Latest News

October 16, 2013

அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர்களும் பங்கேற்பர்
by admin - 0

அமைச்சரவை கூட்டத்திற்கு சகல மாகாணங்களின் முதலமைச்சர்களை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஒவ்வொரு மாதமும் இறுதிவாரத்தில் நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்திலேயே ஒன்பது மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்கவிருக்கின்றனர். அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு முன்னர் முதலமைச்சர்கள் பங்கேற்ற போதிலும் சில காலங்களுக்கு முன்னர்
அது நிறுத்தப்பட்டது. இம்மாதத்திற்கான இறுதி அமைச்சரவைக்கூட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும். இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் மாகாண முதலமைச்சர்கள் சகலரும் பங்கேற்பர் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன. வடமாகாண மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனும் இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments