Latest News

November 30, 2013

கிழக்கில் நிலவும் மேய்ச்சல் தரை பிரச்­சி­னை­க­ளுக்­கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் -பொன். செல்வராசா
by admin - 0

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள மேய்ச்சல் தரைப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் விரைவில் கூட்­ட­மொன்றைக் கூட்­டு­வ­தற்கு காணி மற்றும் காணி அபி­வி­ருத்தி அமைச்சர் ஜனக பண்­டார தென்­னக்கோன் தீர்­மானம் எடுத்­துள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன். செல்­வ­ராசா தெரி­வித்தார்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள இப்­பி­ரச்­சினை குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, அமைச்சர் தென்­னக்கோன் தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் காணி மற்றும் காணி அபி­வி­ருத்தி அமைச்சின் ஆலோ­சனைக் குழுக்­கூட்டம் நடை­பெற்­றது.
இக்­கூட்­டத்தில் காணி மற்றும் காணி அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்சர் சிறி­பால கம்லத், அமைச்சின் செய­லாளர் அசோக பீரிஸ் மற்றும் அமைச்­சர்­கள், பிர­தி­ய­மைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட்­பட பல அதி­கா­ரிகள் கலந்­து­கொண்­டனர்.
இதன்­போது வெளி மாவட்­டத்­தவர் அத்­து­மீறிப் பிர­வே­சித்து மேய்ச்சல் தரை­களில் விவ­சாயம் செய்­துள்­ள­மையால் அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்தி பிரச்­சி­னைக்கு தீர்வு காண அமைச்சர் முன்­வர வேண்டும் என வேண்­டுகொள் விடுத்­த­தா­கவும் தெரி­வித்தார்.
இவற்றை செவி­ம­டுத்த அமைச்சர் மூன்று மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள், அரசாங்க அதிபர்கள் ஆகியோரை கொழும்புக்கு வரவழைத்து அவர்களுடன் ஆராய்ந்து தீர்வு காண்பதாக பதிலளித்தாகவும் அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments