Latest News

November 25, 2013

மனித பாதத்திலிருந்தும் தொப்புளி­லிருந்தும் பெறப்பட்ட பற்றீரியாவை பயன்படுத்தி பாற்கட்டி விஞ்ஞானிகள் சாதனை
by admin - 0

மனி­தனின் பாதம், அக்குள், தொப்புள் மற்றும் கண்ணீர் என்­ப­வற்­றி­லி­ருந்து பெறப்­பட்ட பற்றீ­ரி­யாவைப் பயன்­ப­டுத்தி பாற்­கட்­டியை தயா­ரித்து விஞ்­ஞா­னிகள் புதுமை படைத்­துள்­ளனர்.
விஞ்­ஞா­னி­யான கிறிஸ்­ரினா அக­பா­கிஸும் வாசனை நிபு­ண­ரான சிஸல் டொலாஸும் 'சுய­மாக தயா­ரிக்­கப்­பட்­டது' என்ற தலைப்­பி­லான 11 பாற்­கட்டி உண­வு­களை உரு­வாக்கி அயர்­லாந்தின் டப்ளின் நகரில் இடம்­பெற்ற உயி­ரியல் கண்­காட்­சியில் காட்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
இந்த பாற்­கட்­டிகள் ஒவ்­வொன்றும் விசே­ட­மான வடிவம், அரிய மணம் என்­ப­வற்றை கொண்­ட­வை­யாகும்.
தோல் நிபு­ணர்கள், விஞ்­ஞா­னிகள், பாற்­கட்டி தயா­ரிப்­பா­ளர்கள் கையாளும் தொழில்நுட்­பத்தை உள்­ள­டக்கி பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து பற்­றீ­ரி­யாக்­களை தான­மாக பெற்று இந்த பாற்­கட்­டிகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.
இந்த பாற்­கட்டி தயா­ரிப்­புகள் உண்­ப­தற்­காக தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவை மனி­த­னுக்கும் பற்­றீ­ரி­யா­வுக்­கு­முள்ள உறவை வெளிப்படுத்துவதை நோக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை உருவாக்கிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


« PREV
NEXT »

No comments