முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் இந்த வருடத்திற்கான பெரும்போக செய்கைக்கு நீரின்மையால், தாங்கள் இப்போது மழையை நம்பியிருப்பதாக மாந்தை கிழக்கு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வவுனிக்குளத்தின் கீழ் 35 ஏக்கரில் பெரும்போக செய்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கும் விவசாயிகள், இம்முறை மழையின்மையால் வரணிக்குளத்திலும் நீர் போதாமையுள்ளதாகவும் இதனால் தற்போது பெரும்போக செய்கை மேற்கொள்ள முடியாது தாம் மழையை நம்பியே இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை, கடந்த வருடமும் பெரும்போக செய்கையை மேற்கொண்ட விவசாயிகள், தத்துப்பூச்சியின் தாக்கத்தினால் நட்டம் அடைந்தனர். எனினும், இவ் வருடம் நட்டத்தை எதிர்நோக்காது பெரும்போக செய்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்கு நீர்த்தேவை பெரும் சவாலாக இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments
Post a Comment