Latest News

December 07, 2013

கிழக்கு பல்­க­லையில் பாரிய ஊழல் மோசடி ஆணைக்­குழு அமைத்து தடுத்து நிறுத்­தவும்- பொன். செல்­வ­ராசா எம்.பி
by admin - 0

கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பாரிய ஊழல் மோச­டிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. எனவே, கிழக்குப் பல்­க­லையின் ஊழல் மோச­டி­களைத் தடுப்­ப­தற்கும் அதனை ஆராய்ந்து விசா­ரிப்­ப­தற்கும் ஆணைக்­குழு ஒன்றை ஸ்தாபிக்­கு­மாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட எம். பி. யான பொன். செல்­வ­ராசா நேற்று பாரா­ளு­மன்­றத்தில் கல்வி அமைச்­சிடம் கோரிக்கை விடுத்தார்.
இதே­வேளை, சிறு­வர்­களின் மன­நி­லையை பாதிப்­ப­டையச் செய்­கி­ற­தான ஐந்தாம் ஆண்டுப் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் அவர் கல்வி அமைச்­சரைக் கேட்­டுக்­கொண்டார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் ஐந்தாம் நாள் குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்ட கோரிக்­கை­களை முன் வைத்தார்.
கல்வி உயர் கல்வி அமைச்­சுக்­க­ளுக்­கான நிதி­யொ­துக்­கீடு தொடர்­பான விவா­தத்தில் பேசிய பொன் செல்­வ­ராசா எம். பி. இங்கு மேலும் கூறு­கையில்,
அர­சாங்­கத்தின் 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு-செலவுத் திட்­டத்தில் கல்­விக்­காக 125 பில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் ஆசி­ரி­யர்­களின் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வு­க­ளுக்­கென 80 பில்­லியன் ரூபாவும் 10 பில்­லியன் ரூபா பாட­சாலை உப­க­ர­ணங்கள் மற்றும் சீரு­டைக்­கெ­னவும் மிகு­தி­யான 35 பில்­லியன் ரூபா ஏனைய தேவை­க­ளுக்­கெ­னவும் வரை­யறை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.
எனினும் ஆசி­ரியர் பயிற்சிக் கலா­சா­லைகள் கல்­வி­யியற் கல்­லூரி தொடர்பில் இங்கு குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஆனால் மக­ர­க­மை­யி­லுள்ள ஆசி­ரியர் பயிற்­சிக்­க­லா­சா­லைக்கு மாத்­திரம் 750 மில்­லியன் ரூபா பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. இது இங்கு ஓதுக்­கப்­பட்­டுள்ள நிதியில் தான் ஏனை­யப்­ப­கு­தி­களைச் சேர்ந்த கலா­சா­லை­களும் அடங்­கு­கின்­றன.
மட்­டக்­க­ளப்பில் இயங்கி வரு­கின்ற ஆசி­ரியர் பயிற்சிக் கலா­சாலை எவ்­வா­றான நிலையில் இருக்­கின்­றது என்­பதை நீங்கள் வந்து பார்­வை­யிட வேண்டும். அந்த கட்­டி­டங்கள் தற்­போது தூர்ந்து போன நிலையில் காணப்­ப­டு­கின்­றன.
ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் திட்டம் தொடர்பில் கூற வேண்­டி­யுள்­ளது. இந்தப் பரீட்­சை­யா­னது சிறு­வர்­க­ளுக்கு ஒரு­வித சுமையை ஏற்றி வைக்­கின்ற திட்­ட­மா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இம்­முறை இந்தப் பரீட்­சை­களின் பெறு­பே­றுகள் சர்­வ­தேச சிறுவர் தினத்தில் தான் வெளி­யா­கி­யி­ருந்­தது. எனினும் அன்­றைய தினத்தில் பல சிறு­வர்கள் பெற்­றோரின் தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­கான சந்­தர்ப்­பங்­களும் அமைந்­தன.
இத்­திட்டம் தொடர்­பி­லான மாற்று நட­வ­டிக்கை குறித்த கல்வி அமைச்சின் அறி­விப்­பினை இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவும் வர­வேற்­றி­ருக்­கின்­றது. ஐந்தாம் ஆண்­டுக்­கான புல­மைப்­ப­ரிசில் திட்­ட­மா­னது குழந்தைப் பருவம் என்­பதால் இதனை மாற்­றி­ய­மைக்கும் பட்­சத்தில் சிறு­வர்­களும் பெற்­றோர்­களும் மகிழ்ச்­சி­ய­டைவர்.
மேலும் ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் வெட்­டுப்­புள்ளி தொடர்பில் சிக்கல் நிலை ஒன்று காணப்­ப­டு­கின்­றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆம் ஆண்டுக்கான வெட்டுப்புள்ளியாக 155 என இறுதி செய்யப்பட்டிருக்கின்றது எனினும் 154 புள்­ளி­களைப் பெறும் சிறுவன் ஒருவன் இந்த வெட்டுப் புள்­ளிக்குள் உள்­வாங்­கப்­ப­டு­வ­தில்லை. ஒரு பாடத்தில் 75 புள்­ளிகள் பெற்­றி­ருந்­தாலும் அது அதி திறமைச் சித்­தி­யாகும் என்­பது இங்கு கவ­னிக்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.
நாடு முழு­வ­திலும் தற்­போது 149 பாட­சா­லைகள் வன். ஏ. பி. தரப் பாட­சா­லை­க­ளாக தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ளன. எனினும் கிழக்கில் இரண்டே பாட­சா­லைகள் மாத்­தி­ரமே இவ்­வாறு வன். ஏ. பி. தரத்­திற்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளன.
இவ்­வாறு தர­மு­யர்த்­தப்­பட்ட மேற்­படி இரண்டு பாட­சா­லை­க­ளிலும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. கோட்­டைக்­கல்­லாறு பாட­சா­லையில் கணிதம் மற் றும் விஞ்­ஞானம் ஆகிய பாடங்­க­ளுக்கு ஆசி­ரி­யர்கள் இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது.எனவே, பாட­சா­லைகள் தர­மு­யர்த்­தப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்­களின் போது அதன் குறை­பா­டு­களும் நிவர்த்­திக்­கப்­பட வேண்டும்.
இதே போன்று கிழக்­குப்­பல்­க­லைக்­க­ழ­கத்தில் மிருக வைத்­திய பீடம் மற்றும் விவ­சாய பீடம் சட்ட பீடம் ஆகிய பீடங்கள் இல்­லாத நிலை காணப்­பட்டு வரு­கின்­றது. சட்ட பீடம் இங்கு இல்­லா­ததால் அங்­குள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மாண­வர்கள் யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லேயோ அல்­லது கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தையோ நாட வேண்­டி­யுள்­ளது.
இவற்றைக் கருத்­திற்­கொண்டு கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நிலவி வரு­கின்ற மேற்­படி குறை­பா­டு­களை நிவர்த்­திப்­ப­தற்கு உயர் கல்வி அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்­கிறேன்.
இதே­வேளை கிழக்­குப்­பல்­க­லைக்­க­ழ­க­மா­னது வெளி­நாட்டுப் பிர­ஜை­யான உப­வேந்தர் ஒரு­வரின் கீழேயே இயங்கி வரு­கின்­றது. இங்கு பாரிய ஊழல் மோச­டிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. மட்­டக்­க­ளப்பு மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழுக் கூட்டம் மட்­டக்­க­ளப்பு கச்­சே­ரியில் இடம்­பெற்ற போது பிரதி அமைச்சர் ஒரு­வரும் இந்த விட­யத்தை முன் வைத்­தி­ருந்தார்.
எனவே கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஊழல் மோச­டி­களை தடுத்து நிறுத்­து­வ­தற்கும் விசா­ரிப்­ப­தற்­கு­மென ஆணைக்­குழு ஒன்றை அமைப்­ப­தற்கு அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்­கின்றேன். மட்­டக்­க­ளப்பில் வைத்­திய பீடம் ஒன்றை அமைப்பதற்காக ஒரு வருடத்துக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் அந்த வேலைத்திட்டம் மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்திற்கு முன்னதாக அடிக்கல் நாட்டப்பட்ட வேலைத்திட்டத்திற்கு தற்போது தான் இரண்டு லோட் மணல் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகமானது நோர் வே பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த போதிலும் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கிழக்குப்பல்கலைக்கழகம் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய ற்படுவதற்கான நடவடிக்கைகளையும் முன் னெடுக்குமாறு கேட்கிறேன் என்றார்.
« PREV
NEXT »

No comments