யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கான மானிய விலை விதை உருளைக்கிழங்கு விநியோகம் கடந்த 15 திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உருளைக்கிழங்கு விதைகள் வழங்கும் நிகழ்வை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்து வைத்தார். விதை உருளைக்கிழங்கு கோரி உரிய முறையில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு 50 கிலோ நிறை கொண்ட பொதி ஒன்று 6ஆயிரத்து 500 ரூபா விலையில் 2 1/2 அந்தர் வழங்கப்படுகிறது.
இரண்டு அந்த, றெட்லைட்சோடா ரக விதை கிழங்கும் 25 கிலோ கல்வைற் ரக விதை கிழங்குகளும் வழங்கப்பட்டுள்ளன. விதை,உருளைக்கிழங்கு விநியோ கம் திருநெல்வேலியில் உள்ள விதை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க களஞ்சியத்தில் வைத்து மேற்கொள்ளப்படுகின்றன.
விதை உருளைக்கிழங்கு விநியோகத்தில் தவறுகள் முறைகேடுகள் ஏற்படாத வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் என்ற விதிமுறையின் பிரகாரம் சம்பந்தப்பட்டவரின் பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ள குடும்ப அட்டையில் பதிவு செய்து உரியவர்களிடம் நேரடியாக கையளிக்கப்படுகின்றன.
No comments
Post a Comment