இலங்கையை சர்வதேச விசாரணையென்ற தூக்குமேடையில்" நிறுத்தும் மாநாடாகவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாடு அமையப் போகின்றது. எனவே டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடலாகாது எனத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலக.
அரசாங்கம் இப்போதிருந்தே இதற்கு முகம் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியாக தயாராக வேண்டுமென்றும் இல்லாவிட்டால் எப்போதாவது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்ஜியம் உருவாகலாம் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
இது தொடர்பாக கலாநிதி தயான் ஜயதிலக மேலும் தெரிவித்திருப்பதாவது,
பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் அச்சுறுத்தலை நாம் குறைத்து மதிப்பிடவோ அல்லது அதனை கணக்கிலெடுக்காது இருக்கவோ கூடாது.
அவரது கருத்தில் நவநீதம்பிள்ளையை இணைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான முழு ஆதரவையும் பிரிட்டிஷ் வழங்கும் என்றும் கமரூன் தெரிவித்துள்ளார்.
2012, 2013 ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையைப் போன்று 2014 ஆம் ஆண்டு அமையப் போவதில்லை. அது பயங்கரமானதாக அமையும்.
கடந்த ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளானது 2016ஆம் ஆண்டில் முன்வைக்கப்படவுள்ள எம்மை சர்வதேச விசாரணை என்ற தூக்கு மேடையில் நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகள் ஆகும்.
இலங்கை அரசாங்கம் இதற்கு எதிராக தலைகீழாக நின்று அடம் பிடித்தாலும் கருத்துக்களை முன்வைத்தாலும் எதுவுமே நடக்கப் போவதில்லை. மாறாக ஜெனீவாவுக்கே வெற்றி கிடைக்கும். 2012, 2013 இல் வாக்கெடுப்பு தோல்வி கண்டது அப்படியானால் 2014 இல் எவ்வாறு வெல்லமுடியுமென சிலர் கேட்கலாம்.
ஆணைக்குழுவில் எமது நட்பு நாடுகள் இருக்கின்றனவே எனக் கூறலாம். அவ்வாறு அங்கம் வகித்த நிலையிலேயே 2012இல் தோல்வி கண்டோம்.
இம் முயற்சியானது ஜனாதிபதியினதும் மக்களினதும் கண்களில் மண்ணை தூவுவது போலானதாகும்.இவ் ஆணைக்குழுவில் மீண்டும் எமது நட்பு நாடுகளான 6 நாடுகளே அங்கம் வகிக்கின்றன.அதாவது ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், அல்ஜீரியா, சவூதி அரேபியா அந் நாடுகளாகும்.இந் நாடுகள் இருப்பதால் வாக்கெடுப்பில் எம்மால் வெல்ல முடியாது.
வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் மதிப்பீடும் வவுனியாவிற்குத் தெற்கில் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மதிப்பீடு போன்று அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டை மதிப்பிட முடியாது. இத் தேர்தல்களின் முடிவுகள் தோல்வியாகவே அமைந்தது. அது போன்றே மார்ச் மாத மாநாடும் அமையப் போகின்றது.
2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் அரசு டேவிட் மிலிபேண்ட் தலைமையில் நவநீதம்பிள்ளையின் ஒத்துழைப்புடன் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது அக் கூட்டணிக்கு 12 வாக்குகளே கிடைத்தன. இலங்கைக்கு 29 வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் நான்கு வருடங்களுக்கு பிறகு என்ன நடந்துள்ளது.
இலங்கைக்கு நேரடியாகவே விஜயம் செய்த கமரூன் ஜெனீவாவில் இலங்கையை தோல்வியடையச் செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளார். இவ்வாறான நிலைமைக்கு இலங்கை எப்படித் தள்ளப்பட்டது.
எமக்கு நட்பு நாடுகள் உள்ளன எனக் கூறுவது வெறும் எண்ணிக்கை கணக்காகும். கமரூனின் அச்சுறுத்தல் செயற்படத் தொடங்கினால் சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
இம் மாநாட்டில் இலங்கை கலந்துகொள்ளாவிட்டாலும் தனித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும். அத் தீர்மானம் எவ்வாறு அமையும் என்பதை ஏற்கனவே தருஷ்மன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் தூக்கு மேடைக்கான சர்வதேச விசாரணை என்ற தீர்ப்பாகும்.
இத் தீர்ப்புக்கு அமைய உலகின் பலம் பொருந்திய நாடுகள் தத்தமது பாராளுமன்றங்களில் பிரேரணைகளை நிறைவேற்றி பல்வேறுவிதமான பொருளாதார தடைகளை விதிக்க ஆரம்பிக்கும்.
இதனால் மக்கள் கஷ்டங்களுக்கு தள்ளப்படுவார்கள். வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கும். அத்தோடு பொருளாதாரத் தடைகளால் நாட்டு மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் தலைகீழாக மாறும்.
அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, 2009ஆம் ஆண்டு வெற்றி 2012, 2013 ஆண்டுகளில் பெற்ற தோல்விகளையும் பாடமாகக் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் 4 மாதங்களில் ஜெனீவா போராட்டத்திற்கு தீர்க்கமான ராஜதந்திர ரீதியில் புத்திக் கூர்மையுடன் காய் நகர்த்தல்களை அரசாங்கம் நகர்த்த வேண்டும். தயாராக வேண்டும்.
இது தவிர்க்க முடியாத சவாலாகும். இந்த சர்வதேச பொறி முறையால் நாம் பெற்ற வெற்றிக்கும் கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படும்.
இதனால் எப்போதாவது ஒரு நாள் வடக்கில் தனி நாடு உருவாவதற்கு தேவையான சர்வதேச மற்றும் தெற்காசிய வலயத்தின் எழுத்து மூலமான நிபந்தனைகள் தயாராகும் நிலை உருவாகும்.
பொதுநலவாய மாநாடு
நடந்து முடிந்த பொதுநலவாய மாநாடு தொடர்பில் பலவிதமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் இது தொடர்பில் மத்தியஸ்தமான கருத்தையே கூற விரும்புகிறேன்.
ஒரு முறை ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் மாவோ சேதுங் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருந்தார். ஸ்டாலின் நூற்றுக்கு 70 வீதம் சரியானவர் 30 வீதம் பிழையானவர் என்றும் மாவோ சேதுங் கூறியிருந்தார்.
இதேபோன்று, டென்ஷியாவேபென்னும் மாவோ சேதுங் தொடர்பாக இவ்வாறு கூறியிருந்தார். மாவோ சேதுங் 70 வீதம் பிழையானவர். ஆனால் 30வீதம் சரியானவர் எனத் தெரிவித்திருந்தார்.
பொதுநலவாய தலைவர்கள் மாநாடு மற்றும் ஏனைய சிறிய மாநாடுகள் தொடர்பில் எனது விளக்கமும் இதுவே ஆகும்.
வெற்றி
முதலில் இம் மாநாட்டின் வெற்றி தொடர்பில் பார்ப்போமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜ
பக் ஷவின் நடவடிக்கைகள் நாட்டுக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுக்கும் விதத்தில் அமைந்திருந்தது.ஜனாதிபதியின் மாநாட்டு உரை மற்றும் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளும் பெருமைப்படக் கூடிய விதத்தில் அமைந்திருந்தன. நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஜனாதிபதியான தனது பிரதிபிம்பத்தை நிலைநாட்டிக் கொண்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் ஏகாதிபத்திய முயற்சிக்கு மத்தியில் ஜனாதிபதியின் நகர்வுகள், கமரூனிற்கான பதில்கள் அரசியல் ரீதியாக எதிர்பார்ப்பவர்களையும் இணக்கப்பாட்டுக்கு உட்படுத்தியது.
இம் மாநாட்டில் இருதரப்பு பிரிவு காணப்பட்டது. ஆனால் அதனால் இலங்கைக்கு பாதிப்பில்லை. அரச தலைவர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டன.
நமக்கு சாதகமற்ற தருணத்தில் இம் மாநாடு நடைபெற்ற போதும் இலங்கையின் யதார்த்தமான சூழ்நிலை உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, இதில் கலந்துகொண்ட நாடுகளும் தெளிவுபெற்றன. இதனால் சில நாடுகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன. விஷேடமாக, இம் மாநாட்டில் கலந்துகொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீசென் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு வேறு எந்த நாட்டிற்கும் உரிமை கிடையாது.
சிங்கப்பூரில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் ஏனைய மக்களுடன் ஒரே குடும்பத்தை போன்று வாழ்கின்றனர். அதேபோன்று, இலங்கையிலும் சிங்கள, தமிழ் மக்களை ஒரே குடும்பமாக நோக்கவேண்டுமென தெரிவித்தார். இதற்கு முன்பு இவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதில்லை. இதேபோன்று, வேறு பல நாட்டுத் தலைவர்களும் இலங்கையை ஆதரித்தனர். இது எமக்கு கிடைத்த வெற்றியாகும்.
தோல்வி
ஆனால், மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பிலும் நாட்டுத் தலைவர் மற்றும் வடபகுதி தொடர்பில் வெளிக்காட்டிய செய்திகள் சாதகமற்றதாகவே காணப்பட்டன. இது இலங்கையின் எதிராளிகளுக்கு விருந்தாக அமைந்தது. கமரூனின் யாழ். விஜயம் தமிழ் இனவாத சக்திகளின் பரம்பலுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது.
இந்தியாவின் பிரதமர் வருகைதராமை தோல்வியாகும். ஆனால், குர்ஷித்தின் வருகை எமக்கு ஆதரவாக அமைந்தது.மறுபுறம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வெற்றிகிடைத்துள்ளது. இவ்வாறு மாநாட்டை முழுமையாக நோக்கினால் நூற்றுக்கு 70 வீதம் வெற்றியும் 30 வீதம் தோல்வியுமே என்றுதான் கூறவேண்டும்.
அரசாங்கம் இப்போதிருந்தே இதற்கு முகம் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியாக தயாராக வேண்டுமென்றும் இல்லாவிட்டால் எப்போதாவது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்ஜியம் உருவாகலாம் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
இது தொடர்பாக கலாநிதி தயான் ஜயதிலக மேலும் தெரிவித்திருப்பதாவது,
பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் அச்சுறுத்தலை நாம் குறைத்து மதிப்பிடவோ அல்லது அதனை கணக்கிலெடுக்காது இருக்கவோ கூடாது.
அவரது கருத்தில் நவநீதம்பிள்ளையை இணைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான முழு ஆதரவையும் பிரிட்டிஷ் வழங்கும் என்றும் கமரூன் தெரிவித்துள்ளார்.
2012, 2013 ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையைப் போன்று 2014 ஆம் ஆண்டு அமையப் போவதில்லை. அது பயங்கரமானதாக அமையும்.
கடந்த ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளானது 2016ஆம் ஆண்டில் முன்வைக்கப்படவுள்ள எம்மை சர்வதேச விசாரணை என்ற தூக்கு மேடையில் நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகள் ஆகும்.
இலங்கை அரசாங்கம் இதற்கு எதிராக தலைகீழாக நின்று அடம் பிடித்தாலும் கருத்துக்களை முன்வைத்தாலும் எதுவுமே நடக்கப் போவதில்லை. மாறாக ஜெனீவாவுக்கே வெற்றி கிடைக்கும். 2012, 2013 இல் வாக்கெடுப்பு தோல்வி கண்டது அப்படியானால் 2014 இல் எவ்வாறு வெல்லமுடியுமென சிலர் கேட்கலாம்.
ஆணைக்குழுவில் எமது நட்பு நாடுகள் இருக்கின்றனவே எனக் கூறலாம். அவ்வாறு அங்கம் வகித்த நிலையிலேயே 2012இல் தோல்வி கண்டோம்.
இம் முயற்சியானது ஜனாதிபதியினதும் மக்களினதும் கண்களில் மண்ணை தூவுவது போலானதாகும்.இவ் ஆணைக்குழுவில் மீண்டும் எமது நட்பு நாடுகளான 6 நாடுகளே அங்கம் வகிக்கின்றன.அதாவது ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், அல்ஜீரியா, சவூதி அரேபியா அந் நாடுகளாகும்.இந் நாடுகள் இருப்பதால் வாக்கெடுப்பில் எம்மால் வெல்ல முடியாது.
வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் மதிப்பீடும் வவுனியாவிற்குத் தெற்கில் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மதிப்பீடு போன்று அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டை மதிப்பிட முடியாது. இத் தேர்தல்களின் முடிவுகள் தோல்வியாகவே அமைந்தது. அது போன்றே மார்ச் மாத மாநாடும் அமையப் போகின்றது.
2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் அரசு டேவிட் மிலிபேண்ட் தலைமையில் நவநீதம்பிள்ளையின் ஒத்துழைப்புடன் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது அக் கூட்டணிக்கு 12 வாக்குகளே கிடைத்தன. இலங்கைக்கு 29 வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் நான்கு வருடங்களுக்கு பிறகு என்ன நடந்துள்ளது.
இலங்கைக்கு நேரடியாகவே விஜயம் செய்த கமரூன் ஜெனீவாவில் இலங்கையை தோல்வியடையச் செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளார். இவ்வாறான நிலைமைக்கு இலங்கை எப்படித் தள்ளப்பட்டது.
எமக்கு நட்பு நாடுகள் உள்ளன எனக் கூறுவது வெறும் எண்ணிக்கை கணக்காகும். கமரூனின் அச்சுறுத்தல் செயற்படத் தொடங்கினால் சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
இம் மாநாட்டில் இலங்கை கலந்துகொள்ளாவிட்டாலும் தனித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும். அத் தீர்மானம் எவ்வாறு அமையும் என்பதை ஏற்கனவே தருஷ்மன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் தூக்கு மேடைக்கான சர்வதேச விசாரணை என்ற தீர்ப்பாகும்.
இத் தீர்ப்புக்கு அமைய உலகின் பலம் பொருந்திய நாடுகள் தத்தமது பாராளுமன்றங்களில் பிரேரணைகளை நிறைவேற்றி பல்வேறுவிதமான பொருளாதார தடைகளை விதிக்க ஆரம்பிக்கும்.
இதனால் மக்கள் கஷ்டங்களுக்கு தள்ளப்படுவார்கள். வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கும். அத்தோடு பொருளாதாரத் தடைகளால் நாட்டு மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் தலைகீழாக மாறும்.
அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, 2009ஆம் ஆண்டு வெற்றி 2012, 2013 ஆண்டுகளில் பெற்ற தோல்விகளையும் பாடமாகக் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் 4 மாதங்களில் ஜெனீவா போராட்டத்திற்கு தீர்க்கமான ராஜதந்திர ரீதியில் புத்திக் கூர்மையுடன் காய் நகர்த்தல்களை அரசாங்கம் நகர்த்த வேண்டும். தயாராக வேண்டும்.
இது தவிர்க்க முடியாத சவாலாகும். இந்த சர்வதேச பொறி முறையால் நாம் பெற்ற வெற்றிக்கும் கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படும்.
இதனால் எப்போதாவது ஒரு நாள் வடக்கில் தனி நாடு உருவாவதற்கு தேவையான சர்வதேச மற்றும் தெற்காசிய வலயத்தின் எழுத்து மூலமான நிபந்தனைகள் தயாராகும் நிலை உருவாகும்.
பொதுநலவாய மாநாடு
நடந்து முடிந்த பொதுநலவாய மாநாடு தொடர்பில் பலவிதமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் இது தொடர்பில் மத்தியஸ்தமான கருத்தையே கூற விரும்புகிறேன்.
ஒரு முறை ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் மாவோ சேதுங் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருந்தார். ஸ்டாலின் நூற்றுக்கு 70 வீதம் சரியானவர் 30 வீதம் பிழையானவர் என்றும் மாவோ சேதுங் கூறியிருந்தார்.
இதேபோன்று, டென்ஷியாவேபென்னும் மாவோ சேதுங் தொடர்பாக இவ்வாறு கூறியிருந்தார். மாவோ சேதுங் 70 வீதம் பிழையானவர். ஆனால் 30வீதம் சரியானவர் எனத் தெரிவித்திருந்தார்.
பொதுநலவாய தலைவர்கள் மாநாடு மற்றும் ஏனைய சிறிய மாநாடுகள் தொடர்பில் எனது விளக்கமும் இதுவே ஆகும்.
வெற்றி
முதலில் இம் மாநாட்டின் வெற்றி தொடர்பில் பார்ப்போமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜ
பக் ஷவின் நடவடிக்கைகள் நாட்டுக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுக்கும் விதத்தில் அமைந்திருந்தது.ஜனாதிபதியின் மாநாட்டு உரை மற்றும் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளும் பெருமைப்படக் கூடிய விதத்தில் அமைந்திருந்தன. நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஜனாதிபதியான தனது பிரதிபிம்பத்தை நிலைநாட்டிக் கொண்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் ஏகாதிபத்திய முயற்சிக்கு மத்தியில் ஜனாதிபதியின் நகர்வுகள், கமரூனிற்கான பதில்கள் அரசியல் ரீதியாக எதிர்பார்ப்பவர்களையும் இணக்கப்பாட்டுக்கு உட்படுத்தியது.
இம் மாநாட்டில் இருதரப்பு பிரிவு காணப்பட்டது. ஆனால் அதனால் இலங்கைக்கு பாதிப்பில்லை. அரச தலைவர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டன.
நமக்கு சாதகமற்ற தருணத்தில் இம் மாநாடு நடைபெற்ற போதும் இலங்கையின் யதார்த்தமான சூழ்நிலை உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, இதில் கலந்துகொண்ட நாடுகளும் தெளிவுபெற்றன. இதனால் சில நாடுகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன. விஷேடமாக, இம் மாநாட்டில் கலந்துகொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீசென் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு வேறு எந்த நாட்டிற்கும் உரிமை கிடையாது.
சிங்கப்பூரில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் ஏனைய மக்களுடன் ஒரே குடும்பத்தை போன்று வாழ்கின்றனர். அதேபோன்று, இலங்கையிலும் சிங்கள, தமிழ் மக்களை ஒரே குடும்பமாக நோக்கவேண்டுமென தெரிவித்தார். இதற்கு முன்பு இவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதில்லை. இதேபோன்று, வேறு பல நாட்டுத் தலைவர்களும் இலங்கையை ஆதரித்தனர். இது எமக்கு கிடைத்த வெற்றியாகும்.
தோல்வி
ஆனால், மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பிலும் நாட்டுத் தலைவர் மற்றும் வடபகுதி தொடர்பில் வெளிக்காட்டிய செய்திகள் சாதகமற்றதாகவே காணப்பட்டன. இது இலங்கையின் எதிராளிகளுக்கு விருந்தாக அமைந்தது. கமரூனின் யாழ். விஜயம் தமிழ் இனவாத சக்திகளின் பரம்பலுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது.
இந்தியாவின் பிரதமர் வருகைதராமை தோல்வியாகும். ஆனால், குர்ஷித்தின் வருகை எமக்கு ஆதரவாக அமைந்தது.மறுபுறம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வெற்றிகிடைத்துள்ளது. இவ்வாறு மாநாட்டை முழுமையாக நோக்கினால் நூற்றுக்கு 70 வீதம் வெற்றியும் 30 வீதம் தோல்வியுமே என்றுதான் கூறவேண்டும்.
No comments
Post a Comment