Latest News

November 23, 2013

தகனம் செய்­வ­தற்கு சில கணங்­க­ளுக்கு முன் விழித்­தெ­ழுந்த 'இறந்த' குழந்தை
by admin - 0

இறந்து விட்­ட­தாக மருத்­து­வர்­களால் அறி­விக்­கப்­பட்ட குழந்­தை­யொன்று இரு நாட்­களின் பின் மலர்ச்­சா­லையில் உயி­ருடன் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்ட விசித்­திர சம்­பவம் கிழக்கு சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.
கடும் உடல் குறை­பா­டு­களால் பாதிக்­கப்­பட்ட மேற்­படி ஒரு மாதத்­திலும் குறை­வான வய­து­டைய ஆண் குழந்­தைக்கு அன்­ஹுயி மாகாண சிறு­வர்கள் மருத்­து­வ­ம­னையில் கடந்த திங்­கட்­கி­ழமை வரை சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது.
இந்­நி­லையில் அந்த குழந்­தைக்கு வழங்­கப்­பட்டு வந்த மருத்­துவ சிகிச்­சை­களால் பலன் எதுவும் கிட்­டா­ததால், அவற்றை நிறுத்த அதன் பெற்­றோர்கள் இணக்கம் தெரி­வித்தனர்.
மருத்­துவ சிகிச்சை நிறுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அந்தக் குழந்தை இறந்து விட்­ட­தாக மருத்­து­வர்கள் அறி­வித்­தனர்.
இத­னை­ய­டுத்து மலர்ச்­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்கு இரு நாட்­க­ளாக வைக்­கப்­பட்­டி­ருந்த குழந்தை திடீ­ரென விழித்­தெ­ழுந்து அழவும் மலர்ச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.
மேற்­படி குழந்தை தொடர்பில் அலட்­சி­ய­மாக நடந்து கொண்ட குற்­றச்­சாட்டில் அக்­குழந்­தைக்கு சிகிச்­சை­ய­ளித்த சா என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் மருத்­துவர் கைதுசெய்­யப்­பட்­டுள்ளார்.
தகனம் செய்யப்படுவதற்கு சில கணங்கள் முன்பே குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments