Latest News

November 30, 2013

சம்­பள உயர்வு விவ­காரம் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கு தோட்ட சேவை­யாளர் சங்கம் 14நாள் அவ­காசம்
by admin - 0

இலங்கை தோட்ட சேவை­யாளர் சங்­கத்­திற்கும் தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்­கு­மி­டையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட கூட்டு ஒப்­பந்தம் கடந்த செப்டெம்பர் மாதம் முடி­வ­டைந்த நிலையில் புதிய கூட்டு ஒப்­பந்தம் சம்­பந்­த­மாக இரு சுற்றுப் பேச்சு வார்த்தை முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் நடை­பெற்றது.
அப்­பேச்­சு­வார்த்­தையில் நியா­ய­மான சம்­பள உயர்வு கிடைக்­காத கார­ணத்தால் இலங்கை தோட்ட சேவை­யாளர் சங்­கத்தின் பொதுச் செய­லாளர் கிங்ஸ்லி இரா­ஜேந்­திரன் 14நாட்கள் அவ­காசம் கேட்டு முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கும் தொழிற் திணைக்­க­ளத்­திற்கும் கடிதம் அனுப்பி வைத்­துள்ளார்.
இத­னை­ய­டுத்து கடந்த புதன்­கி­ழமை கொழும்­பி­லுள்ள தொழில் திணைக்­க­ளத்தில் இரு சாரா­ரையும் அழைத்து உதவி தொழில் அதி­காரி தலை­மையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது. இறு­தியில் அந்த அதி­காரி பெருந்­தோட்­டத்­து­றைக்கு தீங்கு ஏற்­ப­டாத வண்ணம் இப்பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்­டு­மென்று அறி­வுரை வழங்­கி­ய­தாக சங்­கத்தின் பொதுச் செய­லாளர்
கேச­ரிக்கு தெரி­வித்தார்.
இந்த பேச்சு வார்த்­தையில் இலங்கை தோட்ட சேவை­யாளர் சங்­கத்தின் சார்பில் அதன் தலைவர் தம்­பிக்க ஜய­வர்­தன, பொதுச் செய­லாளர் மற்றும் உப தலை­வர்­களும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் சார்பில் அதி­கா­ரி­களும் கலந்து கொண்­டனர்.
இது தொடர்பில் சங்­கத்தின் பொதுச் செய­லாளர் கூறு­கையில்,
ஐந்து வரு­டத்­திற்கு கைச்­சாத்­தி­டப்­பட்ட கூட்டு ஒப்­பந்தம் கடந்த செப்டெம்பர் மாதத்­துடன் முடி­வ­டைந்து விட்­டபின் புதிய கூட்டு ஒப்­பந்தம் சம்­பந்­த­மாக இரு சுற்றுப் பேச்சு வார்த்தை முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் நடை­பெற்­றது. இருந்த போதிலும் அவற்றில் ஒரு சில கோரிக்­கைகள் மட்­டுமே ஏற்றுக் கொள்­ளப்­பட்­டன. முக்­கி­ய­மான கோரிக்­கை­யான இன்­றைய வாழ்க்கைச் செல­விற்­கேற்ப சம்­பள உயர்­விற்கு அவர்கள் முக்­கிய கவனம் செலுத்­த­வில்லை.
எமது தொழிற்­சங்கம் இப் பேச்­சு­வார்த்தை மீது நம்­பிக்கை வைத்­துள்­ளது. கடந்த 93ஆண்­டுகள் பேச்­சு­வார்த்தை மூலம் பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கண்­டுள்ளோம்.
ஆகவே, தொழிற்­தி­ணைக்­க­ளத்தின் அதி­கா­ரியின் அறிவுரையின்படி தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு திருப்திகரமான சம்பள உயர்வை வழங்குவதுடன் ஏனைய கோரிக்கைகளுக்கும் நல்ல தீர்வினை பெற்றுக் கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டும்.
« PREV
NEXT »

No comments