Latest News

September 13, 2013

புலிகள் அழிவிற்கு காரணமாக இருந்த இதே அமெரிக்கா - தமிழர்களுக்கு உதவுகிறது???
by Unknown - 2

விடுதலைப் புலிகளை அழிக்க அமெரிக்காவே தமக்கு பெரிதும் உதவியது என்று கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்


நேற்றைய தினம் அவர் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டுவரை புலிகளின் ஆயுதக் கப்பல்களையும், கடலின்மேல் மிதக்கும் ஆயுத தளவாட சேமிப்பு கூடாரங்களையும் அமெரிக்கா தான் தமக்கு துல்லியமாக காட்டித் தந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்


அமெரிக்கா சட்டலைட் உதவியோடு விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அவதானித்து, அவை எங்கே நகர்கிறது என்பது தொடர்பான புள்ளிவிபரங்களை, இலங்கை கடற்படையினருக்கு கொடுத்தது என்று கோட்டபாய வெளிப்படையாக தற்போது தெரிவித்துள்ளார். இல்லை என்றால் நாம் எப்படி புலிகளின் 12 கப்பல்களை அழித்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க , விடுதலைப் புலிகள் 2005ம் ஆண்டு முதல் வடகொரியாவிடம் இருந்து ஆட்டிலறி ஷெல்களை வாங்கத் தொடங்கியுள்ளார்கள் என்றும், அவை இலங்கை இராணுவம் பாவித்த ஆட்டிலறி ஷெல்களை விட சக்திவாய்ந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கை இராணுவம் பாரிய பின்னடைவைச் சந்தித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலங்களில் பல இலங்கை இராணுவத்தினர் உயிரைப் பறித்தது இந்த ஆட்டிலறி ஷெல்களே. விடுதலைப் புலிகள் தமது பரம எதிரியான வடகொரியாவிடம் ஆயுதங்களை பெற்றுக்கொள்கிறார்கள், என்று அறிந்த அமெரிக்கா , உடனடியாக அவர்களுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது என்று பலராலும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்கா புலிகளின் ஆயுதக் கப்பல்களை நோட்டமிட ஆரம்பித்ததாகவும் மேலும் அறியப்படுகிறது

புலிகள் அழிவிற்கு காரணமாக இருந்த இதே அமெரிக்கா தான் இன்று, தமிழர்களுக்கு உதவுகிறது. இலங்கை அரசு போர்குற்றம் இழைத்துவிட்டதாக .நாவில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானத்தையும் கொண்டுவந்துள்ளது. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துக்கொண்ட அமெரிக்கா, மற்றும் அதன் புலனாய்வு அமைப்புகள் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டது என்பதில் எதுவிச சந்தேகமும் இல்லை. ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் தற்போது ஈழத் தமிழர்கள் தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கிறது. தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட்டு தமிழர்களுக்கு ஒரு விடிவு வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து, இலங்கையை அடிபணியவைக்கவே என்று பலரும் கருதுகிறார்கள்.


« PREV
NEXT »

2 comments

Unknown said...

if i tell the truth NO BODY believe me including vivasaie can you remember bush sen telling that the world have a good chance to win the NWO ..?? Its all from Bohernian they were very powerful satanic spiritual beings with talking to dead man about earth future with whom the kings of the earth committed fornication , and the Inhabitan's of the earth its come since after flood including the jhon deed 18 th centary in uk and all evil spirits which sabotaged the God ,,,thy describe themself to humans as powerful GODs But the end for them will be decided in Armageddon, including # 3 # EYE GOD ....?? With 2 wife in his HEAD ...?? THE END IS SOON .''

Unknown said...

The world most evil war is in Vietnam where most dead is Vietnam but most POW are Americans including Sen. John McCain but he still alive so THE MOST EVIL ARE THE MOST LIVE TO DO MORE EVIL ...if Vietnamese were like Sri lankan Army TODAY NO ONE IN AMERICA TO CALL FOR AN WAR TO DAY '' Trust me '' Vietnamese are very kind people ...?