Latest News

December 31, 2013

வடக்கில் 71,716 ஹெக்டெயர் காணிகளை கரும்பு உற்பத்திக்கென சுவீகரிக்க திட்டம்
by admin - 0

கரும்பு உற்­பத்­தியை மேற்­கொள்­வ­தற்­கென வடக்கில் பெரு­ம­ள­வான காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் 71 ஆயி­ரத்து 716 ஹெக்­டெயர் காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் எதிர்­வரும் 3ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
சீனிக் கைத்­தொழில் அபி­வி­ருத்தி அமைச்சர் லக் ஷ்மன் சென­வி­ரத்ன இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்க உள் ளார். எதிர்­வரும் 3ஆம் திகதி ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை யில் கூடும் அமைச்­ச­ர­வையில் இது­கு­றித்து இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. சீனிக் கைத்­தொழில் அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் கரும்புச் செய்­கையை அதி­க­ரித்து சீனி உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்­காக நாடு­த­ழு­விய ரீதியில் ஒரு லட்­சத்து 8 ஆயி­ரத்து 801 ஹெக்­டெயர் காணி இந்தத் திட்­டத்தின் கீழ் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதில் வடக்கில் 71ஆயி­ரத்து 716 ஹெக்­டெயர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இதற்­கான பூர்­வாங்க அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஏற்­க­னவே அமைச்சர் லக் ஷ்மன் சென­வி­ரத்­ன­வினால் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அமைச்­சர்­களின் கருத்­துக்கள் பெறப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்தே எதிர்­வரும் 3ஆம் திகதி இறுதி அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் கரும்பு பயிர்ச்­செய்­கைக்­காக அர­சுக்குச் சொந்­த­மான 109,801ஹெக்­டெயர் காணிகள் சுவீ­க­ரிக்­கப்படும். 99 வருட குத்­த­கையின் அடிப்­ப­டையில் இந்தக் காணிகள் அமைச்­சினால் கரும்பு உற்­பத்­திக்­காக பகிர்ந்­த­ளிக்­கப்­படும். இதற்கு அனு­மதி வழங்க வேண்டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதற்­கி­ணங்க வவு­னியா மாவட்­டத்தில் வவ­னியா, வவு­னியா வடக்கு, வவு­னியா தெற்கு, செட்­டி­குளம், ஓமந்தை, கன­க­ராஜன் குளம், நயி­ன­மடு, தந்­தி­ரி­மலை ஆகிய பகு­தி­களில் 42 ஆயி­ரத்து 111 ஹெக்­டெயர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் புதுக்­கு­டி­யி­ருப்பு, ஒட்­டு­சுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகு­தி­களில் 24 ஆயி­ரத்து 340 ஹெக்­டெயர் காணி­களும் மன்­னார் மாவட்­டத்தில் மடு, மாந்தை தெற்கு ஆகிய பகு­தி­களில் 5185 ஹெக்­டெயர் காணி­களும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் அக்­க­ராயன் பகு­தியில் 80 ஹெக்­டெயர் காணி­களும் சுவீ­கரிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இதேபோல் மட்­டக்­க­ளப்பில் செங்­க­லடி, வவு­ண­தீவு பகு­தி­களில் 4869 ஹெக்­டெயர் காணிகள் சுவீ­க­ரிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
இந்தத் திட்­டத்தின் கீழ் அம்­பா­றையில் 450 ஹெக்­டெ­யர்­களும் அநு­ரா­த­பு­ரத்தில் 600 ஹெக்­டெ­யர்­களும் பது­ளையில் 8000 ஹெக்­டெ­யர்­களும் மொன­ரா­க­லையில் 20 ஆயி­ரத்து 116 ஹெக்­யெ­டர்­களும் சுவீ­க­ரிக்­கப்­ப­டுமென்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
வடக்கில் 71 ஆயி­ரத்து 716 ஹெக்­டெயர் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­ற­போ­திலும் அந்தக் காணிகள் எப்­படி யாருக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற விபரம் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. கரும்புச் செய்­கைக்­காக காணி சுவீ­க­ரிப்பு என்ற பெயரில் வடக்கில் பெரு­ம­ள­வான காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளமை தற்­போ­தைய நிலையில் பெரும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
இந்தத் திட்­டத்­தின்கீழ் நாடு முழு­வ­திலும் 1 லட்­சத்து 9 ஆயி­ரத்து 801 ஹெக்­டெயர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதில் 71 ஆயிரத்து 716 ஹெக்டெ்யர் காணி வடக்கில் மட்டும் சுவீகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
லங்கா சீனி தனியார் கம்பனி என்ற நிறுவனமொன்றை ஆரம்பித்து அந்த கம்பனிக்கே இந்தக் காணிகள் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. இதனை இந்தக் கம்பனி கரும்புச் செய்கைக்காக பகிர்ந்தளிக்கும் என்றே அமைச்சரவைப் பத் திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments