ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது.
குற்றச் செயல் விசாரணை, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு காத்திரமான வகையில் தீர்வு காணாவிட்டால், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
நவனீதம்பிள்ளையின் மதிப்பீடுகள் கவனத்திற் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச் சாட்டுக்கள் குறித்து சர்வதேச தரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.
No comments
Post a Comment