Latest News

November 19, 2013

வடக்கு சென்று விக்கினேஸ்வரனை கமரூன் சந்தித்தமை தனித்தமிழ் தேசத்தின் நிகழ்ச்சி நிரல்
by admin - 0

பொது­ந­ல­வாய மாநாட்டில் விக்கி­னேஸ்­வரன் கலந்­து­கொள்­ளா­மையும் பிரிட்டிஷ் பிர­தமர் கமரூன் வடக்கு சென்று விக்கி­னேஸ்­வ­ரனை சந்­தித்­த­மையும் ‘‘தனித்­தமிழ் தேசம்’’் என்­பதை சர்­வ­தே­சத்­திற்கு பறை­சாற்­று­வ­தற்­காக திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட நிகழ்ச்சி நிர­லாகும் என்று குற்றம் சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் வர்த்­தக, மாநாட்டில் வடக்கில் முத­லீடு செய்­யுங்கள் என்ற கோரிக்­கையை அர­சாங்கம் விடுக்­கா­மையும் ‘‘தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான அரசு’’ என்ற பிர­சா­ரத்­திற்கு உத­வி­யாக அமையும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர். வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்,
டேவிட் கமரூன் பொது­ந­ல­வாய மாநாட்டை இலங்­கைக்கு எதி­ரான மேடை­யாக நன்கு பயன்­ப­டுத்திக் கொண்டார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டில் இலங்­கையை நெருக்­க­டிக்குள் தள்ளி விடு­வ­தற்­கான அனைத்து நிகழ்ச்சி நிரல்­க­ளையும் கொழும்பு மாநாட்டில் முன்­னெ­டுத்­துள்ளார்.
விக்கி­னேஸ்­வரன்
வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வ­ர­னுக்கு பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்து கொள்­ளு­மாறு அர­சாங்கம் அழைப்பு விடுத்தும் அவர் கலந்து கொள்­ள­வில்லை. ஆனால் கமரூன் வடக்கு சென்று விக்கினேஸ்­வ­ரனை சந்­தித்தார்.
இலங்­கையின் சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் வெளி­நாட்டுத் தலை­வ­ரொ­ருவர் வடக்கு சென்ற வர­லாற்று பதி­வா­கவும் இது நிகழ்ந்­துள்­ளது. அத்­தோடு பிரிட்டிஷ் பிர­த­மரின் வட­ப­குதி விஜ­யத்தின் போது காணாமல் போனோரின் பெற்றோர், காணி­களை இழந்­தோரும் என ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­யுள்­ளனர். இது சர்­வ­தேச ஊட­கங்கள் ஊடாக இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான அடக்கு முறைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்ற பிர­சா­ரத்­திற்கு ஏது­வாக அமை­யப்­போ­கின்­றது.
தமிழ் தேசம்
விக்கி­னேஸ்­வரன் மாநாட்டில் கலந்து கொள்­ளா­மையும் கமரூன் வட­ப­குதி சென்று விக்கி­னேஸ்­வ­ரனை சந்­தித்­த­மை­யு­மா­னது தனித்­தமிழ் தேசம் என சர்­வ­தே­சத்­திற்கு பறை சாற்­று­வ­தற்கு ஏது­வாக அமைந்­துள்­ளது. இவை­ய­னைத்தும் கம­ரூனின் திட்­ட­மிட்ட நிகழ்ச்சி நிர­லாகும்.
மக்ரே
சனல் 4 ஊட­க­வி­ய­லா­ள­ரான மக்­ரே­வுக்கு அர­சாங்கம் வீசா வழங்கி அதன் மூலமும் நாட்­டுக்கு எதி­ரான சர்­வ­தேச பிர­சா­ரத்­திற்கு வழி வகுத்­தது. அத்­தோடு மக்­ரேவை வர­வேற்று விருந்­து­ப­சாரம் வழங்கி, இலங்­கைக்கு எதி­ராக செயற்­படும் மங்­கள சம­ர­வீ­ரவும் ஐ.தே.க கட்­சி­யி­னரும் அதனை பயன்­ப­டுத்திக் கொண்­டனர். கமரூன், மக்ரே, விக்கி­னேஸ்­வரன், ஐ.தே.கட்சி அனை­வரும் இலங்­கைக்கு எதி­ராக பொது­ந­ல­வாய மாநாட்­டு மேடையை நன்கு பயன்­ப­டுத்திக் கொண்­டனர்.
அரசாங்கம்
ஆனால் அர­சாங்கம் எமது நாட்­டுக்கு சாத­க­மாக இம்­மா­நாட்டை பயன்­ப­டுத்த தவ­றி­விட்­டது. இம்­மா­நாட்டின் இடையே கலந்து கொண்ட தலை­வர்­க­ளோடு கலந்­தா­லோ­சனை கூட்­டங்­களை நடத்தி இறு­திக்­கட்ட யுத்தம் பொது மக்­களை இரா­ணுவம் பாது­காத்­தமை, மீள குடி­யேற்­றங்கள், வடக்கின் தற்­போ­தைய அபி­வி­ருத்­திகள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். இதன் மூலம் உண்­மையை உல­க­றிய செய்­தி­ருக்க வேண்டும்.
வர்த்­தகம்
ஆனால் அர­சாங்கம் வர்த்­தக மாநாடு, வெளி­நாட்டு முத­லீ­டுகள் தொடர்­பா­கவே அதிக கவனம் செலுத்­தி­யது.
இம் மாநாட்­டி­லா­வது வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் வடக்கில் தொழிற்­சா­லை­களை ஆரம்­பிக்­கலாம் தமது முத­லீ­டு­களை அச்­ச­மின்றி மேற்கொள்ளலாம் என்ற செய்தியை வழங்கியிருக்கலாம்.
ஆனால், அரசாங்கம் இதனையும் தவற விட்டு விட்டது. இதன் மூலமும் தமிழர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற செய்திக்கு சர்வதேசத்திற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுநலவாய மாநாட்டின் நடவடிக்கைகளை கூட்டிக் கழித்தால் இலங்கைக்கு பாரிய நஷ்டமே கிடைத்துள்ளது என்றார்.
« PREV
NEXT »

No comments