(Illford South) தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்
மைக் கபேஷ் (Mike Gapes) அவர்கள்,
பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய
பிரதமர் டேவிட் கமரூன்
கலந்து கொள்வது மிகவும்
கண்டிக்கத்தக்கது என கருத்து தெரிவித்துள்ளார். சில நாடுகளின் அரசுத் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் எமது பிரதமர் கலந்து கொள்ள
முடிவெடுத்திருப்பது கவலைக்குரியது. மனிதஉரிமைகள் தொடர்பாக ஒரு முன்னேற்ற நிலை இலங்கையில் ஏற்பட்டால் மட்டுமே கலந்து கொள்வேன் என்ற நிலையையாவது கடைப்பிடித்திருக்கலாம்
என்றும் தனது கவலையினை அவர்
பகிர்ந்து கொண்டார். மேலும், தமிழ் மக்களுக்கெதிராக இடம் பெற்ற
மனித உரிமை மீறல்களை விசாரிக்க
சுயாதீனமான, சர்வதேச போர்க்குற்ற
விசாரணை ஒன்று அவசியம் எனவும் அதற்காக தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் மைக் கபேஷ் கூறினார். மைக் கபேஷ் பாராளுமன்ற
வெளிநாட்டு விடயங்களுக்கான
தேர்வுக்குழுவின் அங்கத்தவர்
No comments
Post a Comment