Latest News

November 30, 2013

இராணுவத்தை என்ன செய்வது அரசாங்கத்திற்கு பாரிய சிக்கல்
by admin - 0

போரின் இறுதி நாட்­களில் மத்­திய அர­சாங்கம் இரா­ணுவ பலத்தை 3 இலட்சம் வரை அதி­க­ரித்­துள்­ளது. போர் முடிந்த பின்­னரும் வடக்கில் இரா­ணு­வத்தை நிறுத்­தி­யுள்­ளதால் பெண்கள் பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வ­துடன் எமது மக்­களின் நிலங்கள் அப­க­ரிக்­கப்­பட்டு தொழில்­வாய்ப்­புக்கள் மறுக்­கப்­பட்­டுள்­ளன என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். காணி­யின்றி தொழி­லின்றி வேறு வழி­யின்­றியே எமது மக்கள் அவுஸ்­ரே­லி­யா­வுக்கு செல்­கின்­றனர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
விஸ்­வ­மடு விவ­சாய பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கத்தின் நவீன அரிசி ஆலையை நேற்று மாலை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
சட்­ட­வி­ரோ­த­மாக எமது மக்கள் அவுஸ்­ரே­லி­யா­வுக்கு செல்­கின்­றமை இன்று இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பெரும் பிணக்­காக உள்­ளது. இவ்­வாறு மக்கள் செல்­வ­தற்கு பல கார­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. முத­லா­வ­தாக வட­மா­காணம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்டில் இருக்­கின்­ற­மை­யினை நான் அவுஸ்­ரே­லிய நாட்டின் பிர­தி­நி­தி­க­ளுக்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். அதா­வது மக்­க­ளு­டைய காணி­களை இரா­ணு­வத்­தினர் அப­க­ரித்­துள்ள நிலையில் மண்ணின் சொந்­தக்­கா­ரர்கள் வாழ இட­மின்றி நிர்க்­க­தி­யான நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இரண்­டா­வ­தாக தென்­ப­குதி மக்­களை வட­ப­கு­திக்குக் கொண்­டு­வந்து குடி­யேற்றி இங்­கி­ருந்த எமது மக்கள் சொந்த இடங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய நிர்ப்­பந்­தங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றார்கள். இதற்கு இரா­ணு­வமும் ஒத்­து­ழைத்து வரு­கின்­றது. மூன்­றா­வ­தாக இப்­ப­கு­தியில் எமது மக்­க­ளுக்கு பாது­காப்பு இல்லை. பெண்கள் வலுக்­கட்­டா­ய­மாக பாலியல் பலாத்­கா­ரங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றார்கள். இத்­த­கைய சம்­ப­வங்கள் யாரால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன எனத் தெரிந்­து­கொண்டும் பொலிஸார் எது­வுமே செய்­ய­மு­டி­யாத நிலையில் இருக்­கின்­றார்கள். நான்­கா­வ­தாக வடக்கில் தொழில்­வாய்ப்­பற்ற நிலை காணப்­ப­டு­கின்­றது. வறு­மையின் பிடிக்குள் சிக்கித் தவிக்­கின்ற எம்­மக்­க­ளுக்கு உரிய தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத நிலையில் நாம் இது­வரை காலமும் இருந்­து­வந்­துள்ளோம்.
எமது மக்­க­ளு­டைய காணி­களில் இரா­ணு­வமும் கடற் படை­யி­னரும் தொழில் செய்து வரு­கின்­றனர். இப்­பி­ர­தே­சத்தில் வர்த்­தக நட­வ­டி­கை­க­ளையும் தேநீர்க் கடை­க­ளையும் இரா­ணு­வத்­தினர் நடத்தி வரு­கின்ற நிலையில் எமது மக்­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்கள் எங்­கி­ருந்து கிடைக்­கப்­போ­கின்­றன?
ஆகவே எமது மக்கள் தொழில் இல்­லாமல், குடி­யி­ருக்க காணிகள் இல்­லாமல், வாழ்­வ­தற்கு வேறு வழி தெரி­யாமல் அவுஸ்­ரே­லி­யா­வுக்கு கடல் கடந்து செல்ல முற்­ப­டு­கின்­றார்கள்.

அவுஸ்­ரே­லி­யா­வுக்குச் சென்றால் சொர்க்­கத்­துக்குச் செல்­லலாம் என்ற எண்­ணத்தை எமது மக்­க­ளுக்கு காட்ட முற்­ப­டு­கின்­றனர். அப்­பாவி மக்­களும் அதனை நம்­பி­வி­டு­கின்­றார்கள். ஆனால் எமது பிர­தே­சத்தில் தொழில்­வாய்ப்­புக்கள் இருக்­கு­மாயின் காணிகள் எல்­லா­வற்­றையும் விற்­று­விட்டு ஏன் வெளி­நாட்­டுக்குச் செல்ல வேண்டும். என­வேதான் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்டும் எனக் கேட்டு வரு­கின்றோம்.
இதனை நான் இரா­ணு­வத்­துக்கு எதி­ராக கூற­வில்லை. மாறாக நாட்டின் அர­சாங்­கத்தின் அர­சியல் பார்­வைக்கு எதி­ரான குர­லா­கவே தெரி­விக்­கின்றேன்.
போரின் இறுதி நாட்­களில் இரா­ணுவ பலத்தை மத்­திய அர­சாங்கம் பல­ம­டங்­காக கூட்­டி­யி­ருந்­தது. இரா­ணு­வத்­தி­னரின் எண்­ணிக்­கையை சுமார் 3 இலட்சம் வரை கூட்­டி­ய­தாக கூறு­கின்­றார்கள். இது எமது சிறிய நாட்­டுக்கு தேவை­யில்­லாத ஒரு விட­ய­மாகும். போர் முடிந்த பின்னர் இந்த இரா­ணு­வத்­தி­னரை என்ன செய்­வது என்ற பாரிய சிக்கல் அர­சாங்­கத்­துக்கு எழுந்­துள்­ளது. அதனால் வடக்கில் இரா­ணு­வத்­தி­னரை நிறுத்­தி­யுள்­ளனர். அவர்­களை வட மாகா­ணத்தில் தரிக்­க­விட்டு அவர்­க­ளு­டைய குடும்­பங்­க­ளையும் இங்கு கொண்­டு­வந்து குடி­யேற்றும் நோக்­கத்­தி­லேயே செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றன. போரின் பின்னர் கூட எமது மக்­க­ளுக்கு ஜன­நா­யக உரி­மைகள் கூட கிடைக்­க­வில்லை. இதனை மாற்­றி­ய­மைக்கும் வகையில் எதிர்­வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வின்போது கவனத்தை ஈர்க்க முனைகின்றோம். இலங்கையில் மிதமிஞ்சியுள்ள இராணுவத்தினரை ஐ.நா. பாதுகாப்பு படையில் இணைப்பதற்கோ அல்லது சமூக மாயபடுத்தவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு நான் கூறுவதால் எனக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம். என்னை அழிப்பதால் நான் தியாகிப் பட்டம் பெற்றுவிடுவேன். மகாத்மா ஆகிவிடுவேன். ஆனால் உண்மைகள் என்றும் அழியாது. அது நிலைத்திருக்கும் என்றார்.
« PREV
NEXT »

No comments