Latest News

December 09, 2013

மண்டேலாவின் வழியை பின்பற்றுவது அவசியம்
by admin - 0

உல­கையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்ள மனித நேயம் மற்றும் ஜன­நா­ய­கத்தின் தந்தை நெல்சன் மண்­டே­லாவின் மறை­வுக்கு உலகத் தலை­வர்கள் இரங்கல் செய்­தி­களை அனுப்­பி­வ­ரு­வ­துடன் எதிர்­வரும் 15 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை தென்­னா­பி­ரிக்­காவில் நடை­பெ­ற­வுள்ள அன்­னாரின் இறுதிச் சடங்கில் கலந்­து­கொள்­வ­தற்கும் தயா­ரா­கி­வ­ரு­கின்­றனர்.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா மற்றும் இந்­திய பிர­தமர் மன்­மோ­கன்சிங் உள்­ளிட்ட பல முக்­கிய உலக தலை­வர்கள் தென்­னா­பி­ரிக்கா செல்­வ­தற்கு தயா­ரா­கி­யுள்­ள­துடன் மண்­டே­லாவின் இழப்பு ஈடு செய்ய முடி­யாது என்று தெரி­வித்­துள்­ளனர்.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை கால­மான தென்­னா­பி­ரிக்க முன்னாள் ஜனா­தி­ப­தியும் உலகின் மாபெரும் தலை­வ­ரு­மான நெல்சன் மண்­டே­லாவின் மறைவுச் செய்­தி­ய­றிந்து உல­கெங்கும் பல கோடிக் கணக்­கானோர் துயரில் ஆழ்ந்­துள்­ளனர். கடந்த வெள்ளிக்­கி­ழமை முதல் தென்­னா­பி­ரிக்­காவின் ஜொஹன்னஸ் பேர்க் நகரில் கூடி­வரும் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் அன்­னா­ருக்கு இறுதி அஞ்­ச­லியை செலுத்­தி­வ­ரு­கின்­றனர்.
தென்­னா­பி­ரிக்­காவில் நிற­வெ­றிக்கு எதி­ராக பல வரு­டங்­க­ளாக போராடி வந்த நெல்சன் மண்­டேலா தனது 95 ஆவது வய­தி­லேயே கடந்த வெள்­ளிக்­கி­ழமை கால­மானார். நிற­வெறி அடக்கு முறை­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு கொடு­மை­களை அனு­ப­வித்து வந்த மண்­டேலா மக்­களை மீட்­டெ­டுத்த மீட்­ப­ராக திக­ழ்ந்தார். 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி குனு என்ற கிரா­மத்தில் பிறந்த நெல்சன் மண்­டேலா நிற­வெறி அடக்கு முறைக்கு எதி­ராக போராடி 27 வரு­டங்கள் சிறை­வாசம் அனு­ப­வித்­தவர். மண்­டேலா 1962இல் சிறையில் அடைக்­கப்­பட்டார். உலக வர­லாற்­றி­லேயே மண்­டே­லாவை போன்று இவ்­வ­ளவு நீண்ட காலம் சிறை­வாசம் அனு­ப­வித்த தலை­வர்கள் வேறு எவரும் இல்லை.
27 ஆண்­டுகள் சிறையில் கொடு­மை­களை அனு­ப­வித்­து­வந்த மண்­டே­லா­வுக்கு மனை­வியைச் சந்­திப்­ப­தற்­குக்­கூட அனு­மதி மறுக்­கப்­பட்­டது. அந்­த ­வ­கையில் 1988-ஆம் ஆண்டு கடு­மை­யான நோய் ஏற்­பட்டு, மர­ணத்தின் எல்­லைக்கே சென்ற நிலையில் வீட்­டுச்­சி­றைக்கு மாற்­றப்­பட்டார்.
தேசத்­து­ரோக குற்­றச்­சாட்டில் 27 வரு­டங்கள் சிறை­வாசம் அனு­ப­வித்­து­விட்டு 1990 ஆண்டு மண்­டேலா சிறை­யி­லி­ருந்து விடு­தலை பெற்­ற­போது அவ­ருக்கு 71 வயது. மண்­டேலா அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்­காவின் முதல் கறுப்­பின ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார்.
ஜனா­தி­ப­தி­யா­னதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு முதல் தென்­னா­பி­ரிக்கப் பாட­சா­லை­களில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜ­ராத்தி, உருது ஆகிய மொழி­களை கற்றுக் கொடுக்க ஏற்­பாடு செய்­தமை முக்­கிய விட­ய­மாக பார்க்­கப்­ப­டு­கின்­றது. மொழிப் பிரச்­சி­னை­களின் கார­ண­மாக சிக்கித் தவிக்கும் நாடு­க­ளுக்கு இது சிறந்த உதா­ரண செயற்­பா­டாகும். தென்­னா­பி­ரிக்­காவின் முத­லா­வது கறுப்­பின ஜனா­தி­ப­தி­யாக 1994 ஆம் ஆண்டு தெரிவு செய்­யப்­பட்ட மண்­டேலா 1999 ஆண்டு பத­வியை விட்டு வில­கி­ய­துடன் இரண்­டா­வது முறை ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யிட மறுத்­து­விட்டார்.
ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வில­கிய பின்­னரும் உலக அமைப்­புக்­களில் இணைந்து கொண்டு மக்­க­ளுக்கு பல்­வேறு சேவை­களை ஆற்­றி­யுள்ளார். உலக மக்­களின் மாபெரும் தலை­வ­ரா­கவும் மனித நேயத்தின் உற்ற நண்­ப­னா­கவும் மண்­டேலா விளங்­கினார்.
தென்­னா­பி­ரிக்­காவில் வன்­முறை இடம்­பெற்ற கால­கட்­டத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த தனது விடு­த­லையின் பின்னர் மண்­டேலா முயற்­சி­களை முன்­னெ­டுத்தார். அதன் ஒரு கட்­டமாக உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிய­மித்து நல்­லி­ணக்­கத்­துக்கு வலி­கோ­லினார்.
இந்த நல்­லி­ணக்க செயற்­பா­டு­களின் ஊடாக பழி­வாங்­கலை விடுத்து உண்­மை­யையும் நியா­யத்­தையும் பெறு­வ­தற்­கான ஒரு முறைமை உரு­வாக்­கப்­பட்­டது. உல­கி­லேயே மிகவும் வலு­வான சிறந்த ஆணைக்­கு­ழு­வென இந்த உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு பெயர் பெற்­றுள்­ளது.
உலக சமா­தா­னத்­துக்­காக மண்­டேலா ஆற்­றிய சேவை­களைப் பாராட்டி அவர் சிறையில் இருக்­கும்­போதே இந்­திய அரசு "நேரு சமா­தான விருது" வழங்­கி­யி­ருந்­தமை விசேட அம்­ச­மாகும்.
உலகின் மிக உய­ரிய விரு­தாக கரு­தப்­படும் உலக அமை­திக்­கான நோபல் பரிசு 1993 ஆண்டில் இவ­ருக்கு வழங்­கப்­பட்­டது. அத்­துடன் அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான மகாத்மா காந்தி சர்­வ­தேச விருது மண்­டே­லா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 1990ஆம் ஆண்டில் இந்­தி­யாவின் 'பாரத ரத்னா' விருதும் இந்த உன்­னத மனி­த­ருக்கு வழங்­கப்­பட்­டது.
மண்­டே­லாவின் மறை­வுக்கு அனு­தாப செய்­தியை வெளி­யிட்­டுள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தென்­னா­பி­ரிக்க சுதந்­தி­ரப்­போ­ராட்­டத்­திற்­கான அவ­ரது துணிச்­சல்­ மி­குந்த தலை­மைத்­துவம் முன்­னு­தா­ர­ண­மிக்­கதும் உல­­கெங்­கி­லு­முள்ள சமா­தா­னத்தை விரும்பும் மக்­களை பெரிதும் ஈர்த்­த­து­மாகும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.
மேலும் காலஞ்சென்ற மண்­டேலா சமா­தா­னத்தின் அடை­யா­ள­மா­கவும் சுதந்­தி­ரத்தின் கலங்­க­ரை­வி­ளக்­க­மா­கவும் திகழ்ந்தார். அவர் ஏற்­ப­டுத்­திய சமா­தா­னமும் முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்ட வாழ்க்கைத் தத்­து­வமும் சமா­தா­னத்­திற்­காக நீண்­ட­கா­ல­மாக முயற்­சித்­து­வரும் இலங்­கை­யி­லுள்ள எங்­க­ளுக்கும் மிகப்­பெரும் முன்­னு­தா­ர­ண­மாகும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார். அவ­ரது வாழ்க்­கையும் தத்­து­வமும் எனக்குள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்ற வகையில் தலைவர் மண்­டே­லாவின் இழப்பை தனிப்­பட்ட முறையில் நான் ஒரு பேரி­ழப்­பாகக் கரு­து­கிறேன் என்றும் ஜனா­திபதி குறிப்­பிட்­டுள்ளார்.
இந்­நி­லையில் தென்­னா­பி­ரிக்க முதல் கறுப்பு இன ஜனா­தி­ப­தியும் நிற­வெ­றிக்கு எதி­ராக போராடி அதில் வெற்­றி­கண்­ட­வ­ரு­மான உலகின் உன்­னத தலை­வ­ரான மண்­டேலா மறைந்­து­விட்ட நிலையில் உலகில் இன்னும் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டிய பல நாடுகள் உள்­ளன. உலகின் பல இடங்­க­ளிலும் இன்னும் அடக்கு முறைகள் இருந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றன. அவற்­றுக்கு நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களும் தேவைப்­பட்­டுக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. மண்­டேலா மறைந்­து­விட்­டாலும் அவர் தீர்ப்­ப­தற்­காக போரா­டிய பிரச்­சி­னைகள் உலகில் இன்னும் தொடர்­கின்­றன.
30 வரு­ட­கால மோதல்­நிலை முடி­வுக்கு வந்­துள்ள இலங்­கையில் மக்­க­ளுக்கு இடையில் தேசிய ஒற்­று­மையும் நல்­லி­ணக்­கமும் விரை­வாக ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்று சர்­வ­தேச மட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றது. இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தென்­னா­பி­ரிக்கா தனது அனு­ப­வங்­களை பகிர்ந்­து­கொள்ள தயா­ராக இருப்­ப­தாக அண்­மையில் பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்ள வந்­தி­ருந்த அந்­நாட்டு ஜனா­தி­பதி ஜேக்கப் சுமா தெரி­வித்­தி­ருந்­த­துடன் அதற்கு இலங்கை அர­சாங்­கமும் சாத­க­மான பதிலை வெளியிட்டிருந்தது.
இதனிடையே நெல்சன் மண்டேலாவின் மறைவின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, 'அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார். 11 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்த சந்திரிகா குமாரதுங்கவின் கூற்றை இலகுவாக எடுக்க முடியாது.
எனவே இலங்கையில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு நெல்சன் மண்டேலாவின் அனுபவ பாடங்களை கற்றுக்கொள்வது பயன்மிக்கதாகவே அமையும். அவரின் பாதையில் சென்று பொறுமை வழியில் நல்லிணக்கத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வையும் அடைவதே சாலச் சிறந்ததாக அமையும் என்பதனை உலகமே சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகின்றோம்.
« PREV
NEXT »

No comments