Latest News

November 21, 2013

யாழ். தமிழ்ச்­சங்கம் நடத்தும் நாவலர் விழா
by admin - 0

யாழ்ப்­பாணத் தமிழ்ச்­சங்கம் நடத்தும் நாவ­லர்­விழா 24ஆம் திகதி காலை 9 மணிக்கு நாவலர் கலா­சார மண்­ட­பத்தில் (நாவலர் வீதி, யாழ்ப்­பாணம்) யாழ்ப்­பாண தமிழ்ச்­சங்க உப­த­லைவர் கலா­நிதி ஆறு திரு­மு­ருகன் தலை­மையில் நடை­பெறும்.
திரு. திரு­மதி. கன­க­சபை அருள்­நேசன் தம்­ப­தியர் மங்­கள விளக்­கேற்­றுவர். திரு­மதி விஜ­ய­தர்­சினி தயா­பரன் தமிழ் தெய்வ வணக்கப் பாடல் பாடுவார். யாழ். தமிழ்ச் சங்க பொரு­ளாளர் ச. லலீசன் வர­வேற்­புரை ஆற்­றுவார். யாழ். தமிழ்ச் சங்க தலைவர் பேரா­சி­ரியர் தி. வேல்­நம்பி தொடக்­க­வு­ரை­யாற்ற பண்­டிதர் கலா­நிதி செ. திரு­நா­வுக்­க­ரசு நாவ­லரும் தமிழ்த் தேசி­யமும் என்னும் தலைப்பில் சிறப்­புரை ஆற்­றுவார்.
யாழ். பல்­க­லைக்­க­ழக இசைத்­துறைத் தலைவர் கலா­நிதி எஸ். நிதர்சனன் நாவலர் இசை­ய­ரங்கில் பாடுவார். நாவ­லரின் கனவை நன­வாக்­கு­வதில் பெரும்­பங்கு வகிப்­பது அவ­ரது சைவப்­ப­ணி­களே என்றும் தமிழ்ப் பணி­களே என்றும் வாதிக்கும் பட்­டி­மன்­றமும் இடம்­பெறும். செல்­வ­ம­னோ­கரன், இ. சர்­வேஸ்­வரா ஆகியோர் சம­யப்­ப­ணி­களே என்றும் கு.பால­சண்­முகன், சி. ரமணன் ஆகியோர் தமிழ்ப் பணிகளே என்றும் வாதிப்பர்.
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா நடுவராக பணிபுரிவார்.
« PREV
NEXT »

No comments