Latest News

November 25, 2013

2017 இல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப திட்டம் அமெரிக்க கோடீஸ்வரர் அறிவிப்பு
by admin - 0

அமெ­ரிக்க கோடீஸ்­வ­ர­ரான டெனிஸ்­ரிட்டோ 2017 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தின­ம­ளவில் இரு விண்­வெளிவீரர்­க­ளுடன் செவ்­வாய்க்­கி­ர­கத்­துக்கு விண்­க­ல­மொன்றை ஏவ திட்­ட­மிட்­டுள்ளார்.
அந்த விண்­வெளிவீரர்கள் இரு­வரும் 16 மாத காலத்தில் 800 மில்­லியன் மைல் தூர பய­ணத்தை மேற்­கொண்டு செவ்­வாய்க்­கி­ர­கத்தின் மேற்­ப­ரப்­பி­லி­ருந்து 100 மைல் தூரத்­துக்குள் விண்­க­லத்தில் சஞ்­சாரம் செய்­ய­வுள்­ளனர்.
2018 ஆம் ஆண்டில் செவ்­வாய்க்­கி­ரகம் பூமிக்கு மிகவும் நெருங்கி வரு­கின்ற நிலை­யி­லேயே இந்த விண்­வெளிப் பய­ணத்­துக்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
இவ்­வாறு பூமியும் செவ்­வாயும் ஒன்­றுக்­கொன்று நெருங்கி வரும் அரிய நிகழ்வு ஒவ்­வொரு 15 வரு­டங்­க­ளுக்கும் இரு தடவை நிகழும் அபூர்வ நிகழ்­வாகும்.
இந்­நி­லையில் நியூயோர்க் நகர பொறி­யி­ய­லா­ள­ரான டெனிஸ் ரிட்டோ, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திக­திக்கும் 2018ஆம் ஆண்டு ஜன­வரி 5 ஆம் திக­திக்­கு­மி­டையில் செவ்­வாய்க்­கி­ர­கத்­துக்கு விண்­வெளி வீரர்­க­ளுடன் விண்­க­லத்தை ஏவத் தவ­றினால் அவர் மீளவும் தனது முயற்­சியை மேற்­கொள்ள 2031 ஆம் ஆண்டு வரை காத்­தி­ருக்க நேரிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
2018 ஆம் ஆண்­டிற்குப் பின் 2021 ஆம் ஆண்­ட­ள­விலும் பூமியும் செவ்­வாயும் ஒன்­றை­யொன்று நெருங்கி வரு­கின்ற போதும், இதன்போது இரு கோள்களுக்குமிடையிலான தூரம் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும்.
« PREV
NEXT »

No comments