இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாரிய பூசணிக்காயை தோணி போல பயன்படுத்தி, துடுப்பு வலித்துச் சென்று அதிவேகமாக 100 மீற்றர் தூரத்தினை கடந்த நபர் என்ற சாதனையை நிகழ்த்தி
யுள்ளார். டிமிட்ரி கலிஸைன் என்ற கலைஞரொருவர் இந்த புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக 270
கி.கி நிறையுடைய பாரிய பூசணிக்காயைப் பயன்படுத்தி சரியாக 2 நிமிடங்களில் 100 மீற்றரினை கடந்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை கின்னஸ் உலக சாதனைக்காகவும் பரீட்சிக்கப்படுகின்றனது. இதற்கு முதல் தான் தோணியில் துடுப்பு வலித்தது இல்லை. எனக்கு அவ்வளவாக நீந்தவும் தெரியாது என டிமிட்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை மற்றுமொரு பாரிய பூசணிக்காயில் எஞ்சின் பொருத்தி 5.6 கி.மீ. தூரத் தினை கடந்து சாதனை படைக்கும் முயற்சியில் டிமிட்ரி ஈடுபடவுள்ளார்
No comments
Post a Comment