Latest News

November 26, 2013

ராஜீவ் வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தியவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கலாம்- தியாகு
by admin - 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேர­றி­வாளன் வாக்­கு­மூ­லத்தை திருத்­தி­ய­தாக ஒப்­புக்­கொண்­டி­ருக்கும் அதி­கா­ரிக்கு தூக்குத் தண்­டனை விதிக்­கலாம் என தமிழ்த் தேசிய விடு­தலை இயக்­கத்தின் பொதுச்செய­லாளர் தியாகு தெரி­வித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ``ராஜீவ் கொலை வழக்கில் பேர­றி­வாளன் கொடுத்த வாக்­கு­மூலத்தை மறைத்து தாம் வச­திக்­கேற்ப வாக்­கு­மூ­லத்தை திருத்­தினேன் என்று 22 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் சி.பி.ஐ. முன்னாள் அதி­காரி தியா­க­ராஜன் ஒப்புக்கொண்­டி­ருக்­கிறார். இது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்த அதி­கா­ரியே தாம் பொய்­யான வாக்­கு­மூ­லத்தைக் கொடுத்தேன் என்று கூறி­யி­ருப்­பதால் இந்த வழக்கில் தூக்­குத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யி­ருக்கும் பேர­றி­வாளன் உள்­ளிட்ட மூவ­ரையும் விடு­விக்க வேண்டும் என்று தமி­ழ­கத்தில் கோரிக்கை வலுத்து வரு­கி­றது.
இந்­திய தண்­டனை சட்டம் 194 என்­பது பொய்­யான ஆவ­ணங்­களை தயா­ரித்து ஒரு­வ­ருக்கு தூக்குத் தண்­டனை விதிப்­பது அல்­லது தண்­டனை நிறை­வேற்­றப்­பட்டால் அப்­படி ஆவ­ணங்­களைத் தயா­ரித்­தோ­ருக்கும் தூக்குத் தண்­டனை விதிக்­கலாம் என்று கூறுகிறது. அதனால் இது தொடர்பாகவும் ஒரு வழக்கு தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை பெற்றுத்தர முடியும்'' என்றார்.
« PREV
NEXT »

No comments