அக்கரைப்பற்று தபாற்கந்தோர் தபால் அதிபர், உத்தியோகத்தர்கள் ஊழியர்களை அச்சுறுத்தல் அடக்குமுறை மற்றும் தகாதவார்த்தை பிரயோகம் செய்துவருவதை கண்டித்து இவரை இடமாற்றுமாறு கோரி தபால் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் கடந்த மூன்று தினங்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்
இவ் தபாலகத்திற்கு கடந்த 11 ம் திகதி புதிய தபால் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தபால் அதிபர் தனது கடமையை பொறுப்பேற்றபின்னர் கடந்த வெள்ளிக்கிழமை தபால் அதிபர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளதாகவும் அதனை கண்டித்து வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்
இதனையடுத்து, அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு பிரதி அஞ்சல் அதிபர் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசி இணக்கப்பாட்டிற்கு கொண்டுவந்ததன் பிற்பாடு ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர்
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் ஊழியர்கள் கடமைக்கு சென்றபோது தபால் அதிபர் ஊழியர்களை அச்சுறுத்தி தபால்கந்தோருக்குள் மோட்டார்சைக்கிளை செலுத்தி மோட்டார்சைக்கிளின் வேகத்தை கூட்டி முறைகேடாக நடந்து கொண்டதையடுத்து ஊழியர்கள் தபால் கந்தோரைவிட்டு வெளியேறி தபால் அதிபரை இடம்மாற்றுமாறு கோரி தபாலகத்துக்கு முன்னால் வீதியில் நின்று பணிப்புறக்கணிப்பில் நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதேவேளை தபால் அதிபர் தெரிவிக்கையில் தான் இந்த மாதம் 11ம் திகதி தபாலகத்தின் தபால் அதிபராக கடமைகளை பொறுப்பேற்றதுடன் தபால் உழியர்சங்கத்தின் செயலாளராகவும் சிறந்த தபால் அதிபராகவும் அரசாங்கத்தினால் விருதுகள் பெற்றுள்ள நான் இவ் தபாலகத்திற்கு வந்ததும் இங்கு பார்த்தபோது தபாலகம் மாதிரி இல்லாத நிலையில் இருந்தது.
இதனையடுத்து, ஊழியர்களுடன் கலந்துரையாடி சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கப் போவதாக தெரிவித்து சட்டதிட்டத்திற்கு அமைவாக செயற்பட ஆரம்பித்ததையடுத்து என் மீது பல்வேறு காரணங்களை தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் இது தொடர்பாக எனது மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக தபால் அதிபர் தெரிவித்தார்
இதேவேளை, இவ் பணிப்புறக்கணிப்பால் தபாலக த்தின் தபால்சேவைகள் முடங்கி யுள்ளதுடன் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் தபால்விநியோகம்; கடந்த மூன்று தினங்கள் இடம்பெறவில்லை என்பதுடன் தபால்கந்தேரில் தபால்கள் குவிந்துள்ளமை குறிப்பி டத்தக்கது.
இவ் தபாலகத்திற்கு கடந்த 11 ம் திகதி புதிய தபால் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தபால் அதிபர் தனது கடமையை பொறுப்பேற்றபின்னர் கடந்த வெள்ளிக்கிழமை தபால் அதிபர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளதாகவும் அதனை கண்டித்து வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்
இதனையடுத்து, அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு பிரதி அஞ்சல் அதிபர் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசி இணக்கப்பாட்டிற்கு கொண்டுவந்ததன் பிற்பாடு ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர்
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் ஊழியர்கள் கடமைக்கு சென்றபோது தபால் அதிபர் ஊழியர்களை அச்சுறுத்தி தபால்கந்தோருக்குள் மோட்டார்சைக்கிளை செலுத்தி மோட்டார்சைக்கிளின் வேகத்தை கூட்டி முறைகேடாக நடந்து கொண்டதையடுத்து ஊழியர்கள் தபால் கந்தோரைவிட்டு வெளியேறி தபால் அதிபரை இடம்மாற்றுமாறு கோரி தபாலகத்துக்கு முன்னால் வீதியில் நின்று பணிப்புறக்கணிப்பில் நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதேவேளை தபால் அதிபர் தெரிவிக்கையில் தான் இந்த மாதம் 11ம் திகதி தபாலகத்தின் தபால் அதிபராக கடமைகளை பொறுப்பேற்றதுடன் தபால் உழியர்சங்கத்தின் செயலாளராகவும் சிறந்த தபால் அதிபராகவும் அரசாங்கத்தினால் விருதுகள் பெற்றுள்ள நான் இவ் தபாலகத்திற்கு வந்ததும் இங்கு பார்த்தபோது தபாலகம் மாதிரி இல்லாத நிலையில் இருந்தது.
இதனையடுத்து, ஊழியர்களுடன் கலந்துரையாடி சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கப் போவதாக தெரிவித்து சட்டதிட்டத்திற்கு அமைவாக செயற்பட ஆரம்பித்ததையடுத்து என் மீது பல்வேறு காரணங்களை தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் இது தொடர்பாக எனது மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக தபால் அதிபர் தெரிவித்தார்
இதேவேளை, இவ் பணிப்புறக்கணிப்பால் தபாலக த்தின் தபால்சேவைகள் முடங்கி யுள்ளதுடன் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் தபால்விநியோகம்; கடந்த மூன்று தினங்கள் இடம்பெறவில்லை என்பதுடன் தபால்கந்தேரில் தபால்கள் குவிந்துள்ளமை குறிப்பி டத்தக்கது.
No comments
Post a Comment