Latest News

November 20, 2013

சர்வதேச விசாரணையினை ஒருபோதும் இலங்கை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை
by admin - 0

இலங்கை விவ­காரம் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை நடத்­து­வ­தனை இலங்கை அர­சாங்கம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இது ஆரம்­பத்தில் இருந்தே இலங்­கை­யிடம் காணப்­பட்ட நிலைப்­பா­டாகும். ஒரு­போதும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இணங்­க­மாட்டோம் என்று பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­சரும் மனித உரி­மைகள் குறித்த ஜனா­தி­ப­தியின் விசேட தூது­வ­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.
பிரிட்டன் பிர­தமர் டேவிட் கமரூன் இலங்கை தொடர்பில் தெரி­வித்­துள்ள கருத்­துக்­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறி­ய­தா­வது,
பிரிட்டன் பிர­தமர் இலங்கை வரு­வ­தற்கு முன்னர் லண்­டனில் 7 க்கும் மேற்­பட்ட தமிழ்க் குழுக்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­விட்டே இலங்கை வந்து இந்தக் கூற்றை வெளி­யிட்டார். அந்­த­வ­கையில் அது பண்­பான விடயம் அல்ல. பிரிட்டன் பிர­தமர் பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்­ளவே இலங்கை வந்தார்.
மாறாக இலங்­கையின் விவ­கா­ரங்­களை கையாள வர­வில்லை. இதனை அன­வைரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். பொது­ந­ல­வா­யத்தை பயன்­ப­டுத்தி பிரிட்டன் பிர­தமர் இலங்­கைக்கு எதி­ராக அர­சியல் செயற்­பாட்­டையே முன்­னெ­டுத்­துள்ளார்.
இலங்கை தற்­போது கால­னித்­துவ நாடு அல்ல என்­ப­தனை டேவிட் கமரூன் மறந்­து­விட்டார். இது கால­னித்­துவ நாடு அல்ல. இலங்கை சுயா­தீன நாடாகும். இங்கு வந்து அவர் எந்­த­வொரு விட­யத்­துக்கும் திகதி நிர்­ணயம் செய்ய முடி­யாது. சுயா­தீ­ன­மான எந்த நாட்­டுக்கும் எவரும் வந்து திகதி நிர்­ணயம் செய்ய முடி­யாது. இது அச்­சு­றுத்­த­லாகும்.
அப்­ப­டி­யானால் பிரிட்டன் குறித்து நாங்­களும் கேள்­வி­களை எழுப்­பலாம். பிரிட்­டனில் எத்­த­னையோ விசா­ர­ணைகள் தாம­த­மா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அப்­ப­டி­யானால் மற்­று­மொரு நாடு பிரிட்­ட­னுக்கு எதி­ராக திகதி நிர்­ணயம் செய்­யலாம்.
இதே­வேளை யுத்த முடிவின் பின்னர் இலங்­கையில் பரந்­து­பட்ட நல்­லி­ணக்­கத்தை அடைய நாங்கள் வேலை செய்­து­வ­ரு­கின்றோம். அதனை குறு­கிய காலத்தில் செய்ய முடி­யாது. அதற்கு காலம் தேவை­யாகும். போருக்குப் பின்­ன­ரான சூழலில் அர­சாங்கம் ஒரு இடத்தில் முடங்கி இருக்­க­வில்லை.
பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இன்னும் செய்­வ­தற்கு பல வேலைத்­திட்­டங்கள் உள்­ளன. இதற்கு காலம் தேவை­யாகும். ஆனால் இவ்­வாறு நாட்­டுக்குள் வந்து அச்­சு­றுத்­தலை மேற்­கொண்டு செல்­வது மிகப்­பெ­ரிய அநீ­தி­யாகும்.
யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான நிலை­மையில் நாங்கள் ஒரு இடத்தில் நின்­று­வி­ட­வில்லை. அந்த வகையில் சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை நடத்­து­வ­தனை இலங்கை அர­சாங்கம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இது ஆரம்­பத்தில் இருந்தே இலங்­கை­யிடம் காணப்­பட்ட நிலைப்­பா­டாகும்.
ஒரு­போதும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இணங்­க­மாட்டோம். எமது உள்­நாட்டு விசா­ரணை ஒன்று இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதனை நிறை­வு­ப­டுத்த எமக்கு காலம் தேவை­யாகும். அந்த பய­ணத்தை செல்வோம். ஆனால் சர்­வ­தேச விசா­ரணையை ஏற்­க­மாட்டோம்.
எமது உள்­நாட்டு விசா­ர­ணையை ஆரம்­பித்­துள்ளோம். அதனை கொண்டு நடத்­து­கின்றோம். அதற்கு காலம் தேவை­யாகும். அந்த விசா­ர­ணையில் கூட சாட்­சிகள் இருந்­தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இறந்தவர்களை மீண்டும் எழுப்பி சாட்சியம் பெற முடியாது. எனினும் விசாரணைக்கு முயற்சிக்கின்றோம். எமது பக்கத்தில் யாராவது தவறுகளை செய்திருந்தால் அதனை அனுமதிக்க மாட்டோம். அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். ஆனால் எதற்கும் சாட்சிகள் இருக்கவேண்டும்.
« PREV
NEXT »

No comments