Latest News

November 23, 2013

முதல்வர் ஜெயலலிதா தமிழர் கோபத்திற்கு ஆளாக நேரிடும் ஜெயலலிதாவுக்கு நெடுமாறன் எச்சரிக்கை
by admin - 0

முள்­ளி­வாய்க்கால் நினைவு முற்ற சுவரை இடித்த அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுக்­க­விட்டால் முதல்வர் ஜெய­ல­லிதா தமி­ழர்­களின் பெருங்­கோ­பத்­திற்கு ஆளாக வேண்­டி­யி­ருக்கும் என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ. நெடு­மாறன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.
முள்­ளி­வாய்க்கால் நினைவு முற்­றத்தின் சுற்­றுச்­சுவர் இடிக்­கப்­பட்­ட­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து பழ. நெடு­மாறன் உள்­ளிட்டோர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இத­னை­ய­டுத்து, ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டோரை கைது செய்த பொலிஸார், அனை­வ­ரையும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தி திருச்சி சிறையில் அடைத்­தனர்.
இவர்­க­ளுக்கு கடந்த புதன்­கி­ழமை மாலை மதுரை மேல்­நீ­தி ­மன்ற கிளை நிபந்­த­னை­யற்ற பிணை வழங்­கி­யது. இத­னைத்­தொ­டர்ந்து நேற்று காலை அனை­வரும் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யா­னார்கள்.
அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி டம் பேசிய நெடு­மாறன், ``அதி­கா­ரிகள் கூறு­வதைப் போன்று முள்ளிவாய்க்காய் நினைவு முற்றத்திற்காக நாங்கள் நெடுஞ்­சா­லைத்­துறை இடத்தை ஆக்­கி­ர­மித்­துள்ளோம் என்றால் எங்­க­ளுக்கு நோட்டீஸ் கொடுத்து எங்­க­ளிடம் முறைப்­படி பதில் கேட்­டி­ருக்க வேண் டும். ஆனால் அவ்­வாறு எதுவும் செய்­யாமல், இருட்டு வேளையில் திருட்­டுத்­த­ன­மாக பொலி­ஸாரும், அதி­கா­ரி­களும் முற்­றத்தை இடித்து தள்­ளி­யி­ருக்­கி­றார்கள்.
இந்­நி­லையில், சம்­மந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் மீது தமி­ழக அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லை­யெனில், இந்த இடிப்­புக்கு பின்­ன­ணியில் தமி­ழக அரசு இருக்­கி­றது என்­றுதான் அர்த்தம். அதனால், தமிழ் மக்­களின் பெருங்­கோ­பத்­திற்கு ஆளாக வேண்­டி­யி­ருக்கும்.
இத­னி­டையே, பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்­தா­னிய பிர­தமர், இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வாக பேசியதோடு, தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
« PREV
NEXT »

No comments