Latest News

December 02, 2013

யாழ். மாவட்டத்தில் 5,879 குடும்பங்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை
by admin - 0

யாழ். மாவட்­டத்தில் 5 ஆயி­ரத்து 879 குடும்­பங்கள் இன்­னமும் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­ப­ட­வில்லை என மாவட்ட செய­ல­கத்தின் புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.
இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் படிப்­ப­டி­யாக வடக்­கி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளிலும் மீள்­கு­டி­யேற்றம் இடம்­பெற்­றுள்ள போதிலும் முல்­லைத்­தீவு, மன்னார் ஆகிய மாவட்­டங்கள் தவிர்ந்த ஏனைய மூன்று மாவட்­டங்­க­ளிலும் இன்­னமும் 6 ஆயி­ரத்து 756 குடும்­பங்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வில்லை என்­பதை மாவட்ட செய­ல­கத்தின் புள்ளி விப­ரத்­த­க­வல்கள் ஊடாக அறியக் கூடி­ய­தா­க­வுள்­ளது.
இதற்­க­மைய யாழ்.மாவட்­டத்தில் 5 ஆயி­ரத்து 879 குடும்­பங்­களும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் 524 குடும்­பங்­க­ளும் வவு­னியா மாவட்­டத்தில் 353 குடும்­பங்­களும் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும்.
இதே­வேளை கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் முழு­மை­யாக மக்களை மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலகத் தரவுகளில் காண்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments