HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
October 26, 2013
மாகாண வாகனங்களில் கூட தமிழ் மொழி எழுத்து வைக்க அதிகாரம் அற்ற மாகாண சபை
by
admin
13:56:00
-
0
வடக்கு மாகாண சபையில் மும்மொழிக் கொள்கை திறம்பட நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலக்சுமி தெரிவித்துள்ள நிலையில், வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ வாகனங்களில் தனிச் சிங்களத்தில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ். "ரில்கோ' விடுதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வுக்கு வந்த வடமாகாண சபையின் வாகனங்களில் கூட சிங்களத்தில் மட்டும் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான அறிமுகச் செயலமர்வு யாழ். ரில்கோ விடுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள், மாகாண சபையின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ரணவக்கவும் இதில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய பிரதம செயலாளர், திருமதி ஆர்.விஜயலக்சுமி, வடக்கு மாகாண சபையால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விலாவாரியாக எடுத்துக் கூறினார். இதன்போது மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அவர் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் எல்லாவற்றிலும் மும்மொழியிலான பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருப்பதுடன், சகல இடங்களிலும் மும்மொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் கூறினார். ஆயினும் இந்தச் செயலமர்வுக்கு வந்திருந்த வடக்கு மாகாண சபை அதிகாரிகளின் வாகனங்களில் தனிச் சிங்களத்தில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதுதானா மும்மொழிக் கொள்கையின் நடைமுறைப்படுத்தல் என அங்கு வந்தவர்கள் பேசிக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment