Latest News

November 24, 2013

யாழ்ப்பாணத்தில் மழையில்லை; விவசாயிகளுக்கு பெரும்பாதிப்பு
by admin - 0

யாழ். மாவட்­டத்தில் மழையை நம்பி கால­போக நெற்­செய்­கையில் ஈடு­பட்ட விவ­சா­யிகள் உரிய காலத்தில் மழை கிடைக்­கா­மை­யினால் நெற்­பயிர் கருகி நட்­ட­ம­டைய வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர்.
யாழில் கடந்த மாதம் மழை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில் விவ­சா­யிகள் கால­போக நெல் விதைப்பில் ஈடு­பட்­டனர். இந்த வயல்­களில் நெற்­பயிர் முளைத்து வளர்ந்து வரு­கின்ற நிலையில் உரிய காலத்தில் மழை கிடைக்­கா­மை­யினால் நீரின்றி நெற்­பயிர் கருக ஆரம்­பித்­துள்­ளது. மஞ்சள் நிற­மாகக் காணப்­ப­டு­கின்ற இந்த வயல்­க­ளுக்கு தற்­பொ­ழுது நீர் கிடைக்­கா­விடின் முழு­மை­யாக கருகி அழி­வ­டையும் எனவும் விவ­சா­யிகள் தெரி­விக்­கின்­றனர்.
குறிப்­பாக, வயல் நிலங்­களில் நீரின்­மையால் உரத்­தினைப் போட­மு­டி­யாத நிலையில் விவ­சா­யிகள் பாதிப்­ப­டைந்­துள்­ளனர். இதனால் சில விவ­சா­யிகள் கிண­றுகள், குளங்கள், கேணிகள், நீர்­நி­லை­க­ளி­லி­ருந்து வயல்­க­ளுக்கு நீரி­றைத்து வரு­கின்­றனர். நீர் பெறக்­கூ­டிய வச­தி­யில்­லாத வயல்­களில் உள்ள நெற்­பயிர் கருகி அழி­வ­டைந்­துள்­ளது.
வயல்­களில் காணப்­ப­டு­கின்ற கிண­று­களும் கேணி­களும் துப்­பு­ரவு செய்து பரா­ம­ரிக்­கப்­ப­டா­மையால் சிலர் செய்­வ­த­றி­யாத நிலையில் மழைக்­காக காத்­தி­ருக்­கின்­றனர். இதே­வேளை சில விவ­சா­யிகள் அதிக பணச் செல­வுடன் பவு­சர்­களை வாட­கைக்குப் பெற்று நீர் இறைக்­கின்ற செயல்­க­ளிலும் ஈடு­ப­டு­கின்­றனர்.
இது இவ்­வா­றி­ருக்க ஓரிரு தினங்­க­ளுக்குள் நீர் கிடைக்­கா­விடின் யாழ். மாவட்­டத்தில் கால­போ­கத்தில் நெல் விதைத்த விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப் பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments