Latest News

September 05, 2013

ஜெனீவாவில் பிரபாகரன் படத்துடன் ஒருவர் தீகுளித்துள்ளார்
by admin - 0

ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றலில் இன்று அதிகாலை ஒரு தமிழர் தீக்குளித்துள்ளார் என அறிகிறது. தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களது உருப்படத்தை தாங்கி வந்த அந்த நபர், தன்னை தீயிட்டுள்ளார். அவர் உடலில் தீ பற்றியவேளை தலைவரது படம் எரியக்கூடாது என்பதற்காக அதனை அருகில் வீசியுள்ளார் எனவும் மேலும் அறியப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அவர்மேல் பற்றிய தீயை அணைத்து, அருகில் உள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளார்கள். குறிப்பிட்ட நபர் எரிகாயங்களுடன் இருப்பதாகவும் அவர் இறக்கவில்லை என்றும் சுவிஸ் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா வின் மனித உரிமைச் சபையில் இன்னும் சில நாட்களில் அமர்வுகள் இடம்பெற இருக்கிறது. இதில் நவிப்பிள்ளையின் அறைக்கையும் சமர்பிக்கப்படவுள்ளது. இன் நிலையில் ஐ.நா முன்றலில் நீதிகேட்டு இவர் தீ குளித்திருக்கலாம் என்று அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐ.நா முன்றலில் ஒரு பாரிய உடைந்த நாற்காலி உருவம் உள்ளது. அதற்கு முன்னதாக உள்ள மஞ்சல் நிறக் கோடுபோட்ட இடத்திலேயே குறிப்பிட்ட நபர் தன்னை தீயிட்டுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது. 
« PREV
NEXT »

No comments