Latest News

November 20, 2013

நிந்­த­வூர்ப்­ப­கு­தியில் நட­மாடும் மர்­ம­ந­பர்­க­ளினால் அச்சம்
by admin - 0

அம்­பாறை மாவட்­டத்தின் நிந்­தவூர் பிர­தே­சத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு படை­யி­ன­ருக்கும் பொது­மக்­க­ளுக்­கு­மி­டையே ஏற்­பட்ட முறுகல் நிலையை அடுத்து நேற்று முன்­தி­னமும் நேற்றும் அங்கு பதற்­ற­மான சூழல் ஏற்­பட்­டி­ருந்­தது. நேற்று முன்­தினம் திங்­கட்­கிழமை நிந்­த­வூர்ப்­ப­கு­தியில் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. நேற்றும் இங்கு போராட்­டங்கள் இடம் பெற்­றுள்­ளன.
ஹர்த்தால் கார­ண­மாக பாட­சா­லைகள், அர­சாங்க மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், வங்­கிகள், வர்த்­த­க­நி­லை­யங்கள் அனைத்தும் மூடப்­பட்­ட­துடன் போக்­கு­வ­ரத்தும் தடைப்­பட்­டி­ருந்­தது. நேற்றும் வீதி­களை மறித்து மக்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த போது அவர்­களை பொலிஸார் கண்­ணீர்­புகை குண்­டுப்­பி­ர­யோகம் செய்து கலைத்­துள்­ளனர். இதனால் இந்­தப்­ப­கு­தி­களில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வரு­கின்­றது.
கடந்த இரு­வா­ர­கா­ல­மாக நிந்­தவூர் பிர­தே­சத்தில் இரவு வேளை­களில் திருட்டு, மற்றும் கொள்­ளைச்­சம்­ப­வங்கள் இடம் பெற்று வரு­கின்­றன. இந்தச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மர்­ம­ந­பர்கள் சிலரை ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு கடற்­க­ரையில் வைத்து பொது­மக்கள் மடக்­கிப்­பி­டித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­திற்கு வந்த விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் இந்த மர்ம நபர்­களை மீட்டு சென்­றுள்­ள­துடன் வானத்தை நோக்­கியும் நிலத்தை நோக்­கியும் துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்­தி­ருந்­தனர்.
இந்தச் சம்­ப­வத்தைக் கண்­டித்தும் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மர்ம நபர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு கோரி­யுமே பொது­மக்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். கடந்த இரு வாரங்­க­ளாக நிந்­தவூர் பிர­தே­சத்தில் இரவு . வேளை­களில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன. அத்­துடன் வீடு­களில் உறங்கும் மக்­களை அச்­சு­றுத்தும் வகையில் குறித்த மர்ம நபர்கள் வீடுகள் மீது கற்­களை வீசு­வ­துடன் கூரை­களின் ஓடு­களை கழட்டி திரு­டு­வ­தற்கும் முயற்­சித்து வந்­துள்­ளனர்.
இத்­த­கைய சம்­ப­வங்­களை அடுத்து நிந்­தவூர் பிர­தேச செய­ல­கத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைஸல் காசீம் தலை­மையில் கலந்­து­ரை­யாடல் ஒன்று நடத்­தப்­பட்­டது. இந்தக் கலந்­து­ரை­யா­டலில் குறித்த மர்ம நபர்­களை இனங்­காணும் வகையில் விழிப்­புக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்­ட­துடன் இரவு வேளை­களில் மக்­களின் நட­மாட்­டத்தை குறைத்­துக்­கொள்­ளு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டது. இரவு 9 மணிக்குப் பிற்­பாடு எவ­ரேனும் வெளியில் செல்­வ­தானால் ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான ஆவ­ணங்­களை எடுத்துச் செல்ல வேண்­டு­மென்றும் இதில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இது குறித்து பொது­மக்­க­ளுக்கு பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்­கிகள் மூலமும் அறி­விக்­கப்­பட்­டது.
அன்­றைய தினம் இரவு 10 மணி­ய­ளவில் நிந்­தவூர் கடற்­க­ரையில் ஐந்து பேர் கொண்ட குழு தாம் அணிந்­தி­ருந்த சீரு­டை­களை கழற்றி வேறு ஆடை­களை அணிந்­து­கொள்­வ­தற்கு தயா­ரான வேளையில் பொது­மக்கள் அவர்­களை சுற்­றி­வ­ளைத்­துள்­ளனர். அவர்­க­ளது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­மாறு கோரி­ய­போது அவர்கள் அங்­கி­ருந்து தப்பிச் செல்ல முயற்­சித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து கடற்­க­ரையில் பெரு­ம­ள­வானோர் கூடினர். பதற்­ற­மான சூழலும் ஏற்­பட்­டது. அங்கு வந்த விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­துடன் மர்ம நபர்­க­ளையும் பாது­காப்­பாக அழைத்து சென்­றுள்­ளனர்.
இந்தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து ஆத்­திரம் கொண்ட பொது­மக்கள் ஹர்த்தால், கடை­ய­டைப்புப் போராட்­டத்தில் குதித்­தி­ருந்­தனர். குறித்த மர்ம நபர்­களை விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் காப்­பாற்­ற­வேண்­டி­யதன் அவ­சியம் என்ன? என்­பதே தற்­போ­தைய கேள்­வி­யாக உள்­ளது.
இந்தச் சம்­ப­வ­மா­னது திட்­ட­மிட்ட வகையில் படைத்­த­ரப்­பி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­டதா? என்ற சந்­தேகம் பொது­மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. கடந்த இரு வாரங்­க­ளாக நிந்­தவூர் பகு­தியில் இடம் பெற்ற கொள்ளைச் சம்­ப­வங்­க­ளுக்கும் படைத்­த­ரப்­பிற்­கு­மி­டையில் தொடர்பு இருக்­கலாம் என்று பொது­மக்கள் சந்­தே­கிக்­கின்­றனர்.
நிந்­தவூர் பிர­தேத்தில் இடம் பெற்ற குறித்த சம்­பவம் தொடர்பில் விசா­ரணை இடம் பெற்று வரு­வ­தா­கவும், சிவில் உடையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் ஏன் அப்­ப­கு­திக்கு சென்­றனர் என்­பது தொடர்பில் விசா­ரணை முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், பொலிஸ் பேச்­சாளர் அஜித் ரோகண தெரி­வித்­துள்ளார்.
2011 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்­குப்­ப­கு­தி­களில் கிறீஸ் மனி­தர்­களின் அட்­ட­கா­சங்கள் அதி­க­ரித்து காணப்­பட்­டன. கிழக்கில் குறிப்­பாக தமிழ் பகு­தி­களில் வீடு­க­ளுக்குள் இரவு வேளை­களில் புகுந்த மர்ம நபர்கள் பெண்­களை துன்­பு­றுத்தும் செயற்­பாட்­டிலும், அச்­சு­றுத்தும் செயற்­பா­டு­க­ளிலும், ஈடு­பட்­டி­ருந்­தனர்.
இதேபோல், யாழ். குடா­நாட்­டிலும், வன்­னிப்­ப­கு­தி­யிலும் இந்த கிறீஸ்­ம­னி­தர்­களின் செயற்­பா­டா­னது தீவி­ர­ம­டைந்து காணப்­பட்­டது. உடம்பு முழு­வதும் கிறீஸைப் பூசிக்­கொண்டு வீடு­க­ளுக்குள் புகுந்த இந்த மர்ம நபர்கள் மக்­களை குறிப்­பாக பெண்­களை அச்­சு­றுத்தும் வகையில் செயற்­பட்­டனர். இதனால் வடக்கு, கிழக்­குப்­ப­கு­தி­களில் பெரும் அச்­ச­மா­ன­தொரு நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது.
இந்த கிறீஸ் மனி­தர்­களின் செயற்­பாட்­டினால் பல்­வேறு வித­மான போராட்­டங்­களில் தமிழ் மக்கள் ஈடு­பட்­டி­ருந்­தனர். சில பகு­தி­களில் கிறீஸ் மனி­தர்கள் பொது­மக்­களால் மடக்கிப் பிடிக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், அவர்­களை படைத்­த­ரப்­பினர் காப்­பாற்றிச் சென்­றி­ருந்­தனர். இதனால் படைத்­த­ரப்­பி­ன­ருக்கும் கிறீஸ் மனி­தர்­க­ளு­மி­டையில் தொடர்­பி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் அப்­போது எழுந்­தி­ருந்­தது. சில இடங்­களில் கிறீஸ் மனி­தர்­களை பொது­மக்கள் துரத்திச் சென்­ற­போது அவர்கள் முகாம்­க­ளுக்குள் ஓடி­ம­றைந்­த­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் அப்­போது எழுந்­தி­ருந்­தன.
அன்று கிறீஸ் மனி­தர்­களின் அட்­ட­காசம் போலவே தற்­போது நிந்­தவூர் பகு­தியில் மர்ம நபர்கள் கொள்­ளைச்­சம்­ப­வங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இதன் மூலம் மக்­களை அச்­சு­றுத்­து­வதே இவர்­க­ளது நோக்­க­மாக காணப்­ப­டு­கின்­றது. கிறீஸ் மனி­தர்கள் உலாவ விடப்­பட்ட நோக்­கத்­திற்­கா­கவே தற்­போது இந்த மர்ம மனி­தர்­களும் உலாவ விடப்­பட்­டுள்­ள­தா­கவே சந்­தே­கிக்­க­வேண்­டி­யுள்­ளது.
நிந்­தவூர் கடற்­க­ரைப்­ப­கு­தியில் சீருடை அணிந்­த­வர்கள் வந்து தமது உடை­களை மாற்றிக் கொண்டு எங்கோ செல்ல புறப்­பட்­ட­வே­ளை­யி­லேயே பொது­மக்­களால் மடக்கிப் பிடிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளது தொப்பி, மேலா­டைகள் என்­ப­னவும் பொது­மக்­களால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.
இந்தச் சம்­ப­வ­மா­னது ஏதோ ஒரு வகையில் திட்­ட­மிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் செயற்­பா­டுகள் இடம் பெறு­வ­தையே எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது. அன்று தமிழ் மக்­களை அச்­சு­றுத்­து­வ­தற்­காக கிறீஸ் மனி­தர்கள் ஏவி­ வி­டப்­பட்­டனர். தற்­போது முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்தும் வகையில் மர்ம நபர்கள் ஏவி­ வி­டப்­பட்­டனர்.
வடக்கு, கிழக்­குப்­ப­கு­தி­களில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் நோக்­கத்­திலும் இத்­த­கைய மர்ம மனி­தர்கள் ஏவி­வி­டப்­பட்­டி­ருக்­கலாம் என்ற கருத்தும் நில­வு­கி­றது. ஏனெனில் நிந்­த­வூ­ருக்கு அருகில் தமிழ் கிரா­மங்கள் உள்­ளன. அந்த வகையில் முரண்­பா­டு­களை ஏற்படுத்தவும் திட்டமிட்டவகையில் செயற்பாடுகள் இடம் பெற்றிருக்கலாம் என்ற நிலைப்பாடும் மக்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுத கலாசார எண்ணங்கள் தலைதூக்கியுள்ளனவா? ஆயுதங்களை, மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறியும் வகையிலேயே கிறீஸ் மனிதர்கள் திட்டமிடப்பட்டவகையில் நடமாடவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதேபோல் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆயுதக்கலாசார எண்ணம் உள்ளதா என்பதை தட்டிப்பார்ப்பதற்காகவும், இவ்வாறான மர்ம மனிதர்கள் நடமாட விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் மக்களை அச்சுறுத்தும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்படவேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கமும் படைத்தரப்பினரும் மேற்கொள்ளவேண்டியது அவசியமானதாகும்.
« PREV
NEXT »

No comments