Latest News

November 30, 2013

கோவில்கள், பாடசாலைகள் இடிக்கப்படுகின்றமை தவறு
by admin - 0

வலி­காமம் வடக்கில் அதி­பா­து­காப்பு வல­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பகு­தி­க­ளி­லுள்ள வீடுகள் படை­யி­னரால் இடித்து அழிக்­கப்­பட்டு வந்­தன. இந்த நிலையில் கடந்த புதன்­கி­ழமை காங்­கே­சன்­துறை எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு அரு­கி­லுள்ள அம்மன் கோயில், பிள்­ளையார் கோயில், நாக­தம்­பிரான் ஆல­யம் மற்றும் நடேஸ்­வ­ராக்­கல்­லூ­ரி என்பன படை­யி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளிவந்­துள்­ளன.
வீடு­களை இடித்த படை­யினர் தற்­போது ஆல­யங்­க­ளையும் பாட­சா­லை­யையும் இடித்து அழித்­துள்­ள­தாக வெளியா­கி­யுள்ள செய்தி தமிழ் மக்­களின் மனங்­களை வேத­னைக்கு உள்­ளா­கி­யுள்­ளது. இந்த ஆல­யங்­களும் பாட­சா­லையும் படை­யி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ளன என்று வலி­காமம் வடக்கு மீள்­கு­டி­யேற்­றக்­கு­ழுவின் தலைவர் எஸ். சஜீவன் ஊட­கங்­க­ளுக்கு தகவல் வழங்­கி­யி­ருந்தார்.
இந்த விடயம் குறித்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் கவ­னத்­திற்கும் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை உண்மை நிலை­யினைக் கண்­ட­றி­வ­தற்­காக வட­மா­காண முத­ல­மைச்சர் காங்­கே­சன்­துறை பகு­திக்கு சென்­றி­ருந்தார். ஆனால் அவரை காங்­கேசன்துறை சீமெந்து தொழிற்­சா­லைக்கு அப்பால் செல்­வ­தற்கு படை­யினர் அனு­ம­திக்­க­வில்லை.
காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சா­லைக்கு முன்னால் உள்ள காவ­ல­ரணில் கட­மை­யி­லி­ருந்த இரா­ணு­வத்­தினர் முத­ல­மைச்­ச­ரையும் அவ­ரது குழு­வி­ன­ரையும் மறித்து திருப்பி அனுப்­பி­யுள்­ளனர். அதி­பா­து­காப்பு வல­யத்­திற்குள் பாது­காப்பு அமைச்சின் அனு­மதி பெற்றால் மட்­டுமே எவ­ரையும் அனு­ம­திக்க முடியும் என்று படை­யினர் முத­ல­மைச்­ச­ரிடம் தெரி­வித்­துள்­ளனர். வட­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் நான் என்றும் கோயில்கள், இடிக்­கப்­ப­டு­வ­தா­கவும், பாட­சாலை தகர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கிடைத்த செய்­தியை அடுத்தே அதன் உண்­மைத்­தன்­மையைப் பார்­வை­யிட தான் வந்­த­தா­கவும் முத­ல­மைச்சர் எடுத்­துக்­கூ­றி­ய­போதும் அதற்கு படை­யினர் செவி­சாய்க்­க­வில்லை. மாறாக அவ­ருக்கு அனு­மதி மறுத்து திருப்பி அனுப்­பி­யுள்­ளனர்.
வட­மா­காண முத­ல­மைச்­சரே கோவில்கள் இடிக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்தி அறிந்து உண்மை நிலையை அறி­வ­தற்கு சென்­ற­போ­திலும், அதற்குக் கூட படை­யினர் அனு­மதி வழங்­க­வில்லை. இதி­லி­ருந்து குடா­நாட்டின் நில­வ­ர­மா­னது எவ்­வ­கையில் அமைந்­துள்­ளது என்­பதை அறிந்­து­கொள்ள முடி­கின்­றது.
வலி­காமம் வடக்குப் பகு­தியில் 6300 ஏக்கர் காணிகள் படை­யி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. பொது­மக்­களின் காணிகள் இவ்­வாறு சுவீ­க­ரிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக நூற்­றுக்­க­ணக்­கான மனுக்கள் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. உயர் நீதி­மன்­றத்தில் இந்த மனுக்கள் தொடர்­பான விசா­ரணை இடம் பெற்று வரு­கின்­றது. இந்த நிலையில் அந்தப் பகு­திக்குள் உள்ள வீடுகள் இடிக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் இந்த விடயம் குறித்து தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ­வுடன் இந்த விடயம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.
அத்­துடன் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்­கவின் கவ­னத்­திற்கும் இந்த விடயம் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து வீடு­களை உடைக்கும் நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கவும், இது தொடர்பில் யாழ். மாவட்ட கட்­ட­ளைத் ­த­ள­பதி மஹிந்த ஹத்­து­ரு­சிங்­க­விற்கு அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சம்­பந்தன் எம்.பி.க்கு ஜ-னா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்க தெரி­வித்­தி­ருந்தார்.
இவ்­வாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சம்­பந்தன் எம்.பி.க்கு அறி­வித்த மறு­நாளே அங்கு வீடுகள் தொடர்ந்தும் இடித்­த­ழிக்­கப்­பட்டு வரு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இது குறித்து கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனும் கவலை வெளியிட்­டி­ருந்தார்.
வலி­காமம் வடக்குப் பகு­தியில் வீடுகள் இடிக்­கப்­ப­டு­கின்ற விட­ய­மா­னது ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னரும் தொடர்ந்து வந்­தது. தற்­போது ஆல­யங்­களும் பாட­சா­லை­யும் இடிக்­கப்­பட்­டுள்­ள­தாக தகவல் வெளியா­கி­யுள்­ளது. படை­யி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட 6300 ஏக்கர் காணி­களில் தமக்­கேற்ற கட்­ட­டங்­க­ளையோ, வீடு­க­ளையோ படை­யினர் அமைக்க முயற்­சிக்­கலாம். அதற்­கா­கவே இந்த வீடு­களும் பாட­சா­லை­களும், கோவில்­களும் உடைக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கின்­றது.
வலி­காமம் வடக்கு பகு­தியில் இருந்த ஆல­யங்கள், இடித்­த­ழிக்­கப்­ப­டு­கின்­றமை இந்து மக்­களின் உணர்வைப் புண்­ப­டுத்தும் செய­லாகும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.
இந்து ஆல­யங்கள் அழிக்­கப்­பட்­ட­தை­யிட்டு இந்து மக்கள் எல்­லோரும் அதிர்ச்­சியும், வேத­னையும் அடை­கின்றோம். பாது­காப்பு வல­யத்தில் என்ன நடக்­கின்­றது என்­பது இருட்­ட­டிப்பு செய்­யப்­ப­டு­வ­துடன் அவ்­வி­டத்­திற்கு சென்று உண்­மையை அறிய முற்­பட்ட போது முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் திருப்பி அனுப்­பப்­பட்­ட­மைக்கு நாம் கண்­ட­னங்­களை தெரி­விக்­கின்றோம் என்று அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் தலைவர் கந்­தையா நீல­கண்டன் விடுத்­துள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
காங்­கே­சன்­துறை எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு அருகில் உள்ள அம்மன் கோவில், பிள்­ளையார் கோவில் மற்றும் நாக­தம்­பி­ரான்­கோவில் ஆகி­யன யுத்­தத்­தின்­போது பாதிப்­புக்­களை சந்­தித்­த­போ­திலும், கட்­டி­டங்கள் அப்­ப­டியே இருந்­துள்­ளன. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இப்­ப­கு­திக்கு சென்ற அம்மன் கோவில் பூச­க­ரான கணே­ச­மூர்த்தி சர்மா இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்றார்.
இந்த ஆல­யங்கள் இடிக்­கப்­பட்­ட­தாக வெளியா­கி­யுள்ள செய்தி தமக்கு பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். உண்­மை­யி­லேயே பாட­சாலை மற்றும் ஆல­யங்கள் இடிக்­கப்­பட்­டி­ருந்தால் அது தவ­றான செயற்­பா­டே­யாகும். பொது­மக்­களின் வீடுகள் இடிக்­கப்­பட்­டு­வரும் நிலையில் அதுவே தமிழ் மக்­களின் மனங்­களில் பெரும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. தற்­போது ஆல­யங்கள் பாட­சாலை என்­பன இடிக்­கப்­ப­டு­கின்­றமை தமிழ் மக்கள் மத்­தியில் ஆறாத துய­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
6300 ஏக்கர் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு விசா­ரணை இடம் பெற்று வரு­கின்­றது. இந்த நிலையில் அந்த காணி­க­ளுக்குள் உள்ள வீடு­க­ளையோ, ஆல­யங்­க­ளையோ அல்­லது பாட­சா­லை­க­ளையோ இடித்து அழிப்­பது என்­பது நீதி­மன்­றத்­தையே அவ­ம­திக்கும் செயற்­பா­டாகும். வழக்­கொன்று நிலு­வையில் உள்ள நிலையில் அதற்­கான தீர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் அந்­தக்­கா­ணி­களில் உள்ள சொத்­துக்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றமை சட்­டத்­திற்கு முர­ணா­ன­தே­யாகும்.
தற்­போது யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அதி­பா­து­காப்பு வல­யங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பொது­மக்­களின் காணிகள் படிப்­ப­டி­யாக மீள வழங்­கப்­பட்டு வரு­வ­தாக பாது­காப்பு அமைச்சு அறி­வித்து வரு­கின்­றது. ஆனாலும் நடை­மு­றையில் எதிர்­மா­றான விட­யங்­களே இடம் பெற்று வரு­கின்­றன.
யாழ்.குடா­நாட்டில் பலாலி இரா­ணுவ முகாமுக்கு அண்டிய பகுதிகளை மட்டும் பாதுகாப்பு வலயமாக வைத்துக் கொண்டு ஏனைய பகுதிகளை விடுவித்து பொதுமக்களை அவர்களது சொந்த காணிகளில் குடியிருக்க அரசாங்கம் அனுமதிக்கவேண்டியது இன்றியமையாததாகும். இதனை விடுத்து 6300 ஏக்கர் காணிகளை சுவீகரித்து அவற்றை இராணுவத் தேவைக்காக பயன்படுத்த முயல்வதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.
எனவே கோவில்கள், பாடசாலைகள், வீடுகள் என்பவற்றை இடித்தழிக்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ா­ஜ­ப­க் ஷவே இந்த விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் உறுதிமொழி வழங்கியிருந்தார். வீடுகளை உடைப்பதை நிறுத்துமாறு அவர் உத்தரவும் பிறப்பித்திருந்தார். எனவே ஜனாதிபதியின் இந்த உத்தரவு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும். பொதுமக்களின் காணிகள் அவர்களிடமே வழங்கப்படவேண்டும்.
« PREV
NEXT »

No comments