Latest News

November 21, 2013

கமரூனின் கருத்துக்குப் பின்னர் சீனாவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது
by admin - 0

இந்­தி­யா­வுக்கு எதி­ராக அம்­பாந்­தோட்­டையில் சீனாவின் கால­னிக்கு அனு­ம­தி­ய­ளித்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக இன்று ‘சீனா’ பல்டியடித்து மனித உரிமை மீறல் தொடர்­பாக விசா­ரணை நடத்­து­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளது என்று அதி­கா­ரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்பின் தலை­வரும் மத்­திய மாகாண சபை ஐ. தே. கட்சி உறுப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார்.
பொது­பல சேனாவினர் நோர்வே அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அர­சாங்­கத்­தி­னதும் கைக்கூலிகளாவர் என்றும் அவர் குற்றம் சாட்­டினார்.
கொழும்பு – பிளவர் வீதி­யி­லுள்ள அஸாத் சாலியின் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இங்கு அஸாத் சாலி தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
பொது ­ந­ல­வாய மாநாடு இலங்­கையில் நடை­பெ­று­வதன் மூலம் நாட்­டுக்குக் கெள­ரவம் கிடைக்கும் என அர­சாங்கம் மார்த்­தட்­டி­யது. ஆனால் கெள­ர­வத்­திற்கு பதி­லாக மனித உரி­மைகள் மீறல் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென்ற அழுத்­தமே பிரிட்டன் உட்­பட பல்­வேறு நாடுகள் வழங்­கி­யுள்­ளன. இதன் மூலம் நாட்­டுக்கு அப­கீர்த்­தியே ஏற்­பட்­டுள்­ளது.
தலை­வர்கள்
53 நாடு­களில் பெரும்­பா­லான நாடு­களில் தலை­வர்கள் கலந்து கொள்­வார்கள் என்றே வெளி­நாட்­ட­மைச்சர் உட்­பட கசினோ அமைச்சர் என பலர் கூறினர்.
ஆனால் தலை­வர்­களின் வருகை குறைந்து பல்­வேறு நாடு­களின் ஆளு­நர்­களும் தூது­வர்­களும் வெளி­நாட்டு அமைச்­சர்­க­ளுமே கலந்துகொண்­டார்கள். எனவே பொய் கூறி­ய­மைக்­காக வெளி­நாட்டு அமைச்சர் உட்­பட பொய் கூறிய அமைச்­சர்கள் பதவி விலக வேண்டும்.
முத­லீட்­டா­ளர்கள்.
இம் மாநாட்டை நடத்­து­வதன் மூலம் பெரு­ம­ள­வி­லான வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் இங்கு வரு­வார்கள் என தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால், இங்கு முத­லீட்­டா­ளர்கள் வரவும் இல்லை, முத­லீ­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டவும் இல்லை. வந்­தது உலக கசினோ ராஜா­வான ஜேம்ஸ் பெக்கர் மட்­டுமே ஆகும்.
அர­சாங்கம்
கசினோ சூதாட்ட நிலையம் அமைப்­ப­தற்கு அனு­ம­தியும் ஜேம்ஸ் பெக்­க­ருக்கு வழங்­கப்­ப­ட­வில்­லை­யென அர­சாங்கம் கூறு­கி­றது.
ஆனால் இங்கு வந்த ஜேம்ஸ் பெக்கர் கசினோ
நிலையம் அமைப்­ப­தற்­கான வேலைகள் பேர­வா­வியில் ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­ட­தாக தெரி­வித்­துள்ளார். இதனை அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்­திலும் தெரி­விக்­க­வில்லை. மக்­க­ளுக்கும் தெரி­விக்­க­வில்லை இர­க­சி­ய­மாக இதற்­கான உடன்­ப­டிக்­கைகள் செய்து கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்­தியா
இந்­தி­யா­வுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அம்­பாந்­தோட் ­டையில் அனைத்துத் திட்­டங்­களும் சீனா­விடம் கைய­ளிக்­கப்­பட்டு அம்­பாந்­தோட்­டையை சீனக் கால­னி­யாக ஜனா­தி­பதி மாற்­றி­ய­மைத்தார்.
ஆனால், பிரிட்டிஷ் பிர­தமர் கமரூன் இங்கு வந்து மனித உரி­மைகள் மீறல் தொடர்பில் இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென தெரி­வித்த பின்னர் சீனாவும் தனது நிலைப்­பாட்டை மாற்றிக்கொண்டு இலங்கை அர­சாங்கம் மனித உரிமை மீறல் தொடர்பில் சுயா­தீ­ன­மான விசா­ர­ணை­களை நடத்த வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்­ளது. எனவே, பொது­ந­ல­வாய மாநாடு கீர்த்­திக்கு பதி­லாக நாட்­டுக்கு அப­கீர்த்­தி­யையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
பொது­பல சேனா
தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் அனை­வரும் அதி­காரம் பகி­ரப்­பட்ட நாட்டில் ஐக்­கி­ய­மாக வாழ வேண்­டு­மென்றே நாம் வலி­யு­றுத்தி வரு­கிறோம். ஆனால், பொது­பல சேனா அனைத்து இனங்கள் மதங்கள் மத்­தி­யிலும் பிரி­வி­னை­களை ஏற்­ப­டுத்தி நாட்டை துண்டு துண்­டாக பிரிக்கும் திட்­டத்தை முன்­னெ­டுக்­கின்­றது. இவ் அமைப்பு நோர்­வே­யி­லுள்ள அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பெருந் தொகைப் பணத்தை பெற்றுக் கொண்டே பிரிவினையை ஊக்குவிக்கின்றது.
ரணில்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க பொது நலவாய மாநாட்டின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்திருந்தார். இதனை தடுக்கவே அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய சிறிகொத்தா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி ரணிலின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. என்றும் அஸாத்சாலி தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments