Latest News

November 24, 2013

பறிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் போராட்­டங்­களை கொச்­சைப்­ப­டுத்தும் கருத்தை ஜீர­ணிக்க முடி­யாது - வேலணை வேணியன்
by admin - 0

சுழல் பந்து வீச்­சாளர்" என்று பெருமை கொள்ளும் நீங்கள் அண்­மையில் வட­ப­கு­தியில் காணாமல் போனோர் தொடர்­பாக தெரி­வித்த கூற்று மிகுந்த கண்­ட­னத்­தையும் வெறுப்­பையும் தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் மனித உரிமை தொடர்­பான போராட்­டங்­களை கொச்­சைப்­ப­டுத்தும் வகையில் நீங்கள் தெரி­வித்­துள்ள கருத்து ஜீர­ணிக்க முடி­யாத ஒன்­றாகும். பிரித்­தா­னிய பிர­தமர் கம­ரூ­னுக்கு உள்ள நன்றி உணர்வு கூட தங்­க­ளுக்கு இல்­லா­தி­ருப்­பது வியப்பை அளிக்­கின்­றது என்று கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் வேலணை வேணியன் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.
பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கம­ரூ­னிடம் முத்­தையா முர­ளி­தரன் தெரி­வித்த கருத்து தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
1983ஆம் ஆண்டு ஜூலை கல­வ­ரத்தின் போது கொழும்பில் எனது இல்­லத்தில் ஒரு துரும்பு கூட இல்­லாது உடுக்கும் துணி­மணி தொடக்கம் வீட்­டினுள் இருந்த அனைத்து பொருட்­களும் எரித்­தொ­ழிக்­கப்­பட்­டன. கப்­ப­லிலே அக­தி­யாக யாழ்ப்­பாணம் சென்­றவன் நான் மட்­டு­மல்ல, பல்­லா­யி­ரக்­க­ணக் ­கான தமிழ் மக்­களும் அடங்­குவர். இவர்­களுள் எங்கள் உடன் பிறப்­பு­க­ளான மலை­யகச் சகோ­தர சகோ­த­ரி­களும் அடங்­குவர் என்­ப­தனை நீங்கள் அறி­வீர்­களா? வெவ்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் அலை அலை­யாக மக்கள் யாழ். நோக்கி கப்­பல்­களில் சென்­றனர். அந்த வடுக்கள் இன்னும் பாதிக்­கப்­பட்ட எம்­ம­வர்கள் மத்­தி­யி­லி­ருந்து இன்னும் அழி­ய­வு­மில்லை. அழி­யவும் மாட்­டாது. இந்தக் கண்ணீர் கதை­களை அறி­யாத ஒரு குழந்­தை­யல்ல நீங்கள் என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­வீர்கள். ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கொடிய யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட­ப­குதி மக்­களின் கண்ணீர் வெள்ளத்தை கண்டும் காணா­தது போல் நீங்கள் கூறி­யுள்ள கருத்து உல­கெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்­களை அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது.
இன்­றைய வட­ப­குதித் தமிழ் மக்­களின் பரி­தாப நிலையை அறிந்து அம் மக்­க­ளுக்­காகப் பலரும் குரல் கொடுத்து வரு­வ­தோடு மட்­டு­மல்ல, தமிழ் மக்­களின் பல்­வேறு போராட்­டங்­களின் தூய உணர்ச்­சி­க­ர­மான உள்­ளத்­துடன் கலந்து கொண்டும் வரு­கின்­றனர்.
வீடு எரியும்போது சுருட்­டுப்­பி­டிக்க நெரு ப்புக் கொள்ளி கேட்­டவன் கதை போல் உங்கள் விசித்­தி­ர­மான செய்­தி­களை பத்­தி­ரி­கை­களில் பார்த்து தமி­ழர்­க­ளா­கிய நாம் வெட்கித் தலை­கு­னி­கின்றோம்.
உங்­களைப் பெற்­றெ­டுத்­தது போன்றே அந்த தாய்மாரும் தங்கள் பிள்­ளை­களை பெற்றெ­டுத்து இன்று அவர்­களைக் காணாது தனித்து நின்று கண்ணீர் சிந்­து­கின்­றனர். தமிழ் மக்கள் மத்­தியில் மட்­டு­மல்ல, சிங்­கள மற்றும் தமிழ் பேசும் சகோ­த­ரி­களும் இன்று உற­வு­களைக் காணாது தெருத்­தெ­ருவாய் மனித உரிமை பேர­வை­களை நாடிச் சென்று கண்ணீர் வடித்துக் கொண்­டி­ருக்கும் செய்­தி­களை நீங்கள் வாசிப்­பதோ கேட்­பதோ இல்­லையா? மலை­ய­கமும் இதற்கு விதி­விலக்­கல்ல. அங்­கி­ருந்தும் ஓலக் குரல்கள் வரு­வது தங்­க­ளுக்குத் தெரி­யாதா?
மனித உரி­மை­களைக் காத்­து­வரும் வெளி­நாட்டுத் தலை­வர்­க­ளுக்கு இலங்கைத் தமி­ழர்கள் மீது உள்ள அக்­கறை ஏன் உங்­க­ளுக்கு இல்­லாமல் போனது என்­ப­தனை எண்ணி எங்கள் உள்­ளங்கள் வெதும்­பு­கின்­றன. இன்று பிரித்­தா­னியா, கனடா, அமெ­ரிக்கா போன்ற நாடுகள் மட்­டு­மல்ல, சீனா கூட மனித உரி­மை­களைப் பாது­காக்க வேண்டும் என இலங்­கைக்கு உரக்கக் குரல் கொடுத்து வரு­வ­தனைக் கூட நீங்கள் அறிந்­தி­ருக்­க­வில்­லையா?
நீங்கள் இன்­றைய அரசின் போக்­கு­களை தனித்து நின்று வான­ளாவ உயர்த்திப் பேசு­வதில் தமிழ் மக்­க­ளுக்கு எந்தவித கவ­லையும் இல்லை. உங்கள் வழியில் இன்னும் பல தமி­ழர்கள், தமிழ்த் தலை­வர்கள் உங்­க­ளுக்கு முன்­பாக அர­சாங்­கத்­தையும், அரச தலை­வர்­க­ளையும் புக­ழார மாலைகள் சூட்டி வாழ்த்­து­கி­றார்கள்.
ஆனால், தமிழ் மக்­களின் உண்­மை­யான மனித உரிமைப் போராட்­டங்­களை கொச்சைப்படுத்தும் தங்களது கருத்தை ஒட்டு மொத்த தமிழ் மக்களாலும் ஜீரணிக்கவே முடியாது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு இருக்கும் தமிழ் மக்கள் மீதான பற்றுக் கூட உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது என்பதனை அறிந்து தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிந்து கவலையில் ஆழ்ந்து நிற்கிறார்கள் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
« PREV
NEXT »

No comments