Latest News

December 09, 2013

மேய்ச்சல்தரை பிரதேசத்தில் வேளாண்மை செய்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து கால்நடையாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
by admin - 0

திருக்­கோவில் பிர­தே­சத்தில் வட்­ட­மடு மேய்ச்சல் தரைக்கு சொந்­த­மான நிலப்ப ரப்பில் வேளாண்மை செய்­வ­தற்கு ஒரு தலைப்­பட்­ச­மாக விவ­சா­யி­க­ளுக்கு வன பரி­பா­லன சபை அனு­மதி வழங்­கி­ய­தற்கு கால் ந­டை­யா­ளர்கள் எதிர்ப்பு தெரி­வித்து வட்­ட­மடு பிர­தே­சத்தில் நேற்று காலையில் இருந்து சாகும்­வரை உண்­ணா­வி­ரத்தில் ஈடு­பட்­டனர் அம்­பாைற மாவட்­டத்தில் கால்­நடைகளுக்­கான மேய்ச்சல் தரை­யாக 1976 ஆம் ஆண்டு அர­சாங்­கத்­தினால் திருக்­கோ வில் பிர­தேச செய­லகப் பிரிவின் கீழ் உள்ள வட்­ட­மடு பிர­தே­சத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்பு மேய்ச்சல்­த­ரைக்­காக ஒதுக்­கப்­பட்டு வர்த்­த­மா­னியில் பிரசுரிக்­கப்­பட்டு கால்­ந­டை­யா­ளர்கள் அதனுள் கால்­ந­டை­களை வளர்த்­து­வந்­தனர் பின்னர் நாட்டில் ஏற்­பட்ட யுத்­த­த்தினால் கால்­ந­டை­யா­ளர் கள் அங்கு செல்­ல­மு­டி­யாத சூழ்­நிலை ஏற்­ப ட்டு இதனை பயன்­ப­டுத்தி காணிச் சட்­டத்­திற்கு முரணாக போலி தற்­கா­லிக காணிப்­பத்­தி­ரத்தை பெற்று விவ­சா­யிகள் அத்து­மீறி வேளாண்மை செய்­து­வந்­துள்­ளனர்
இதன் பின்னர் ஏற்­பட்ட சமா­தான சூழ லில் கால்­ந­டை­யா­ளர்கள் தங்­க­ளது கால்­ந­டை­களை மேய்ச்சல் தரைக்கு கொண்டு சென்­ற­போது அதன் நிலப்­ப­ரப்பை அத்­து­மீறி விவ­சாயிகள் வேளாண்மை செய்­து­வந்­த னர்.
இத­னை­ய­டுத்து பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­போதும் விவ­சா­யிகள் அத்­து­மீறி வேளாண்மை நட­வ­டிக்கை ஈடு­பட்­டு­வந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி திரு­கோ­ண­மலை அர­சாங்க அதி பர் காரி­யா­லயத்தில் மட்­டக்­க­ளப்பு, அம் ­பாறை, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க ளின் கால்­ந­டை­க­ளுக்­கான மேய்ச்சல் தரை தொடர்­பாக அமைச்சர் பிரே­ம­ஜெ­யந்த தலை­மையில் கலந்­து­ ரை­யாடல் ஓன்று இடம்பெற்றது இதில் அமைச்­சர்­க­ளான அதா­வு ல்லா, ரவூப்­ஹக்கீம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ணசபை அமைச்­சர்கள் , உறுப்­பி­னர்கள், பிர­தேச செய­லா­ளர்கள் உட்பட உயர் அதி­கா­ரிகள் கலந்­து­ கொண்­ட னர் இதன்­போது, இங்கு விசே­ட­மாக அம்­பாறை வட்­ட ­மடு மேய்ச்சல்­தரை பிரச்சினை கலந்­து­ரை­யா­டப்­பட்­டது இதில் அமைச்சர் பிரே­ம­ஜெ­யந்த இது ஒரு கலந்­து­ரை­யாடல் எனவும் இதற்­கான தீர்வு இங்க வழங்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் வட் ­ட­மடு மேய்ச்சல் தரை தொடர்­பாக ஒரு குழு அமைக்­கப்­ப ட்டு அந்த குழு கள­நி­ல­வ ­ரங்­களை பார்­ வை­யிட்டு அதன் பின்னர் அம்பாறை கச்­சே ரியில் கலந்­து­ரை­யாடல் நடை­பெற்று பின் னர் தீர்வு காணப்­படும் என தெரிவித்து தீர்­மா­னிக்­கப்­பட்­டது இவ்­வாறு தீர்­மா­னிக்­கப்­ப ட்ட பின்னர் வட்­ட­மடு மேய்ச்சல் தரை பிர­தே­சத்தில் உள் 4 கண்ங்கள் உள்­ளிட்ட 1380 ஏக்கர் நிலப்­ப­ர ப்பில் வேளாண்மை செய்­வ­தற்கு அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்­ப ட்ட தீர்­மா­னத்தில் அனு­ம­தி­வ­ழங்­கு­மாறு வன­ப­ரி­பா­லன சபை யின் தலை­வ­ருக்கு பணிக்க­ப்பட்டு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது இவ் அனு­ம­தி­யா­னது ஒரு­த­லைப்­பட்­ச­மா­னது என கண்­டித்து ஆலை­டி­வேம்பு, திருக்­கோவில், அக்­க­ரைப்­பற்று, அட்­டா­ளைச்­சேனை பிர­தேச கால்­நடை வளர்ப்பு சங்­­கத்­தினர் இதனை மீள்­பரீ­சி­லனை செய்­ய­வேண்டும் எனவும் இல்­லா­வி டில் 40 ஆயிரம் கால்­ந­டை­களை அர­சு­பெ­றுப்­பேற்று கால்­ந­டை­யா­ளர்­க­ளுக்கு நஷ்­ட­ஈட்டை வழங்க வேண்டும் என இதற்­கான தீர்வு கிடைக்­கும்­வரை சாகும்­வரை உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டு­ள்ளனர்
இவ் உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் மஹிந்த சிந்­த­னையில் பால் உற்­பத்­தியை அதி­க­ரி­க­வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­ட­போதும் இத் தீர்­மா­னத்­துக்கு மாறாக அம்­பாறை மாவட்­டத்தில் பால்­உற்­பத்­தி மழுங்­க­டிக்­கப்­ப­டு­கின்­றது, வட்­ட­மடு மேச் சல் தரையில் நீதி நித்­திரை கொள்­கின்­றதா, போன்ற சுலோ­கங்கள் தாங்­கி­ய­வாறு 50 மேற்­பட்டோர் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காரை 6.00 மணியில் இருந்து போராட்­ட த்தில் ஈடு­பட்டன.
இதே­வேளை இவ் சாகும்­வரை உண்­ணா ­வி­ரத போராட்டம் நேற்று ஆரம்­பா­மான நிலை யில் கால்­ந­டை­யா­ளர்­க­ளுடன் கிழக்கு மாகா­ ண­சபை உறுப்­பினர் ஏ.எல்.எம் தவம் தலை­மையில் விவ­சா­யிகள் கால்­ந­டை­யா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்று அதில் கால்­ந­டை­யா­ளர்கள் 500 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் வேளாண்மை செய்­வ­தற்கு தற்­கா­லி­க­மாக அனுமதித்து அவ் இடங்களை சென்று பார்வையிட்டு தீர்மானிப்பதற்காக வட்டமடு பிரதேசத்துக்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் இருபகுதியினரும் தீர்மானம் எதுவும் எட்டப்படாததையடுத்து உண்ணாவிரதம் இடம்பெற்றது.
அதே வேளை விவசாயிகள் வோளாண்மை செய்வதற்கு வனபரிபாலனசபை அனுமதி வழங்கியுள்ள நிலையில் கால்நடையாளர்கள் தங்களை வேளாண்மை செய்ய விடாது தடுத்து வருவதாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
« PREV
NEXT »

No comments