருக்­கின்றார்.
இதேபோல் ஜனா­தி­ப­தியின் இணைப்புச் செய­லா­ளரும் முன்னாள் பிர­தி­யமைச்­ச­ரு­மான வடிவேல் சுரேஷும் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து உடைக்­கப்­பட்ட சிலை­யினை பார்­வை­யிட்­ட­துடன் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபர்­களை கைது­செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு பொலி­ஸ­ாரிடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.
மலை­ய­கத்தில் கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் இரத்­தி­ன­புரி மாவட்ட கொலன்ன பொலிஸ் பிரி­விலும் தெனி­யாய பொலிஸ் பிரி­விலும் நான்கு கோயில்­களில் கொள்­ளை­யிட்ட சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இதேபோல் கல்­கிஸை பகு­தியில் அமைந்­துள்ள ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்­திலும் கடந்த 2ஆம் திகதி அதி­காலை உண்­டியல் உடைக்­கப்­பட்டு கொள்­ளை­யி­டப்­பட்­டி­ருந்­தது. இத்­த­கைய கொள்­ளைகள் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் நடை­பெ­று­கின்­ற­னவா என்ற சந்­தே­கமும் தற்­போது எற்­பட்­டுள்­ளது.
மலை­யகம், கொழும்பில் நிலைமை இவ்­வா­றி­ருக்­கையில் வடக்கு, கிழக்­கிலும் இத்­த­கைய நிலை தொடர்ந்து வரு­கின்­றது. யுத்­தத்­தின்­போது பெரு­மள­வான ஆல­யங்கள் வடக்கு, கிழக்கில் சேத­மாக்­கப்­பட்­டன. தற்­போது யுத்தம் முடி­வடைந்த பின்­னரும் ஆல­யங்கள் இடித்து தரை­மட்­ட­மாக்கும் செயற்­பாடு தொடர்ந்து வரு­கின்­றமை கவ­லைக்­குரிய விட­ய­மாகும்.
அண்­மையில் வலி­காமம் வடக்கு அதி­பா­து­காப்பு வலயப் பகு­தியில் 3 ஆல­யங்கள் படை­யி­னரால் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­ட­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. காங்­கே­சன்­துறை எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­துக்கு அருகில் இருந்த அம்மன் கோவில், பிள்­ளையார் கோவில், நாக­தம்­பிரான் ஆலயம் என்­பன இடிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சம்­ப­வ­மா­னது இந்து மக்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதி பாது­காப்பு வலயம் என்ற பெயரில் படை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பகு­தி­களை விடு­விக்­கு­மாறும் அங்கு பொது­மக்­களை மீள குடி­ய­மர்த்த அனு­ம­திக்­கு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் ஆல­யங்கள் இடிக்­கப்­பட்­டமை இந்­துக்கள் மத்­தியில் பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
இந்த விட­யத்தைச் சுட்­டிக்­காட்டி அகில இலங்கை இந்­து­மா­மன்றம் அறிக்­கை­யொன்­றி­னையும் விடுத்­தி­ருந்­தது. அதில் இந்­து­ மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு சுயா­தீன குழு­வொன்று அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இந்த கோரிக்கை தொடர்­பிலும் இது­வரை சாத­க­மான பதில்கள் எதுவும் அர­சாங்க தரப்­பி­லி­ருந்து தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.
கடந்த இரு வரு­டங்­க­ளாக முஸ்லிம் மக்­களின் பள்­ளி­வா­சல்­களும் தாக்­கப்­பட்­டன. தம்­புள்ளை பள்­ளி­வா­சலில் ஆரம்­பித்த இந்த தாக்­கு­த­லா­னது கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் வரை தொடர்ந்து இடம்­பெற்­றது. இது­வரை 25 பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. சிறு­பான்மை இனத்­த­வர்கள் மீது திட்­ட­மிட்­ட­வ­கையில் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விட முயலும் இன­வாதக் கும்பல் இவ்­வாறு இந்து, முஸ்லிம் மக்­களின் ஆல­யங்கள் மீதும் தாக்­கு­தலை முன்­னெ­டுத்து வரு­வது நாட்டில் மத­வாத வன்­மு­றையை வளர்ப்­ப­தற்­கான செயற்­பா­டாக அமை­யலாம் என்ற அச்­சமும் தற்­போது தோன்­றி­யுள்­ளது.
முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்ட­தை­ய­டுத்து பெரும் முறுகல் நிலை நாட்டில் ஏற்­பட்­டி­ருந்­தது. கிராண்ட்பாஸ் பள்­ளி­வா­சல்­மீது தாக்­குதல் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து அது பெரும் வன்­மு­றை­யாக வெடித்­தி­ருந்­தது. 3 தினங்கள் ஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்டு இந்த வன்­மு­றையை கட்­டுப்­ப­டுத்­த­வேண்­டிய சூழல் அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.
இதேபோல் தற்­போது இந்து ஆல­யங்கள் விஷ­மி­களால் தாக்­கப்­பட்டு வரு­கின்ற சம்­ப­வ­மா­னது இத்­த­கைய வன்­மு­றைக்கு தூப­மி­டலாம் என்ற அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. நேற்று முன்­தினம் அதி­காலை பதுளை ஹாலி­எல உடு­வரை பெருந்­தோட்ட மேற்­பி­ரிவு ஸ்ரீ காளி­யம்மன் ஆல­யத்தில் அம்­மன்­சிலை உடைக்­க­ப்பட்­ட­தை­ய­டுத்து அப்­ப­குதி மக்கள் பெரும் ஆத்­திரம் கொண்­டனர். இத்­த­கைய நிலை அங்கு தொட­ரு­மானால் அது வன்­மு­றை­யாக வெடிக்கும் சாத்­தி­யக்­கூ­று­களும் காணப்­ப­டு­கின்­றன. இதனை ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் அரச தரப்­பி­ன­ருக்கு சுட்டிக்­காட்­டி­யுள்ளார்.
உடைக்­கப்­பட்ட சிலையை புன­ர­மைப்­ப­துடன் இந்த ஆல­யத்தை புன­ர­மைப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக அவர் கூறி­யி­ருக்­கின்றார். இவ்­வாறு அந்த ஆல­யத்தை புன­ர­மைப்­பதன் மூலமே அப்­ப­கு­தியில் இந்து மக்கள் மத்­தியில் மன ஆறு­தலை ஏற்­ப­டுத்த முடியும்.
இந்து கோவில்­களும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களும் திட்­ட­மிட்­ட­வ­கையில் சில விஷம சக்­தி­களால் தாக்­கப்­ப­டு­கின்­றமை குறித்து உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும். குற்­ற­வா­ளிகள் யாராக இருந்­தாலும் கடும் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். ஏனெனில் இவ்­வா­றான தாக்­கு­தல்கள் மூலம் மத முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் அர­சி­யலில் குளிர்­காய சில சக்திகள் முயலலாம். இது அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையாகக் கூட இருக்கலாம். எனவே இந்த விடயத்தில் அரசாங்கமானது உரிய விசாரணைகளை நடத்த வேண்டும்.
அத்துடன் இந்து ஆலயங்களை தகர்க்கும் செயற்பாடுகளையும் கைவிடவேண்டியது அவசியமானதாகும். அதிபாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்கள் இடிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல. இதேபோல் தம்புள்ள அம்மன் ஆலயம் மற்றும் கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயம் ஆகியன இடிக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல. இந்து ஆலயங்கள் இடிக்கப்படவேண்டுமானால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஒரு முதுமொழியாகும். இதற்கிணங்க நாட்டில் ஆலயங்கள் அமைந்திருக்க வேண்டியது அவசியம். எனவே எதிர்காலத்திலாவது இந்துமக்களின் மனதைப் புண்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறாது தடுப்பது அரசாங்கத்தின் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
« PREV
NEXT »

No comments