வடபகுதி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் நாட்டுடனோ, இந்திய அரசுடனோ பேசி தீர்க்க முனைவதில்லை. பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்ற கொள்கையையே கடைப்பிடிக்கின்றது. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் பணவீக்கம் குறைவடைந்து பொருளாதாரம் மஹிந்த சிந்தனை அடிப்படையில் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கிலும் அபிவிருத்திகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுகின்றது.
சில எம்.பி.கள் வடக்கில் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென்கின்றார்கள். ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஏனைய மாகாண சபைகளைவிட வட மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய மாநாடு, வர்த்தக மாநாடு நாட்டுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளது.
வடக்கில் அபிவிருத்திக் குழு கூட்டத்தை நடத்தினோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டிருந்தால் வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டிருக்கலாம்.
மோதல்களுக்கு பின்னர் வடக்கில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மன்னார், வவுனியாவிலும் அபிவிருத்திகள் நடைபெறுகிறது.
கூட்டமைப்பினருக்கு அபிவிருத்திகள் தொடர்பாக தெரியும் ஆனால் மக்களை திசை திருப்்பவே மறைக்கின்றனர்.
இந்த பாராளுமன்றத்தில் மஹிந்த சிந்தனைக்கமைய கொள்கைகள் முன்னெடுக் கப்படுகின்றன.
13ஆவது திருத்தத்திற்கு அமைய சத்தியப் பிரமாணம் செய்தவ ர்கள் அதனை பின்பற்ற வேண்டும். பல காலங்களாக தொடர்ந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க முடியாது.
மஹிந்த சிந்தனையை நட த்துவதற்கு மாவட்ட குழுகள் ஊடாக முன்னெடுக்கின்றோம். ஆனால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை.
வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கூட்டமைப்பினர் தமிழக அரசு, இந்திய அரசுடன் பேசித் தீர்க்க முயற்சிக்கவில்லை.
எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழ்வதை கூட்டமைப்பினர் விரும்பவில்லை. பிரச்சினைகளை தீர்க்காது அதனை அதிகரித்து, அரசியல் செய்வதே கூட்டமைப்பினரின் கொள்ளையாகும் ம-ஹிந்த சிந்தனையைப் போன்று கூட்டமைப்பினருக்கும் சிந்தனை உண்டு. அது தான் சு.ம. சிந்தனை, சுத்துமாத்து சிந்தனையாகும்.
எமது மக்கள் தமது சொந்த இடங்களில் வாழ வேண்டும் அதற்காக ஜனாதிபதி, அமைச்சர் பஷில், பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொ ள்வேன்.
No comments
Post a Comment