Latest News

December 09, 2013

கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஊழல் மோச­டியை நிரூ­பித்தால் உப­வேந்தர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­கிறேன்
by admin - 0

கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் நான் உப­வேந்­த­ராக பத­வி­யேற்­ற­தி­லி­ருந்து பத்து ரூபா­வேனும் ஊழல் மோசடி செய்­தி­ருப்­ப­தாக நிரூ­பிக்­கப்­பட்டால் எனது உப­வேந்தர் பத­வி­யினை உட­ன­டி­யாக இரா­ஜி­னாமா செய்­து­வி­டுவேன் என கிழக்குப் பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் கலா­நிதி கிட்னண் கோபிந்­த­ராஜா தெரி­வித்தார்.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உயர் கல்வி அமைச்சின் வரவு- செலவுத் திட்டம் மீதான விவா­தத்தில் கலந்­து கொண்டு உரை­யாற்­றிய மட்டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன். செல்­வ­ராசா கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்­பெ­று­வ­தா­கவும் இதனைத் தடுத்து நிறுத்த ஆணைக்­குழு நிய­மிக்­கு­மாறும் கேட்டுக் கொண்­ட­தாக நேற்று முன்­தினம் வீர­கே­சரி பத்­தி­ரி­கை­யிலும் இணை­யத்­த­ளங்­க­ளிலும் வெளி­யான செய்­தி­யினைத் தொடர்ந்து உப­வேந்­தரின் மட்­டக்­க­ளப்பு வாசஸ்­த­லத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று முன்­தினம் இடம்­பெற்­ற­போதே உப­வேந்தர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது­பற்றி அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,நான் இப்­பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு வந்த போது பல்­வே­று­பட்ட பிரச்­சி­னை­களும் பின்­ன­டை­வு­களும் காணப்­பட்­டன. அவற்­றை­யெல்லாம் படிப்­ப­டி­யாக நிவர்த்தி செய்து மாண­வர்கள் சுதந்­தி­ர­மா­கவும் நிம்­ம­தி­யா­கவும் கற்­றுக்­கொள்­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம்.
சுமார் 2000 மில்­லியன் ரூபா­விற்கு அதி­க­மான நிதி­யினைப் பெற்று இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தின் அபி­வி­ருத்­திக்காக செலவு செய்து வரு­கின்றோம்.இது மட்­டு­மல்­லாமல் எதிர்­கா­லத்தில் சுமார் 5000 மில்­லியன் ரூபா­வினைப் பெற்று பல்­க­லைக்­க­ழ­கத்தின் அபி­வி­ருத்­தியைப் பயன்­ப­டுத்த திட்­டங்­களை வரைந்து கொண்­டி­ருக்­கின்றோம். பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்­பா­டுகள் சிறப்­பாக உள்­ளது என எல்­லோ­ராலும் பேசப்­ப­டு­கின்ற இத்­த­ரு­ணத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன். செல்­வ­ராசா பல்­க­லைக்­க­ழ­கத்­தின்­மீது சேறு பூசு­வ­தாக அமைந்த கருத்து மிகுந்த வேத­னை­யினை அளிக்­கி­றது.
பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிறந்த கட்­ட­மைப்­பினைக் குழப்­பி­விட்டு கடந்த காலங்­க­ளைப்போல் செயற்­ப­டாமல் இருந்து கொண்டு ஊதி­யத்­தினைப் பெற எத்­த­னிக்கும் சில நாச­கார செயற்­பாட்­டா­ளர்­களின் சதி வலையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிக்­கி­யி­ருப்­பது கண்டு கவ­லைப்­பட வேண்­டி­யுள்­ளது. பல்­க­லைக்­க­ழக அபி­வி­ருத்­தி­க­ளுடன் இணைந்து செயற்­பட வேண்­டிய மக்கள் பிர­தி­நி­திகள் உண்­மைக்குப் புறம்­பான விட­யங்­களைச் சொல்லி சமூ­கத்தின் கல்வி நிறு­வ­ன­மான பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு சேறு பூச விளை­வது கவ­லை­ய­ளிக்­கின்­றது.
கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் இது­வரை இருந்த பல கட்­ட­மைப்­பு­களை மாற்றம் செய்­தி­ருக்­கிறோம்.கல்வி நட­வ­டிக்­கைகள்,பெள­தீக வளங்கள் போன்­றன பாரிய மாற்றம் பெற்­றி­ருக்­கின்­றன. இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தில் சேவை­யாற்­று­ப­வர்கள் மனம் விரும்பி சேவை­யாற்றும் வகை­யிலும் கற்­கின்ற மாண­வர்கள் துறைசார் பட்­டங்­களை குறிப்­பிட்ட கால எல்­லைக்குள் கால­தா­ம­த­மின்றி பட்­டங்­களைப் பெற்று விரைவில் தொழில் வாய்ப்­பினை பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­யதாய் வடி­வ­மைத்­தி­ருக்­கின்றோம்.
பல்­க­லைக்­க­ழ­கத்­திற்குள் மோசடி செய்து வாழ்க்கை நடத்த வேண்­டிய தேவை எனக்கு ஒரு போதும் ஏற்­பட்­ட­தில்லை. எமது பிராந்­திய மக்­க­ளுக்­கா­கவும் மாண­வர்­க­ளுக்­கா­க­வுமே நான் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு வந்து கட­மை­களை பொறுப்­பேற்றேன்.
எனது பிள்­ளை­களின் கல்வி நட­வ­டிக்­கை­களில் பாதிப்பு ஏற்­பட்­டது மட்­டு­மல்­லாமல் கடந்த காலத்தில் பெற்று வந்த பல இலட்சம் ரூபா ஊதி­யத்­தி­னைக்­கூட துச்­ச­மென உதறித் தள்­ளி­விட்டே இங்கு நான் வந்தேன்.
கடந்த 30 வருட யுத்­தத்­தினால் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்டு பின் தங்­கி­யி­ருந்த எமது பல்­க­லைக்­க­ழ­க­மா­னது கடந்த சில வரு­டங்­க­ளாக எனது நிரு­வா­கத்தின் கீழ் மிகவும் சிறப்­பான முறையில் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரு­வது யாவரும் அறிந்­ததே. எமது பல்­க­லைக்­க­ழக அபி­வி­ருத்­தியில் அர­சாங்­கமும் உயர்­கல்வி அமைச்­சரும் பார­பட்­ச­மின்றி வழங்கி வரும் உத­வி­க­ளுக்கு நன்­றி­களைத் தெரி­விக்கும் அதே­வேளை, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் உரை­யா­னது பல்­க­லைக்­க­ழக அபி­வி­ருத்­தி­யினை குழப்­பு­வ­தா­கவே பார்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.
பல்­க­லைக்­க­ழ­கத்தின் அபி­வி­ருத்­தி­களை திட்­ட­மிட்டு குழப்­பு­வ­தற்­காக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் ஒரு சில விரி­வு­ரை­யா­ளர்­களின் பொய்ப் பிர­சா­ரங்­களை நம்­பிக்­கொண்டு அது விட­ய­மாக ஆரா­யாமல் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யமை கவலை தரு­கின்­றது. கிழக்கு பல்­க­லைக்­க­ழக அபி­வி­ருத்­திகள் சம்­பந்­த­மா­கவோ அல்­லது நிரு­வாக செயற்­பா­டுகள் சம்­பந்­த­மா­கவோ சந்­தே­கங்கள் இருந்­தி­ருந்தால் பல்­க­லைக்­க­ழக நிரு­வா­கத்­தி­ன­ரோடு தொடர்பு கொண்டு ஆராய்ந்த பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யி­ருக்க வேண்டும்.
மக்­களின் உரி­மை­க­ளுக்­காக போரா­டு­கின்றோம் என்று அர­சாங்­கத்­திற்கு எதி­ரான அறிக்­கை­களை தமிழ் பத்­தி­ரி­கை­க­ளுக்கு மாத்­திரம் விடுத்­துக்­கொண்டு பின்கதவு வழி­யாக அர­சாங்க அமைச்­சர்­களை அணுகி தங்கள் பிள்­ளை­க­ளுக்கும் குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கும் தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொ­டுக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிலரின் நட­வ­டிக்­கை­களை மக்கள் நன்கு விளங்­கி­யி­ருப்­பார்கள் என்­பது எனது திட­மான நம்­பிக்­கை­யாகும்.
கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் நிய­ம­னங்­கள் அனைத்தும் பக்­கச்­சார்­பற்ற முறையில் திற­மையின் அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்டு வரு­வது யாவரும் அறிந்த விட­யமே.
எனக்கு முன்னர் கட­மை­யாற்­றிய ஆறு உப­வேந்­தர்­களும் தமக்­கான பத­விக்­காலம் முடியும் முன்பு இங்­குள்ள சிலரால் திட்­ட­மிட்டு துரத்­தப்­பட்ட வர­லா­று­களை மட்­டக்­க­ளப்பு மக்கள் நன்கு அறிந்­தி­ருப்­பார்கள். அந்த வகையில் ஏழா­வது உப­வேந்­த­ரான என்­னையும் எனது பத­விக்­காலம் முடியும் முன் துரத்­தி­விட திட்­ட­மிட்டு செயற்­படும் சில தீய சக்­தி­க­ளுடன் கெள­ரவ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அவர்­களும் இணைந்­துள்­ளமை மிகுந்த வேத­னை­ய­ளிக்­கின்­றது. கிழக்கு பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­பீட கட்­டட வேலைகள் சம்­பந்­த­மாக கெள­ரவ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விடுத்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய கடப்­பாடு உப­வேந்­தர்கள் என்ற வகையில் எனக்­குள்­ளது.
கடந்த வரு­டத்தில் ஜூலை மாதத்தில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸா­நா­யக்காவினால் அடிக்கல் நாட்­டப்­பட்ட கட்­டட வேலைகள் இப்­போது துரித கதியில் நடை­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இதற்­கான இரண்டு லோட் மண் மாத்­தி­ரமே வந்து சேர்ந்­துள்­ளது என்று கூறி­யி­ருப்­பது மக்கள் மத்­தியில் பல்­க­லைக்­க­ழ­கத்தின் நற்­பெ­ய­ருக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்தும் செய­லா­கவே பார்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. கட்­டட ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளுக்கு வேலை­களை ஒப்­ப­டைப்­ப­தற்கு முன்பு அர­சாங்­கத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட விதி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கால அவ­கா­சங்கள் தேவைப்­ப­டு­வது யாவரும் அறிந்த விட­யமே. இவ் அடிப்­படை நிய­தி­க­ளைக்­கூட விளங்­கிக்­கொள்ள முடி­யாமல் ஒரு சில விரி­வு­ரை­யா­ளர்கள் மூல­மாக கெள­ரவ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வழி­ந­டத்­தப்­பட்­டி­ருக்­கிறார் என்றே எண்ணத் தோன்­று­கி­றது.
கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் திரு­கோ­ண­மலை வளா­கத்திலும் சுவாமி விபு­லா­னந்த கற்கை நிறு­வகம் மற்றும் மருத்­துவ பீடத்­திலும் நடை­பெற்று வரு­கின்ற பாரிய அபி­வி­ருத்­தி­களை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு முறை­யேனும் சென்று பார்ப்­பா­ரே­யானால் இது போன்ற தவ­றான உரை­யினை பாரா­ளு­மன்­றத்தில் நிகழ்த்­தி­யி­ருக்­க­மாட்டார்.
கிழக்குபல்­க­லைக்­க­ழ­கத்தில் கடந்த காலங்­களில் நடை­பெற்று வந்த ஊழல்கள் அனைத்தும் எமது நிரு­வா­கத்தின் கீழ் முற்று முழு­தாக ஒழிக்­கப்­பட்டு கல்வி சார் நட­வ­டிக்­கை­க­ளிலும் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­வது இன்று அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட உண்­மை­யாகும்.
இதுபோன்ற சேறு பூசுகின்ற உரைகளோ, அறிக்கைகளோ எமது பல்கலைக்கழக அபிவிருத்திக்கான பயணத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தினை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்றி மாணவர்களுக்கும் எமது பிராந்தியத்திற்கும் சிறந்த சேவைகளை வழங்கும் எமது உறுதியான நோக்கில் எவ் இடையூறுகள் வந்த போதிலும் தளராமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழ கத்தின் பதிவாளர் கே. மகேசன், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி என்.லோகேஸ்வரன், செளக்கிய பராமரிப்பு பீடாதிபதி கலாநிதி ரி.சுந்தரேசன், கலைப் பீடாதிபதி கலாநிதி கே.இரா ஜேந்திரம், விவசாய பீடாதிபதி கலாநிதி எஸ். சுத ர்சன், விஞ்ஞான பீட பதில் பீடா திபதி கலாநிதி முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
« PREV
NEXT »

No comments